“விஞ்ஞான விபரீதங்கள்”-ரஹ்மத் ராஜகுமாரன்
Posted on : 01-09-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)
0
ரஹ்மத் ராஜகுமாரன்
“உனக்கு ஏதாவது தீங்கு வந்தால் அது உன்னால் தான் வந்தது.” குர்ஆன் (4:79)
விஞ்ஞான வளர்ச்சி அழிவைத் தராது. ஆனால் பொறுப்பில்லாத விஞ்ஞான வளர்ச்சி நிச்சயம் பேரழிவைத் தரும். மனிதன் இன்று தன் சமுதாயத்தையே அழித்துவிடும் அளவுக்கு அணு ஆயுதங்களைச் சேர்த்து வைத்திருக்கிறான். அணுசக்தி விஞ்ஞானம் என்பது குடிசைத் தொழில் போல ஆகிவிட்டது. அணு ஆயுதங்களின் உள்ளே உள்ள ரேடியோ ஆக்டிவ் கதிர் வீச்சு சமாச்சாரங்களை உடனடியாகக் கொல்வது கஷ்டம்.
அவற்றை வெடிக்க விடாமல் வைத்திருக்கலாம். ஆனால் அவற்றின் கதிர் வீச்சை அணைக்க ஆணிரக்கணக்கான வருஷங்கள் ஆகும். அணுசக்தி உற்பத்தி செய்த பின் அந்த யுரேனியத்தின் சாம்பலை என்ன செய்தாலும் எங்கு புதைத்தாலும் அங்கு கதிர்வீச்சு நிச்சயம் கசியும் ஆபத்து உண்டு. நிறைய தேள்களை மடியில் கட்டிக் கொண்டு பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டும் நவீன உலகத்தில் பிரவேசிக்கிறோம்.
அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ததைப் போன்று பொறுப்பற்ற செயல் மனித சரித்திரத்தில் இல்லை.
“தீமை செய்தவர்களையே தீமை சூழ்ந்து கொள்ளும் குர்ஆன்” (35:43)
அல்லாஹ்வின் வேதத்தை – இந்த வரியை யார் அவர்களுக்கு ஓதிக்காட்டுவது? அடுத்த வசனத்தை கொஞ்சம் பாருங்கள் விஞ்ஞானத்தின் அகங்காரங்கள் தெரியவரும்.
“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும், தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களின் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாகிறது.” (குர்ஆன் 30:41).
கடலிலும், சமுத்திரங்களிலும் உள்ள உயிரினங்கள் இன்னும் 30 வருஷங்களில் செத்துப்போகும் என்று கடல்வாழ்வின் உயிரியலாளர்கள் சொல்கிறார்கள். சென்ற 60 வருஷங்களில் நாம் கடலில் கொட்டிய குப்பைகள் அளவில்லாதவை பிரிட்டன் மட்டுமே ஐரிஷ் கடலில் வருஷத்துக்கு ஒரு லட்சத்து இருபத்தி நாலாயிரம் டன் தொழிற்சாலைக் குப்பையையும், வீட்டுக் குப்பையையும் கொட்டுகிறது. இங்கிலீஷ் கால்வாயில் மட்டும் 80 ஆயிரம் டன் கொட்டுகிறது. மொத்தம் தன்னைச் சுற்றியுள்ள கடல்களில் பிரிட்டன் 2.5 கோடி டன் குப்பையை கொட்டியிருக்கிறது.
