Featured Posts

  • Prev
  • Next

அதிக நேரம உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெடும்- புதிய ஆய்வுத் தகவல்

Posted on : 31-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

ஜுலை29:அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி.

உலகில் காலியாக கிடக்கும் அத்தனை நாற்காலிகளும் நமக்காகவே படைக்கப்பட்டது என்ற எண்ணம் பலருக்கு. பஸ் ஸ்டாப்பில் முக்கால் நிமிஷம் காத்திருக்க வேண்டியிருந்தால்கூட நாற்காலியை தேடுவார்கள். வங்கி, பள்ளி, அரசு அலுவலகங்களில் கேட்கவே வேண்டாம்.

சீட்டைவிட்டு நகராத ‘சீட்கள்’ மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பாக அமெரிக்காவின் கேன்சர் சொசைட்டி சமீபத்தில் ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் கூறப்பட்டிருப்பதாவது: உட்கார்ந்தே இருக்கும் வேலை என்றாலும் ஒரு நாளுக்கு 3 மணி நேரத்துக்கு அதிகமாக உட்காரக் கூடாது.

முத்துப்பேட்டை ஓர் அறிமுகம்’

Posted on : 31-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

முத்துப்பேட்டையில் சுமார் 22,000 மக்கள் வசித்து வருகின்றனர். பேரும்பாலானோர் முஸ்லிம்களே வசித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 12 பள்ளிவாசல்கள், 2 மதரஸாக்கள், 11 பாடசாலைகள், 15 மருத்துவமனைகள், 61 தெருக்கள், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிறப்பு ஊராட்சி மன்ற அலுவலகம், சார்பதிவுகம், பேருந்து நிலையம், காவல் நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், பேருந்து நிலையம், இரயில்வே ஸ்டேசன், வார சந்தை, அரசு பொது நூலகம், இன்டெர்னெட் மையங்கள், தொலை தொடர்பு அலுவலகம் மற்றும் மாற்று மத சகோதரர்களின் வழிபாட்டு தளங்களும் உள்ளன.
இங்குள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமையை விடுமுறையாக கடைபிடித்து வருகின்றனர்.
முத்துப்பேட்டையிலிருந்து சுமார் 125 கி.மீ. தொலைவில் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையமும், 340 கி.மீ. தொலைவில் சென்னை அண்ணா விமான நிலையமும் உள்ளது.
முத்துப்பேட்டையின் பிரதானமாக தொழிலாக இருப்பது மீன் படிப்பது, தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.

கடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது.

Posted on : 31-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

கடைசியில் நம் வாழ்க்கை சிரிப்பாக சிரித்துவிடும் போலிருக்கிறது. பொழுது போக்குவதற்கா? ஆக்குவதற்கா? தமிழன் வாழ்வு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.நகைச்சுவை வேண்டும்தான். ஆனால் வாழ்வே நகைச்சுவையாகி விடக்கூடாது.
மனிதன் மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவன் விலங்குகள் சிந்திப்பதில்லை” என்கிறார்கள். அவை சிரிப்பது இல்லையா அல்லது அவை சிரித்துக் கொள்வது நமக்குத் தெரியவில்லையா, என்பது தெரியவில்லை.

மொத்தத்தில் சிரிப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. கடுகடுப்பான முகத்துடன் சிலர் எப்போதும் இருப்பார்கள். சிலர் மோசமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகம்கூட சிரிக்கும் போது பார்க்க லட்சணமாக இருக்கும்; ஆனால் சிரிக்கத்தான் மாட்டார்கள்!

சிலருக்கு நகைச்சுவையே பிடிக்காது. நகைச்சுவையாக பேசவும் வராது. அடுத்தவர் நகைச்சுவை சொன்னால், அதை ரசித்து சிரிக்கவும் தெரியாது. சிரிப்பவரைப் பார்த்து, “என்ன….? சும்மா பல்லை பல்லைக் காட்டிக் கொண்டு….?” என்று எரிச்சல்படவும் செய்வார்கள். பேசும்போதே நகைச்சுவையாக பேசுபவர்களுடனும் வாய்விட்டு சிரிப்பவர்களுடன் எவரும் மகிழ்ச்சியாக பழகுவார்கள்.

நகைச்சுவையில் ஓர் உளவியல் கருத்து உண்டு. எந்த நகைச்சுவைக்கு ஒருவர் சிரிக்கிறார் என்பதே. அவர் யார் என்பதைக் காட்டிவிடும்!
ஒவ்வொருவர் சிரிக்கும்போதும், சிரிப்புக்கான காரணத்தை அல்லது கருத்தை கூர்ந்து கவனித்தால் இது விளங்கும். எளிமையாக புரிவதற்கு ஒன்று சொல்லலாம்!

குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று கூடி, ஓடியாடி விளையாடும். அப்போது ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டால், மற்றவை விழுந்து விழுந்து சிரிக்கும். குழந்தைப் பருவத்தின் இந்த நிகழ்வை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வயதான பருவத்தில் இருக்கும் ஒருவர் தவறிவிழுந்தால். உடன் இருக்கும் நண்பர்கள் பதறிவிடுவார்கள்.

குழந்தையாக இருந்தபோது நகைச்சுவையாக இருந்த நிகழ்வு பக்குவப்பட்ட நிலையில் வருத்தத்திற்குரியதாகி விடுகிறதல்லவா? அந்த நிலையிலும் ஒருவர் சிரிக்கிறார் என்றால், அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள்?
வாழ்வில் நகைச்சுவை கண்டிப்பாக வேண்டும்தான். ஆனால் வாழ்வே நகைச்சுவையாகி விடக்கூடாது. தமிழன் வாழ்வு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது.

எகிறும் தங்கம், பதறும் பெண்கள்

Posted on : 30-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

சேவியர்

sruthதங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விண்ணைத் தொட்டிருப்பது கல்யாணம் கச்சேரியை நெருங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பெல்லாம் இத்தனை பவுன் நகை என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போதெல்லாம் இத்தனை ரூபாய்க்கு நகை என்றே பேசிக்கொள்கின்றனர். காரணம் நாள் தோறும் எகிறிக் குதிக்கும் தங்கத்தின் விலை.

தங்கத்தின் விலையேற்றத்துக்கு அடுத்த தெரு கடைகள் முதல் சர்வதேச கச்சா எண்ணையின் விலை வரை பல்வேறு காரணங்களை ஆர்வலர்கள் அலசி ஆராய்ந்து பல்வேறு தகவல்களைத் தந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

தங்கம் எதற்கு ? வேறு ஆபரணங்களே இல்லையா ? தங்கம் போட்டால் தான் ஆச்சா ?  என கேள்வி எழுப்பினால் என்ன பதில் கிடைக்கிறது ?

“விற்றால் விலை கிடக்கும், அடகு வைக்கலாம்” என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் தங்க நகைகள் தான் வேண்டும் என்பதில் ஆழமான காரணம் இல்லை.

நகர்ப்புற இளம் வயதினர் தங்கத்தை தூர எறிந்து விட்டு ஃபாஷன் நகைகளுக்கு மாறி வெகு நாட்களாகிறது. பாஷன் நகைகள் நகரின் எல்லா கடைகளிலும் எல்லா நிறங்களிலும், எல்லா வடிவங்களிலும் கிடைக்கிறது. பலர் இதை ஒரு குடிசைத் தொழிலாகவே செய்தும் வருகின்றனர். சில நூறு ரூபாய்களுக்கே காதணி, வளையல், கழுத்துச் சங்கிலி என எல்லாவற்றையும் ஒரே ஸ்டைலில் வாங்கவும் முடியும் என்பது இந்த வகை நகைகளின் சிறப்பம்சம்.

பட்டுப் புடவைகளை எடுத்துப் பாருங்களேன். முன்பெல்லாம் பட்டுப் புடவை உடுத்தாத பெண்களை திருமண வீட்டில் பார்ப்பது அரிது. அரிது என்பதை விட குதிரைக் கொம்பு என்று கூட சொல்லலாம். காரணம் பட்டு கட்டாம போனா கவுரக் குறைச்சல் என நினைத்தது தான். இப்போதெல்லாம் நிலமை மாறிவிட்டது ஃபாஷன் டிசைனர்ஸ் சேலைகள் தான் கண்களில் அதிகமாய் தென்படுகின்றன.

பட்டுப் புடவை செம வெயிட்டுப்பா… அதையெல்லாம் தூக்கிட்டு நடக்க முடியாது” என இளம் பெண்கள் வெளிப்படையாகவே மறுக்கத் துவங்கிவிட்டார்கள்.

எது வசதியாக இருக்கிறதோ, எது மலிவாகக் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தும் போக்கு நிச்சயம் வரவேற்கத் தக்கது. காரணம் ஆடை, நகை எல்லாமே நமக்கு ஆனந்தம் தருவனவாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை வருத்துபவையாக இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து.

பிளாட்டினம், இரிடியம், பல்லாடியம், ருத்தேனியம், ரோடியம் மற்றும் ஓஸ்மியம் என பல்வேறு நகைகள் இருந்தாலும் அவையெல்லாம் தங்கத்தை விட அதிக விலை என்பதால் அவற்றையும் ஒதுக்கியே வைக்க வேண்டியிருக்கிறது.

சரி தங்கம் இல்லையேல் அப்படி என்னதான் வாங்கலாம் ?

வடஇந்திய சுற்றுலா-3

Posted on : 29-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

by கிளியனூர் இஸ்மத்

ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹாலுக்கு இரண்டரை கி.மீ தூரம்.அங்கிருந்து தாஜ்மஹாலுக்குச் செல்ல குதிரை வண்டி ஓட்டக வண்டி சைக்கிள் ரிக்ஷா ஆட்டோ இப்படி பலவிதமான வாகனங்கள் நிற்கின்றன.

யமுனை ஆற்றங் கரையோரம் தாஜ்மஹால் அமைந்திருக்கிறது.
தாஜ்மஹாலுக்குள் செல்ல இரு வழி அமைத்து சோதனைகள் செய்து போலிஸ்காரர்கள் ஒவ்வொரு பார்வையாளர்களையும் அனுப்புகிறார்கள் தினமும் காதல் சின்னத்தை காண்பதற்கு பலஆயிரம் காதலர்கள் வந்துக்கொண்டு இருக்கிறார்கள்.கூட்டம் அதிகமாகவே இருந்தது.சோதனைக்கூடத்திற்கு முன் பலவிதமான கடைகள் அமைத்து பலபொருட்களை விற்பனை செய்கிறார்கள் சொன்ன விலைக்கு அங்கு வாங்கக்கூடாது பொருட்கள் மட்டும் அல்ல தங்கும் விடுதிக்கும் தான்.
எல்லாமே பேரம் பேசப்படுமளவிற்கு தான் விலைகள் வைத்துள்ளார்கள்.பேச்சு திறமை உள்ளவர்களுக்கு ஆக்ரா சரியான சவாலாக இருக்கும்.

நவீன இயந்திரங்கள் வைத்து நம் உடம்பில் ஏதேனும் தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறோமா என்பதை கண்டறிய வைத்துள்ளார்கள் அது இருந்தாலும் அதையும் நம்பாமல் நம் உடம்பை தடவியும் பார்க்கிறார்கள்.

வெற்றிலைப் பாக்கு சுவிங்கம் பான் வாயில் போட்டு மென்று துப்பக்கூடிய பொருட்களை தடைசெய்துள்ளார்கள்.அதே போன்று பெண்களின் கை பேக்குகளை சோதனை செய்கிறார்கள். எனது நண்பர் ஹாஜாவிடம் ஆறு சுவிங்கம் பாக்ஸ் இருந்தது அதை அனுமதிக்கவில்லை நம் கையில் கொடுத்து நீங்களே எரிந்து விடுங்கள் என்று கொடுத்தபோது எரிவதற்கு மனமின்றி வெளியில் சென்று யாரிடமோ கொடுத்துவிட்டு வந்தார்.

இவைகளை யெல்லாம் எரிந்துவிட்டு காதல் சின்னத்தை காண்பதற்கு உள்ளே நுழைந்தால் பிரமாண்டமான நூழைவாயில் தாஜ்மஹாலை காண்பதற்கு தடையாக நிற்கிறது.இது ஷாஜகானின் பிரித்தியோக மூளை தனது காதல் சின்னத்தை வெறும் கட்டிடமாக அவர் நினைக்கவில்லை அந்த மஹாலில் மும்தாஜ் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பதைப்போன்ற உணர்வுக் கொண்டிருந்துள்ளார்.

மூன்று பிரமாண்ட நுழைவாயிழை பாதுக்காவலாக அமைத்து நடுவில் தனது காதல் சின்னத்தை உருவாக்கி இருக்கிறார்.கட்டிடக் கலையில் மிகவும் ஆர்வம் கொண்டவராக ஷாஜகான் திகழ்ந்துள்ளார்.அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் முகலாய கலை நயமிக்கதாய் உச்சநிலை அடைந்துள்ளதாக சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஷாஜகானின் கட்டிடக்கலை படைப்புகள் தாஜ்மஹால் மட்டுமல்ல ஏராளம்.
இன்னும் அவருடைய கலைகளில் மிச்சமிருப்பவை டெல்லியிலுள்ள செங்கோட்டை ஜூம்மா மஸ்ஜித் லாகூரின் ஷாலிமார் தோட்டங்கள் லாகூர் கோட்டையின் சில பிரிவுகள் (ஷீஸ் மஹால் மற்றும் நௌலாகா பெவிலியன் போன்றவை) அவருடைய தந்தையின் அடக்கஸ்தளம் இன்னும் ஆக்ராகோட்டையின் உட்புற வடிவங்களை தனது 16 வுத வயதிலேயே தனது இஸ்டத்திற்கு மாற்றங்களை செய்து தனது தந்தையிடம் நற்பெயரைப் பெற்றவர் என்பது வரலாறு.