கடலில் கொட்டும் குப்பை மீன்களை உடனே கொல்லுவதில்லை. அதில் பொதிந்திருக்கும் ரசாயன விஷங்கள் மெல்ல மெல்லத்தான் கடலின் உயிரினங்களின் உயிரை குடிக்கும். இதனால் சில் மீன்களின் வம்சங்களே நசிந்து போய் எதிர்காலத்தில் மீன் சாப்பிடும் பழக்கத்தைவிட வேண்டியது வரும். இதனால் நம் (Food Cycle) உணவுச் சக்கரம் பாதிப்புக்குள்ளாகும்.அமெரிக்க தேசத்து அலங்கார பொருட்களில் ஒன்றான ‘ஏரோஸல்’ என்ற மருந்தும் செண்டுமாக ‘புஸ்’ அடித்துக் கொள்கிறார்களே அதிலுள்ள ஹலோ கார்பன்கள் அதிக நாள் நம்மைச்சுற்றி விலகாமல் இருந்துவிட்டு பின் நமக்கு ஹலோ சொல்லிவிட்டு பூமியின் மேற்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் ‘ஓஸோன்’ வாயுவைத் தின்றுவிடுகிறது. நம் பிரிட்ஜில் பயன்படுத்தும் ‘பிரியான்’ என்கிற வாயும் ஒஸோனை ஓட்டையாக்கிவிடுகிறது.
அந்த ஓஸோன் வாயுபடலம் நம் பூமிக்கு வரும் சூரிய வெளிச்சத்திற்கு பில்டர் போய்விடுகிறது விளைவு? அல்ட்ரா வயலட் வெளிச்சம் நம் மேல் அதிகம் பட ஒரு வகையான தோல் கான்சர் அதிகரிக்கிறது. இதுமட்டுமல்ல சூரிய வெளிச்சத்தில் அல்ட்ராவயலட் அதிகரித் தால் பற்பல சின்னச் சின்ன நன்மை செய்யும் பாக்டீரியாக்களெல்லாம் செத்துப் போய் நம்முடைய உணவுச்சக்கரம் இங்கேயும் பாதிக்கப்பட்டு என்ன விளைவு ஏற்படும் என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட உதாரணங்களைத் தவிர இன்னும் எத்தனையோ விஞ்ஞானத்தின் விபரீதங்கள் கடலையும், தரையையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இப்போது (30:41) வசனத்தை திரும்ப படியுங்கள்.
ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் நோபல் தற்செயலாக ‘டைனமைட்’ கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிஸரினைத் திரவ ரூபத்தில் இடம் மாற்றும் போது அது வெடித்துவிடும் அசௌகரியம் இருப்பதால். ஒரு நாள் நைட்ரோ கிளிஸரினைப் பக்கத்தில் வைத்திருந்த எரிமலை மண்ணை ‘கிளல்கர்’ என்னும் மண்ணுடன் கலக்க அது சட்டென கட்டி, தட்டிப்போக அதை எடுத்துப் போவது சுலபமாயிற்று. அப்போது ஆரம்பித்த ரத்தகளறி இன்று வரையிலும் அனத்தம். ஜப்பான் நாஹஸாகி, ஹிரோ~pமாவின் வடுவும் மறையவில்லை புண்ணும் ஆற வில்லை.
மக்களின் நன்னைக்காக கண்டுபிடிக்கப்பட்ட அணுசக்தி மக்களை சாவுக்கு அழைத்துப் போனது.
“மனிதர்கள் தீமையைக் கொண்டும் சோதிக்கப்படுவார்கள்.” குர்ஆன் (7:168)”நன்மையுடன் தீமையைக் கலக்கிறார்கள்” (9:102).






சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் மூடிவிட்டது. உணவு, மருந்து பொருட்கள் கூட வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாது. இதனால் காஸா பகுதி மக்கள் பஞ்சத்தாலும், பட்டினியாலும், நோய்களாலும் கும்பல் கும்பலாக செத்து மடிகின்றனர்.








தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விண்ணைத் தொட்டிருப்பது கல்யாணம் கச்சேரியை நெருங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பெல்லாம் இத்தனை பவுன் நகை என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போதெல்லாம் இத்தனை ரூபாய்க்கு நகை என்றே பேசிக்கொள்கின்றனர். காரணம் நாள் தோறும் எகிறிக் குதிக்கும் தங்கத்தின் விலை.
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)