வணிகர் சங்க பேரமைப்பு உதயம்

Posted on : 28-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கலைக்கப்பட்டு புதிதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.வணிகர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் பேரவையின் தலைவர் வெள்ளையன் நீக்கப்பட்டதாகவும் இன்று காமராஜ் அரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.புதிய அமைப்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மாநிலத் தலைவராக ஏ.எம்.விக்கிரமராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக கே.மோகன், பொருளாளராக அரிகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*தற்காலிகமாக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட த.வெள்ளையன் பேரவை விதிகளுக்கும் வணிகர்களின் நலனுக்கும் முற்றிலும் முரணாக தொடர்ந்து செயல்பட்ட காரணத்தால் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்குவது என ஏகமனதாக பொதுக்குழு தீர்மானிக்கிறது.

கவிதை கேளுங்கள்! by அந்நஜாத்

Posted on : 28-07-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM), கவிதைகள் (POEM)

Tags:

0

M.S. கமாலுத்தீன், பெங்களூர்

கவிதையை மனிதன் நீண்ட நெடுங்காலமாகவே ரசித்து வருகிறான். மொழி, எழுத்து இலக்கணம்,இவை தோன்றிய காலத்திலிருந்தே மனிதனுக்கும் கவிதைக்கும் நெருங்கிய உறவுண்டு. கவிதைகள் மனித வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது; கவிஞர்களும் அப்படியே.

இவ்வுலகை ஆண்ட அரசர்கள் கவிதைக்கு மயங்கி தான் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியை அல்லது ஒரு ஊரை கவிஞர்களுக்குத் தானமாக கொடுத்திருக்கிறார்கள். அநேக அரசர்கள் மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்கி தங்களை வள்ளலாகக் காட்டிக் கொண்டார்கள். அப்டி என்னதான் கவிதையில் இருக்கிறது என்றால் ஒன்றுமே இல்லை என்பது தான் பதில். கவிதை என்பது ஒரு விஷயத்தை உவமைகளுடன் வார்த்தை ஜாலங்களுடன் சொல்வதுதான்.

கவிதையை  இஸ்லாம் வெறுக்கிறது; கவிஞர்களை இஸ்லாம் வழிகேடர்கள் என்ற சொல்கிறது; கவிதைக்கு இஸ்லாத்தில் இடமே இல்லை என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. கவிஞர்களைப் பற்றி அல்லாஹ் சொல்வதைப் பார்ப்போம்.

“இன்னும் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்களே பின்பற்றுகிறார்கள்” (அல்குர்ஆன் 26: 224) மேலும்பார்க்க 26:225, 226,36:69) யாரை அல்லாஹ் வழிகேடர்கள் என்று சொல்கிறான்? எப்படிப்பட்ட கவிதைகளை இஸ்லாம் அனுமதிக்ககிறது? மேலே உள்ளகுற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஹதீஸ் வெளிச்சத்தில் தெளிவுபெறுவோம்.

நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிக்கொண்டிந்த ஆரம்பகாலத்திலும் சரி, இஸ்லாம் ஓரளவு வளர்ந்து மக்கள் அணி அணியாக இணைந்து கொண்டிருந்து போதும் சரி, குறைஷிகளின் கவிதை கலந்த குற்றசாட்டுக்கு, கவிதை மூலமே தங்கள் ஆஸ்தான கவிஞர்கள் மூலம் பதில் சொல்வார்கள்.” நபியின் கவிஞர்” என்ற பெயரும் அவர்களுக்கு இருந்தது. உதாரணமாக:

கஅப் இப்னுமாலிக்(ரழி) – போர்ப்பரணி பாடி எதிரிகளை அச்சுறுத்துவார்கள்.

ஹஸ்ஸான் இப்னுஸாபித்(ரழி) – எதிரிகளின் பாரம்பரியமான இலக்குகளைப் பழித்துப் பாடுவார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரழி) – நிராகரிப்பைச் சாடி கவிதை பாடுவார்கள்.

இதே போல் பெண்களிலும் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வது என்றால், ஸஃபிய்யாபின்த் அப்துல் முத்தலிப்(ரழி), கன்ஸா பின்த் அமர்(ரழி) இவர்களைச் சொல்லலாம்.

உண்மையை சொல்லக் கூடிய, மிகைப் படுத்தாத – வரம்புமீறாத கவிதைகளை இஸ்லாம் வரவேற்கவே செய்கிறது. வரம்பு மீறும் போது நபி(ஸல்) அவர்கள் திருத்தியதை இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்:

என் கணவருடன் உறவைத் துவக்கிய காலை நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். நீ இப்போது எனக்கு எவ்வளவு அருகில் அமர்ந்து இருக்கிறாயோ அவ்வளவு பக்கத்தில் அமர்ந்தார்கள். அப்போது எங்களின் சிறுமிகள் தஃப்கள் அடித்தனர்.பத்ருப் போரில் கொல்லப்பட்ட என் முன்னோர்களின் புகழைப் பாடலானார்கள். அப்போது ஒரு பெண்மணி “நாளை நடப்பதை அறியக்கூடிய நபி எங்களிடம் இருக்கிறார்” என்று கவிதை பாடினார்.அவரிடம் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு பாடுவதைவிட்டும் வாயை மூடு; இதற்க முன்பு பாடியதைப்பாடு எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருபிய்  பின்து மு அவ்வித் (ரழி) நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 1096) இந்த புகாரீயில் சின்ன சின்ன மாற்றங்களுடன் இடம் பெற்று உள்ளது.

எதைப்பற்றி விமர்சிப்பதாக இருந்தாலும் அதைப்பற்றி ஞானம் வேண்டும். கவிதையைப்பற்றி விமர்சிக்க கவிதை ஞானம் வேண்டும் இருந்ததா? இந்த கேள்விக்கு அவர்களே பதில் சொல்கிறார்கள்.

“கவிதையிலும் ஞானம் உண்டு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் (ரழி) அப்துல்லாஹ் (ரழி) நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 3001, 3002), அபூதாவூத் இப்னுமாஜ்ஜா.

கவிதையில் ஞானமுடைய நபி(ஸல்) அவர்களே பல சந்தர்பங்களில் வசன கவிதையில் பேசியதை ஹதீஸ்களில் காணமுடிகிறது.

ஒரு தடவை நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தபொழுது ஒரு கல் அவர்களின் மீது வந்து விழந்தது. அதன் காரணமாக அவர்களின் விரல் இரத்தமயமாகி விட்டது. அப்போது அவர்கள் ” நீ இரத்த (வெள்ள)த்தில் மாறிவிட்ட விரலேயன்றி வேறுயாதுமில்லை. அன்றி அல்லாஹ்வுடைய வழியில் இந்த வேதனை உனக்குக்கிடைத்துள்ளது” என்று (இரண்டு வரிவசன) கவிதை பாடினார்கள்.

அறிவிப்பவர் : ஜுன்துப்இப்னு அப்துல்லாஹ்(ரழ)

நூல்கள் : புகாரீ, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் பாத்திமாவின இல்லத்திற்கு வந்தபோது அலீ(ரழி) யைக் காணவில்லை. “உன் பெரியதந்தையின் மகன் எங்கே? என்று பாத்திமாவிடம் கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது. என்னிடம் தங்கவில்லை” என்று பாத்திமா(ரழி) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ” அவர் எங்கே என்று பார்த்துவாரும்!” என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் திரும்பி வந்து “அலீ பள்ளி வாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார்” என்று பதில் சொன்னார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தபோது அலீ(ரழி) தமது மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டிவிட்டு ” மண்ணின் தந்தையே எழும்; மண்ணின் தந்தையே எழும்!!” என (வசன கவிதையில்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅது (ரழி),

நூல்: புகாரீ (ஹதீஸ் எண் 441)

நபி(ஸல்) அவர்களே பள்ளியில் மேடை அமைத்துக்  கொடுத்து கவிதை பாடசொன்ன சம்பவம் இதோ:

“நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸானுக்காக பள்ளியில் ஒரு மேடையை அமைப்பார்கள். அதன் மேல் ஹஸ்ஸான்(ரழி) நின்று நபி(ஸல்) அவர்களைப் புகழ்வார். அல்லது அவர்கள்மேல் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு அளிப்பார்” அல்லாஹ்வின் தூதரைப் புகழும்வரை அல்லது அல்லாஹ்வின் தூதர் சார்பில் மறுப்பளிக்கும் வரை ஹஸ்ஸானுக்கு அல்லாஹ் குஹுல்குதஸ் (ஜிப்ரயீல்) மூலம் பலப்படுத்து கிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி),

நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 3003, 3004)

நபி(ஸல்) அவர்கள் கவிதையை அனுமதித்ததற்கு காரணம் வார்த்தையில் இருக்கும் வலிமைதான். சுடு சொற்களை எதிரிகளின் மீது வீசும்போது வார்த்தைகள் வதைக்கும். வாழ்நாள் முழுவதும், தமிழில் கூட சொல்வார்கள் : தீயினால் சுட்டபுண் ஆறிவிடும், நாவினால் சுட்டபுண் ஆறுவதில்லை என்று . நபி(ஸல்) அவர்கள் உம்ரதுல்களாவை நிறைவேற்ற மக்கா சென்ற போது அவர்களின் முன்னே கஃபுபின் மாலிக் பின் வரும் கவிதையை பாடியபடி நடந்து சென்றார். காஃபிர்களின் மைந்தர்களே! இவரை (நபியை) இவரது பாதையில் விட்டு விடுங்கள்! மண்டை ஓட்டை அதன் இடத்திலிருந்து நீக்கும் வகையில் இவரது சட்டங்களினால் இன்று உங்களை தாக்குவோம்; அத்தாக்குதல் உற்ற நண்பனையும் மறக்கச் செய்து விடும். அப்போது உமர்(ரழி) அவர்கள் மாலிக்கின் மகனே! அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் அல்லாஹ்வின் ஹரம் (புனிதபூமி) எல்லையில் ்கவிதை பாடுகிறீரா? என்று  கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “உமரே! அவரைவிட்டு விடும்; அக்கவிதை அம்பை விட வேகமாக அவர்களைத் தாக்கும்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்ு (ரழி),

நூல்: திர்மிதீ (ஹதீஸ் எண் 3005)

நபி(ஸல்) அவர்கள் பல சந்தர்பங்களில் கவிதைகளை மேற்கோள்காட்டி உள்ளார்கள். உதாரனத்துக்கு இரண்டு ஹதீஸ்களைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் கவிதைகளை மேற்கோள் காட்டுவார்கள்? என்று ஆயிஷா(ரழி)யிடம் கேட்டேன். அதற்கவர்கள் அப்துல்லாஹ் பின் ரவாஹாவின் கவிதையை மேற்கோள் காட்டுவார்கள்.” நீ யாருக்கு உணவளிக்கவில்லையோ அவன் உன்னிடம் செய்திகளைக் கொண்டு வருவான்” என்ற கவிதையை கூறுவார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி),

நூல்: திரிமிதீ (ஹதீஸ் எண் 3006)

“அல்லாஹ்வைத் தவிர அனைத்தும் அழிந்துவிடும்” என்ற லபீத் எனும் கவிஞரின் கூற்றே அரபியரின் பேச்சுக்களில் சிறந்ததாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி),

நூல்: புகாரீ, முஸ்லிம், திரிமிதீ (ஹதீஸ் எண் 3007)

ஆக்டோபஸ் ரூபத்தில் வந்த அறியாமை.

Posted on : 27-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

உலகில் மனிதர்களுக்கு அறியாமை எந்தெந்த வழிகளில்லெல்லாம் வந்து அவர்களை ஆட்சி செய்யும் என்பதற்கு இது ஓர் நல்ல உதாரணம்.
நடந்து முடிந்த உலக்கோப்பை கால்பந்துப்போட்டியின் பரபர‌ப்பான இறுதி ஆட்டத்தில் மோதிய இரண்டு அணிகளில் கடைசியாக வென்று உலகக்கோப்பையை தட்டிச்சென்ற ஸ்பைன் அணியை விட இன்று உலகில் பிரபல்யமாக பேசப்பட்டு வரும் ஜெர்மனிய மியூசியத்தில் உள்ள ஆக்டோபஸ் என்னும் கடல் பிராணி (அதாங்கெ நம்மூரு கடைத்தெருவுலெ விற்கும் கணவா மாதிரி இருக்குமே அதே தான்).
காரணம் அந்த ஆக்டோபஸ் கடல் பிராணியானது இன்று நடக்கும் உலக கால்பந்து ஆட்டத்தில் மோதும் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெரும் என்று கண்ணாடிப்பெட்டிக்குள் இறக்கி வைக்கப்பட்டுள்ள அவ்விரு நாட்டின் கொடிகளில் அது எதை தன் கால்களால் (கால் எது? கை எது? என்று நம்மால் துல்லியமாக சொல்ல முடியாத‌ கன்ஃபூஸ் ஆன ஒரு பிராணி) எந்த நாட்டுக்கொடியைப் பற்றிப்பிடிக்கின்றதோ அந்த நாடு அன்று வெற்றி பெரும் என்பதே. அது போல் அரையிறுதி ஆட்டங்களில் பார்க்கப்பட்டு அதன் முடியும் துல்லியமானதாக கருதப்பட்டது.

அதிராம்பட்டினத் துறைமுகம்:முனைவர் ராஜா முஹம்மது

Posted on : 26-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ராஜா முஹம்மது அவர்கள் அதிரை பற்றி ஆய்வு செய்தளித்த குறிப்புகள்:
(in Chronological Order)

அதிராம்பட்டினத்தில் சீன நாட்டு வணிகர்கள்: முனைவர் ராஜா முஹம்மது.
அவர்கள் தொகுப்பின் முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி…

* அதிராம்பட்டினத் துறைமுகத்திலிருந்து மரைக்காயக் கப்பல் வணிகர்கள் முத்துப்பேட்டை, நகப்பட்டினம், கீழக்கரை, தொண்டி, காரைக்கால், காயல்பட்டினம் ஆகிய துறைமுக வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

இந்திய வடமாநில சுற்றுலா– 1

Posted on : 26-07-2010 | By : mohamedali | In : வாழ்க்கை(Life and Works)

0


இரவு 10 மணிக்கு சென்னை சென்டரலிருந்து டெல்லி செல்வதற்கு தினமும் தமிழ்நாடு விரைவு இரயில் தாயராக இருக்கிறது.முன்பதிவு செய்பவர்கள் ஒருமாதம் முன்பே செய்துக் கொள்வது நலம்.

எனது மற்றும் நண்பரின் குடும்பம் குழந்தைகளுடன் ஒன்பது நபர்கள் ஆக்ரா, டெல்லி, ஜெய்பூர் மற்றும் அஜ்மீர் சுற்றுவதற்கு புறப்பட்டோம்.குளிர்சாதன வசதி கொண்ட இரயில் பெட்டியில் முன்பதிவு இணையத்தின் மூலம் செய்திருந்ததால் கணினி அது இஸ்டத்துக்கு இருக்கையை தேர்வுச் செய்திருந்தது.இருக்கையை நம் விருப்பத்திற்கு தேர்வுசெய்யும் வாய்ப்பை இன்னும் இந்திய இரயிவே மக்களுக்கு வழங்கவில்லை என நினைக்கிறேன்.

இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்திருந்ததால் மேல் இருக்கை இரண்டும் ஜன்னலோர இருக்கைகள் மேலும் கீழும் எங்களுக்கு வழங்கி இருந்தார்கள்.

எங்களுடைய வசதிக்கு அமர்வதற்கு பயணிகளிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களும் விட்டுக் கொடுத்து நாங்கள் தந்த இருக்கையில் அமர்ந்து எங்களை சந்தோசப்படுத்தினார்கள்.

விட்டுக்கொடுக்கும் மனோநிலை இந்தியர்களான நம்மிடம் நிறையவே இருக்கிறது. முகந்தெரியாத பழக்கமே இல்லாதவர்களுக்கு நாம் விட்டுக் கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துகிறோம் அதுவே நம் குடும்பத்தார்களுக்கு நம்மை விட்டுக் கொடுத்தால் நம்வாழ்க்கை அளவிலா ஆனந்தத்தை அடையும் என்பதை நாம் தெரிந்திருந்தாலும் மனம் ஈகோ என்ற கவசத்தை தலையில் மாட்டிக்கொண்டு கழட்டத்தெரியாமல் திணருகிறோம் என்பதானே உண்மை.

எங்கள் பயணம் இனிமையாக அமைவதற்கு இரயில் பயண இருக்கைள் எங்களின் விருப்பத்திற்கு மாற்றிக் கொண்டதால் குழந்தைகள் குதுகூலம் அடைந்தார்கள்.

முதலில் நாங்கள் சுற்றவேண்டிய இடம் ஆக்ரா என தீர்மானித்தோம். சென்னையிலிருந்து ஆக்ராவிற்கு சுமார் 1980 கி.மீ தூரம். இரு இரவுகள் ஒரு பகல் இரயில் பயணம். இரயிலில் தலையாணை போர்வை மற்றும் மெத்தை விரிப்பு இவைகளை முதல் இரண்டாம் மூன்றாம் வகுப்பு குளிர் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு தருகிறார்கள் சுகமாக தூங்கலாம்.

130 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

Posted on : 26-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

ஜோர்ஜியாவிலுள்ள பின்தங்கிய மலைப்பிராந்திய கிராமமொன்றில் வசிக்கும் பாட்டியொருவர் வியாழக்கிழமை தனது 130 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

அன்ஸா கவிசவா என்ற மேற்படி பாட்டி, உலகில் உயிர்வாழும் மிகவும் வயதான நபர் தானே என உரிமை கோரியுள்ளார்.

திபிலிஸி நகரின் மேற்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சசினோ என்ற கிராமத்தில் 40 வயதான தனது பேரனுடன் அன்ஸா கவிசா வாழ்ந்து வருகிறார்.

தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அன்ஸா கவிசவா, தனது குடும்பத்தினருடன் இணைந்து சோளக்கஞ்சி மற்றும் வாசனையூட்டப்பட்ட இறைச்சி என்பவற்றை உண்டு மகிழ்ந்தார். அவர் போர் மற்றும் புரட்சி என்பவற்றின் போது தனது பிறப்புச் சான்றிதழை இழந்த போதும், அவரது கடவுச்சீட்டு ஆவணங்கள் அவரது வயதை உறுதிப்படுத்துவதாக ஜோர்ஜிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தள்ளாத வயதிலும் சிவப்பு உதட்டுச் சாயத்தை பூசுவதில் ஆர்வம் காட்டும் அன்ஸா கவிசவா விபரிக்கையில், “நான் எப்போதும் ஆரோக்கியமாகவும் வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்து கொண்டும் இருக்கின்றேன்” என்று கூறினார்.

உலகில் வயதான நபர்தானே என அன்ஸா கவிசவா உரிமை கோருவதற்கு முன்னர் பிரான்ஸைச் சேர்ந்த இயுஜினி பிளன்சார்ட் என்ற 114 வயது பெண்மணியே உலகின் வயதான நபராக அடையாளங் காணப்பட்டிருந்தார்.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/07/130.html

தொன்மையிலும் தனித்தன்மையிலும் முதன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ்

Posted on : 26-07-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

கோவை, சூன் 24 – கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குத் தலைமை வகித்து முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது “தொன்மையிலும் தனித்தன்மையிலும் முதன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் உலக மொழி மட்டுமல்ல – உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

முதல்வர் கலைஞர் அவர்களின் தொடக்க விழாத் தலைமையுரை வருமாறு:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது” வழங்கி, விழாப் பேருரையாற்ற வருகை தந்திருக்கும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களே!

தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு தமிழகத்தின் மீதும் – தமிழ்நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும் – பற்றின் காரணமாகவும் வருகை தந்துள்ள தங்களுக்கு உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்க வருகை தந்திருக்கும் மேதகு தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களே!

தமிழக அரசின் நிதியமைச்சர் இனமானப் பேராசிரியர், தமிழகத்தின் துணை முதலமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே!

உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கே வருகைதந்திருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, ஆய்வறிஞர்களே, கவிஞர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் அன்பர்களே! என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!

கோவையில் நடைபெறுகின்ற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடை திறந்த வெள்ளமெனத் திரண்டு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தையும், உள்ளம் நிறைந்த வரவேற்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி தீரத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைத் தரணியிலே; கருக்கலிலே கண் விழிக்கும் திருக்குவளை என்னும் சிற்றூரில், கவிபுனையும் கற்பனைத் திறனும், தமிழிசை ஆற்றலும், வேளாண்மை நாட்டமும் மிகுந்த முத்துவேலருக்கும் அஞ்சகத்தம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்து,

14 வயதினிலே – “வீரத்தமிழ் கொஞ்சும் நாட்டிலே” எனும் அணி வகுப்புப் பாடல் இயற்றி, தமிழ் வாழ்க, தமிழர் வெல்க என்று புலி, வில், கயல் பொறித்த கொடி பிடித்து, தமிழ் மாணவர் பட்டாளத்திற்குத் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் பேரணி நடத்தி;

அதே வயதில், “திராவிடர் விழித்துக் கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. பெரும்பாலான திராவிடர் வீறுகொண்டெழுந்து விட்டனர். நாட்டைக் காப்பாற்றவும், கலை நாகரிகத்தைக் காக்கவும் கச்சை கட்டிவிட்டனர்” என்ற முன்னுரையோடு, ‘செல்வச்சந்திரா’ என்ற நாடகத்தை எழுதி;

17 வயதில் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஓர் அமைப்பினைத் தோற்றுவித்து; அதன் ஆண்டு விழாவுக்கென, “கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தை!” என்ற பாடல் வரிகளைப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமிருந்து வாழ்த்தாகப் பெற்று;

‘திராவிட நாடு’ தொடக்க இதழ் ஒன்றில், ‘இளமைப் பலி’ என்ற கட்டுரை எழுதி, அறிஞர் அண்ணா அவர்களின் கவனத்தைக் கவர்ந்து;

20 வயதில் ‘சேரன்’ என்ற புனை பெயரோடு, ‘முரசொலி’ இதழைத் தொடங்கி, “கிழவன் கனவு” எனும் சீர்திருத்த சிறுகதையினை வழங்கி; அன்னைத் தமிழுக்கு இயன்ற வழியனைத்தும் அணிகலன்கள் பல சூட்டியிருக்கிறேன்.

பின்னர், தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பிலும், அறிஞர் அண்ணா அவர்களின் அன்பிலும் நனைந்து, வளர்ந்து; தமிழையே தோன்றாத் துணையாகவும், தோளேந்திய ஆயுதமாகவும் கொண்டு – கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் பணி புரிந்து – ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாத போதும், தமிழ் அன்னைக்கு இயன்ற வழியனைத்தும், முனைந்து இடையறாது பணியாற்றி, அணி மணிகள் பலவும் தேடிக் கொணர்ந்து சூட்டிவரும் எனக்கு;

கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கும், அதன் தொடக்க விழாவிலே தலைமையேற்பதற்கும் கிட்டிய வாய்ப்பினைப் பெருமையாகக் கருதுகிறேன்.

இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருக்கினறன. முன்னர், நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்பொழுது நடைபெறுகிற இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை “உலத் தமிழ் மாநாடுகள்” இப்பொழுது நடைபெறுவது “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”.

“உலகத் தமிழ்ச் செம்மொழி” என்பதில் உள்ள மூனறு சொற்களும் பொருள் பொதிந்தவை மட்டுமல்ல; பொருத்தமானவையும் ஆகும். தமிழ் உலக மொழி மட்டுமல்ல; உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், ஞானமுதல் மொழி தமிழே என்று நிறுவிக்காட்டியிருக்கிறார்.

“டயானா கொலை” வழக்கறிஞர் தகவலால் பரபரப்பு

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கார் விபத்து மூலம் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவ்வழக்கை விசாரித்த புலனாய்வுத்துறை வழக்கறிஞர் மைக்கேல் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில் கார் டிரைவர் பாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் பாலின் வங்கிக் கணக்கில் பல கோடி மதிப்பிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு டிரைவரின் வங்கிக் கணக்கில் திடீ‌ரென அதிகளவிலான பணம் மு‌தலீடு செய்யப்பட்டுள்ளது குறித்து வழக்கு விசாரணையில் ஒரு வரி கூட இடம்பெறாததது,

டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வதாகவும் மைக்கேல் தெரிவித்துள்ளார். டயானா கொலை சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த அவர் வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

மைக்கேலின் இந்த தகவலால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/07/blog-post_24.html

நீடூர் – நெய்வாசல்

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

நீடூர் – நெய்வாசல்

நீடூர்

முகவரி: நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203

எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.

இந்நீடூர் இராஜாதி ராஜவள  நாட்டைச் சேர்ந்ததாகும்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது

நீடூர் தொடர்வண்டி நிலையம்

.

ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா  புதிய  ள்ளிவாசல்

ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா – பட்டமளிப்பு விழா

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.07.2010 ஞாயிற்றுகிழமை நீடூர் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் 64-வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. காலை 9.30 முதல் நிகழ்ச்சிகள் தொடங்கும் (இறைவன் நாடினால்).


மௌலவி ஆலிம் ஃபாஜில் மிஸ்பாஹி பட்டம் பெரும் மாணவர்கள் – 21
மௌலவி ஆலிம் மிஸ்பாஹி பட்டம் பெரும் மாணவர்கள் – 4

ஹாபிழ் பட்டம் பெரும் மாணவர் – 1

ஜின்னா தெரு ள்ளிவாசல்

நீடூர் பள்ளிவாசல்

ரைஸ் மில் தெரு பள்ளிவாசல்

நீடூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் ரேஷன் கடையில் உள்ள இருப்பை தெரிந்துக்கொள்ள,
PDS 20 DP031
என்று டைப் செய்து 9789006492 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.

நீடூர்

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

நீடூர்

முகவரி: நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203

எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது.

சித்தார்கோட்டை எனும் சீர்மீகு ஊர் …

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

புகழ்பெற்ற சரித்திர நாயகர்களையும் வள்ளல் பெருமக்ளளையும் சாதனைச் சிற்பிகளையும் ஒருங்கே கொண்டு புகழ் பெற்ற மாவட்டம் நம் இராமநாதபுரம் மாவட்டம். இம்மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு சிற்று}ர் தான் சித்தார்கோட்டை. இது சிற்றூராகக் காட்சி தந்தாலும் சாதனைகளில் ஒரு பேரூருக்கு நிகரானது. இஸ்லாமிய மார்க்க வல்லுனர்களையும் வள்ளல் பெருமக்களையும், அறிவார்ந்த எழுத்தாளர்களையும் சான்றோர் பலரையும் கொண்டிலங்கும் அழகிய ஊர் சித்தார்கோட்டை.
சித்தார்கோட்டை இராமநாதபுரத்திலிருந்து சாலை வழியாக 13 கி.மீ. ஆகும். இராமநாதபுரத்திற்கு வட கிழக்காவும் தேவிபட்டிணத்திற்கு தெற்கிலும் அமைந்துள்ளது. சித்தார்கோட்டை பஞ்யாத்தில் ஏழு கிராமங்கள் உள்ளன. வாழூர், பழனிவலசை, முடிவீரன்பட்டினம், குலசேகரக்கால், அம்மாரி, ஜமீன்தார்வலசை மற்றும் இலந்தைக் கூட்டம் இதில் அடங்கும்.
சித்தார்கோட்டை மற்றும் வாழூரில் பெரும்பகுதியானவர்கள் முஸ்லிம்கள். பெரும்பகுதியான மக்கள் வெளிநாடுகளில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பலர் மலேசியா மற்றும் சிங்கப்ப10ரில் குடியுரிமை பெற்றுள்ளனர்.

Click the image to see the enlarged view

சித்தார் கோட்டை’யது சிற்றூர் தான் ஆனாலும்
சீரிய முஸ்லிம்கள் செறிந்த ஊர்
முத்தார் முகம்மதுவின் மொழிவழியால் தொழுகை
முதலான மூவிரண்டு நெறிமுறையால்
சத்தான் இசுலாத்தின் சரியான வழி வந்தோர்
சக்காத்துக் கொடுப்பதற்கோ சலிக்க மாட்டார்
எத்தாலும் வாழலாம் என்றெண்ண மாட்டார்கள்
ஈகைக்கு எடுத்தக் காட்டவரே

காவியம் படைத்த அரசியல் கவிஞன்!

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

கே. செல்வப்பெருமாள்

மில்டன் அரசவைக் கவிஞர் அல்ல; அரசியல் கவிஞர்! ஆங்கிலக் கவிகளில் தன்னிகரில்லா இடத்தைப் பெற்றிருப்பவர் ஜான் மில்டன். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்கு துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. ‘மில்டனைப் போல் எழுதுகிறாயே!’என்று பிற எழுத்தாளர்களை பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது.

மதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது,அவரது எழுத்துக்களை ‘தீ’ நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும். இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட முதல் இடத்தை பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ‘ஜான் மில்டனின்’ பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்’ என்று உண்மையை கண்டுரைத்த சார்லஸ்டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர் 9, 1608 இல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு, கலை – இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம் வயதில் தாக்கத்தை உண்டாக்கியது என்பதை சொல்லத் தேவையில்லை. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத் துவங்கி, கிருத்துவ கல்லூரியில் பயின்று, 1632 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன் லத்தீன், எபிரேயம்,இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.

உலக மகாகவி என்று போற்றப்படும் சேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல் கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே இருந்தது. அந்த அளவிற்கு கிறித்துவத்தையும் – பைபிளையும் நன்கு பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலப் புகழ் பெற்ற படைப்புகளான ‘இழந்த சொர்க்கத்தையும்’, ‘மீண்ட சொர்க்கத்தையும்’ எழுதுவதற்கு கருவானது. கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும் நூல்களை கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ் பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார். அதில் குறிக்கத்தக்கது லூசிடாஸ் (Lycidas),கோமாஸ் (Comus)..

அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633-ஆம் ஆண்டு வெளியுலக பயணத்தை துவக்கினார். பிரான்ஸ்,இத்தாலி உட்பட பல்வேறு நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, ‘உலகம் உருண்டையானது – சூரியனைச் சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது’ என்ற பேரூண்மையை சொன்ன உலகமகா அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்த சந்திப்பை தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாக கருதினார் மில்டன். இந்த சந்திப்பை தனது ‘இழந்த சொர்க்கம்’ என்ற காவியத்திலும் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு வர்ணித்திருப்பார்.

The broad circumference
Hung on his shoulders like the moon, whose orb
Trhough optic glass the Tuscan artist views
At evening, from the top of Fesole,… (Book 1, 286-290

‘டஸ்கன் கலைஞனால் தொலை நோக்கி வழியே முன்னிரவில் துழாவப்பெறும் சந்திரன் போல், சாத்தான் கேடயத்தின் அகன்றவட்டம் அவன் தோளில் தொங்கியது.” – (கம்பனும் மில்ட்டனும், எஸ். ராமகிருஷ்ணன், பக்.54)

கலிலியோ கண்ட உண்மை கடவுளுக்கு எதிரானது என்றுக் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் வீட்டுச் சிறையில் அடைத்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், அவர் கண்ட உண்மையை தனது படைப்பிலும் கொண்டு வந்ததன் மூலம் மில்டன் மக்களை மாயையிலிருந்து விடுவிப்பதில் எந்த அளவிற்கு பங்காற்றினார் என்பதை உணர முடியும். இதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் அரங்கேறுகின்றன. குறிப்பாக ரோமன் கத்தோலிக்க மதத்தை முன்னிறுத்தி, கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த முதலாம் சார்லஸ் மன்னராட்சியில் சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தலைவிரித்து ஆடின. இப்பின்னணியில் 1639இல் இலண்டன் திரும்பும் மில்டன் ஒரு பள்ளிக்கூடத்தை துவக்குகிறார். குறிப்பாக அக்காலக் கல்வி மதத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தன. இது குறித்து தனது அதிருப்தி தெரிவித்த மில்டன்1944 இல் ‘கல்வி’ (Of Education) குறித்து சிறந்த கட்டுரையொன்றை வெளியிடுகிறார். கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது.

சார்லஸ் மன்னராட்சியின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நாட்டு மக்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற வேண்டும் என்று சட்டம் இயற்றப்படுகிறது. இதை எதிர்த்து தூய்மைவாதிகளும் – புரோட்டஸ்டான்ட்கிருத்துவர்களும் தங்களது எதிர்ப்புணர்வை காட்டுகின்றனர். மதம் தங்களது தனிப்பட்ட விருப்புரிமைக்கு உட்பட்டது அதனை ஆட்சியாளர்கள் தீர்மானிக்க முடியாது என்று பல இடங்களில் கலகம் எழுந்தது. ஆனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பின்னணியுடன், ஆட்சி அதிகார எந்திரத்தை கையில் வைத்திருந்த கொடுங்கோலன் சார்லஸ் மன்னன் புரோட்டஸ்டான்ட் மக்களை வேட்டையாடினான். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமைகளை கண்ட மில்டன் மக்களுக்கான அரசியல் களத்தில் இறங்கி,தொடர்ச்சியாக அரசுக்கு எதிராக பல அரசியல் பிரசுரங்களை எழுதி குவித்தான். இது ஆட்சியாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஊட்டியது. அந்த நேரத்தில்தான் சார்லஸ்மன்னன் பத்திரிகை உரிமைக்கு வேட்டு வைக்கும் புதிய சட்டத்தை கொண்டு வந்தான். பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டன. ஆட்சியாளர்களின் அனுமதியில்லாமல் எந்த துண்டுப் பிரசுரமும் வெளிவராது என்ற நிலையே நிலவியது.

லால்பேட்டை அறிமுகம்

Posted on : 22-07-2010 | By : mohamedali | In : ஊர்

0

முன்னுரை:


ஏக அல்லாஹுவின் திருபெயரைக்கொண்டு ஆரம்பிக்கின்றோம் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) மார்க்க அறிஞர்களை உருவாக்கி உலகமெங்கும் அனுப்பும் வரலாற்று சிறப்புமிக்க ஓர் ஊரை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

லால்பேட்டை ஓர் அறிமுகம்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் சிதம்பரத்திலிருந்து 22கி.மீ. நெய்வேலியிலிருந்து 30கி.மீ. காட்டுமன்னார்குடிஇலிருந்து 3கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, லால்பேட்டை. லால்பேட்டையின் இயற்ப்பெயர் லால்கான்பேட்டை ஆகும். இந்தபெயர் காலப்போக்கில் மாறி லால்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. பெயர் எப்படி உருவானது என்பதை, லால்பேட்டை உருவானது எப்படி என்ற தலைப்பில் பின்னர் கீழே காண்போம்.
இன்ஷா அல்லாஹ்.
இவ்வூர் முஸ்லிம்கள் அதிக அளவிலும் ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் குறைந்த அளவிலும் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இருக்கும் ஓர் ஊராகும். லால்பேட்டை சிதம்பரம் நாடாளுமன்ற மற்றும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ்வரும் ஓர் பேரூராட்சியாகும்.
இவ்வூரில் முஸ்லிம்கள்,ஹிந்துக்கள் மற்றும் கிருஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

புகாரியின் கவிதை நூல்களும் கிடைக்கும் இடங்களும்

Posted on : 22-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

1. வெளிச்ச அழைப்புகள் (2002)

கிடைக்கும் இடங்கள்:

Murugan Book Store
5215 Finch Avenue East
Scarborough, ON M1S 0C2
Canada
001-416-321-0285‎

மணிமேகலைப் பிரசுரம்
த.பெ. எண்: 1447
7 (ப.எண்: 4), தணிகாசலம் சாலை
தியாகராய நகர், சென்னை – 600 017
தொலைபேசி: 91-44-2434-2926
தொலைநகல்: 91-44-2434-6082
மின்னஞ்சல்: manimekalai@eth.net
வலைத்தளம்: www.manimekalaiprasuram.com

நியூ புக் லாண்ட்
52C வடக்கு உஸ்மான் சாலை
தி. நகர், சென்னை 600 017
(பனகல்பார்க் அருகில்)
தொலைபேசி: 91-44-2815-6006

காவ்யா பப்ளிகேசன்ஸ்
14, முதல் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்
கோடம்பாக்கம்
சென்னை – 600 024
தொலைபேசி: 91-44-2480-1603
மின்னஞ்சல்: kaavyabooks@yahoo.co.in
வளைத்தளம்: www.kaavyabooks.com

உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்ரமணியன் தெரு
அபிராமபுரம், சென்னை – 600 018
தொலைபேசி: 91-44-2499-3448
செல்பேசி: 91-98-4027-1561
மின்னஞ்சல்: Sales@Uyirmmai.com
வலைத்தளம்: www.Uyirmmai.com

* கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரை

* இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன் முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல்

* டொராண்டோ கனடாவில் வெளியிடப்பட்டது

*கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருது சிறப்புப் பரிசு

2. அன்புடன் இதயம் (2003)

கிடைக்கும் இடங்கள்:

Murugan Book Store
5215 Finch Avenue East
Scarborough, ON M1S 0C2
Canada
001-416-321-0285‎

மணிமேகலைப் பிரசுரம்
த.பெ. எண்: 1447
7 (ப.எண்: 4), தணிகாசலம் சாலை
தியாகராய நகர், சென்னை – 600 017
தொலைபேசி: 91-44-2434-2926
தொலைநகல்: 91-44-2434-6082
மின்னஞ்சல்: manimekalai@eth.net
வலைத்தளம்: www.manimekalaiprasuram.com

நியூ புக் லாண்ட்
52C வடக்கு உஸ்மான் சாலை
தி. நகர், சென்னை 600 017
(பனகல்பார்க் அருகில்)
தொலைபேசி: 91-44-2815-6006

காவ்யா பப்ளிகேசன்ஸ்
14, முதல் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்
கோடம்பாக்கம்
சென்னை – 600 024
தொலைபேசி: 91-44-2480-1603
மின்னஞ்சல்: kaavyabooks@yahoo.co.in
வளைத்தளம்: www.kaavyabooks.com

உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்ரமணியன் தெரு
அபிராமபுரம், சென்னை – 600 018
தொலைபேசி: 91-44-2499-3448
செல்பேசி: 91-98-4027-1561
மின்னஞ்சல்: Sales@Uyirmmai.com
வலைத்தளம்: www.Uyirmmai.com

* கவிநாயகர் வி. கந்தவனம் வாழ்த்துரை

* இலந்தை சு. இராமசாமி அணிந்துரை

* எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணைய சரித்திரத்தில் முதன் முதலாக வெளியிடப் பட்ட நூல். தமிழ்மொழி மற்றுமென்றில்லாமல் வேறு எந்த மொழிக்குமே இணையம் வழி நிகழ்ந்த முதல் நூல் வெளியீடு இதுவே.

* சென்னையில் நிகழ்ந்த கற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் இதன் ‘தண்ணீர்’ கவிதை காட்சிக்கு வைக்கப்பட்டு மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இதன் ‘தண்ணீர்’ கவிதை பங்கேற்றுள்ளது.

* வெளியீடு – பா. ராகவனின் சபரி பதிப்பகம்

கிளியனூர் வரலாறு (KILIYANUR)

Posted on : 22-07-2010 | By : mohamedali | In : ஊர்

Tags: , , , , , , ,

0

நஞ்சை வளமிக்க தஞ்சை மாவட்டத்தின் கிழக்கு பகுதியினை நிர்வாக வசதிக்காக காயிதேமில்லத் நாகை மாவட்டம் என்று பிரித்தனர்.

அச்சுக்கலையை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப் படுத்திய டச்சுக்காரர்களின் துறைமுகப் பட்டிணமாகிய தரங்கம்பாடி தாலுக்காவில் காவிரியின் உபநதியாகிய வீரசோழன் ஆற்றின் வடகரையில் உள்ளடங்கி அமைந்த ஊர் தான் கிளியனூர்.

மயிலாடுதுறை தான் அருகிலுள்ள நகர் அரசுடையமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், பல்வேறு பள்ளி, கல்லூரி, கல்விச் சாலைகள், நூற்றுக் கணக்கான வர்த்தக நிறுவனங்கள் சூழ்துள்ள அழகிய நகர் தான் மயிலாடுதுறை.

1967 முதல் பொறையாறு வீரப்பாபிள்ளையின் சத்திவிலாஸ் தொடங்கி இன்று அரசுடமையாக்கப்பட்ட போக்குவரத்து பேருந்துகள் வரை மட்டுமின்றி பல்வேறு சிற்றுந்துகள் (மினி பஸ்) வரை கிளியனூருக்கும் மயிலாடுதுறைக்கும் பாலமாக விளங்கி வருகின்றன.

30.10.1953 முதல் கிளியனூர் மின்சார வசதி பெற்ற ஊராக விளங்கி வருகிறது.

1955 ஆண்டு முதல் முற்றிலும் ஊர்ஜமாஅத்தார்களால் கட்டி முடிக்கப்பட்ட லோக்கல் பண்டு மருத்துவமனை இன்று அரசு மருத்துவமனையாக இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கி வருகிறது.

கிளியனூர் ஜமாஅத்துக்குச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் தான் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிளியனூர் புதுத் தெருவிலும் பிறகு ஐ.எப்.எஸ். மெயின் ரோட்டிலும் இயங்கி வந்த ஆரம்பப் பள்ளிக்கூடம் 1960க்குப் பிறகு அரசு மருத்துவமனைக்கு அருகில் கட்டப்பட்டு முதல்வர் கர்மவீரர் காமராஜ் திறந்தார்.

அமைச்சர் பக்தவச்சலம் அவர்கள் திறந்து வைத்த இடைநிலைப் பள்ளிக்கூடமும் கிளியனூர் ஆற்றங்கரை பாலமும் 1959ல் திறந்து வைக்கப்பட்டது. பிறகு வேளாண்துறை அமைச்சர் மண்ணை நாராயணசாமி அவர்களால் 1972-ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளியாக ஏற்றம் பெற்று வலிவும் பொலிவும் பெற்று அறிவொளி பரப்பி வருகிறது.