Featured Posts

  • Prev
  • Next

திருக்குறள் அமைப்பும் அழகும்

Posted on : 12-08-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

திருக்குறள் அமைப்பும் அழகும்

நூல் ஆசிரியர் : திரு. ச.தண்டபாணி தேசகர்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

உலகில் தமிழை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற திருக்குறள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூல் இது. நூல் ஆசிரியர் திரு. ச.தண்டபாணி தேசகர் திருக்குறளில் ஆழ்ந்து, தோய்ந்து மிக அற்புதமாக எழுதி உள்ளார்கள். இந்நூலை படித்து பின்பு வாசகர் உள்ளத்தில் உச்சத்தை அடைந்து விடுகின்றது திருக்குறள்.
திருக்குறள் மக்களின் வாழ்க்கை இயல்புகளை மட்டும் அறிவிக்கிறது. அதனால் இலக்கியமாயிற்று. ஒரு குறிக்கோள் வாழ்வின் இலக்கணங்களை அறிவிப்பதால் இதனை இலக்கிய இலக்கணம் என்று கூடக் கூறி விடலாம். இதனைக் கொண்டு உலக மக்கள் தமது வாழ்க்கையைத் திருத்தி கொள்வர் என்பதே திருவள்ளுவரின் ஆசையாகும்.
திருவள்ளுவரின் திருக்குறளில் அரசனின் ஆண்மை புலப்படுகிறது. அமைச்சர் அறிவலை பாய்கிறது ஒற்றருடைய அரசியல் தந்திரம் ஆழங்காணற்படுகிறது. தூதருடைய சொல்வண்மை தோன்றுகிறது. எழில் நிறைந்த இளமங்கையோடு நுகரும் இன்பத்தேன் எங்கும் களியூட்டுகிறது. அறவோராகவும், துறவோராகவும் இருந்து செய்யும் அறவுரைகள் ஒளிவிடுகின்றன. செம்பொருள் திகழ்கிறது. இதிலிருந்து இவர் எத்தகையை வாழ்க்கையினர் என்று துணியக் கூடும்? முடியாது, இதனாலேயே இந்நூல் எல்லார் வாழ்வோடும் கூடி எல்லார்க்கும் இன்பம் பயப்பதாக, பொது நூலாக அழியாப் பெருமையுடன் விளங்கிக் கொண்டிருக்கிறது.
நூல் முழுவதும் திருக்குறளின் பெருமையை பறைசாற்றுகின்றார் நூல் ஆசிரியர்.
பெயர்க்காரணம் :

தொன்மையிலும் தனித்தன்மையிலும் முதன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ்

Posted on : 26-07-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

கோவை, சூன் 24 – கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குத் தலைமை வகித்து முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது “தொன்மையிலும் தனித்தன்மையிலும் முதன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் உலக மொழி மட்டுமல்ல – உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

முதல்வர் கலைஞர் அவர்களின் தொடக்க விழாத் தலைமையுரை வருமாறு:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது” வழங்கி, விழாப் பேருரையாற்ற வருகை தந்திருக்கும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களே!

தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு தமிழகத்தின் மீதும் – தமிழ்நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும் – பற்றின் காரணமாகவும் வருகை தந்துள்ள தங்களுக்கு உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்க வருகை தந்திருக்கும் மேதகு தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களே!

தமிழக அரசின் நிதியமைச்சர் இனமானப் பேராசிரியர், தமிழகத்தின் துணை முதலமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே!

உலகில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கே வருகைதந்திருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, ஆய்வறிஞர்களே, கவிஞர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் அன்பர்களே! என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!

கோவையில் நடைபெறுகின்ற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடை திறந்த வெள்ளமெனத் திரண்டு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தையும், உள்ளம் நிறைந்த வரவேற்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி தீரத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைத் தரணியிலே; கருக்கலிலே கண் விழிக்கும் திருக்குவளை என்னும் சிற்றூரில், கவிபுனையும் கற்பனைத் திறனும், தமிழிசை ஆற்றலும், வேளாண்மை நாட்டமும் மிகுந்த முத்துவேலருக்கும் அஞ்சகத்தம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்து,

14 வயதினிலே – “வீரத்தமிழ் கொஞ்சும் நாட்டிலே” எனும் அணி வகுப்புப் பாடல் இயற்றி, தமிழ் வாழ்க, தமிழர் வெல்க என்று புலி, வில், கயல் பொறித்த கொடி பிடித்து, தமிழ் மாணவர் பட்டாளத்திற்குத் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் பேரணி நடத்தி;

அதே வயதில், “திராவிடர் விழித்துக் கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. பெரும்பாலான திராவிடர் வீறுகொண்டெழுந்து விட்டனர். நாட்டைக் காப்பாற்றவும், கலை நாகரிகத்தைக் காக்கவும் கச்சை கட்டிவிட்டனர்” என்ற முன்னுரையோடு, ‘செல்வச்சந்திரா’ என்ற நாடகத்தை எழுதி;

17 வயதில் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற ஓர் அமைப்பினைத் தோற்றுவித்து; அதன் ஆண்டு விழாவுக்கென, “கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தை!” என்ற பாடல் வரிகளைப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமிருந்து வாழ்த்தாகப் பெற்று;

‘திராவிட நாடு’ தொடக்க இதழ் ஒன்றில், ‘இளமைப் பலி’ என்ற கட்டுரை எழுதி, அறிஞர் அண்ணா அவர்களின் கவனத்தைக் கவர்ந்து;

20 வயதில் ‘சேரன்’ என்ற புனை பெயரோடு, ‘முரசொலி’ இதழைத் தொடங்கி, “கிழவன் கனவு” எனும் சீர்திருத்த சிறுகதையினை வழங்கி; அன்னைத் தமிழுக்கு இயன்ற வழியனைத்தும் அணிகலன்கள் பல சூட்டியிருக்கிறேன்.

பின்னர், தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பிலும், அறிஞர் அண்ணா அவர்களின் அன்பிலும் நனைந்து, வளர்ந்து; தமிழையே தோன்றாத் துணையாகவும், தோளேந்திய ஆயுதமாகவும் கொண்டு – கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் பணி புரிந்து – ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாத போதும், தமிழ் அன்னைக்கு இயன்ற வழியனைத்தும், முனைந்து இடையறாது பணியாற்றி, அணி மணிகள் பலவும் தேடிக் கொணர்ந்து சூட்டிவரும் எனக்கு;

கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கும், அதன் தொடக்க விழாவிலே தலைமையேற்பதற்கும் கிட்டிய வாய்ப்பினைப் பெருமையாகக் கருதுகிறேன்.

இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருக்கினறன. முன்னர், நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்பொழுது நடைபெறுகிற இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை “உலத் தமிழ் மாநாடுகள்” இப்பொழுது நடைபெறுவது “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”.

“உலகத் தமிழ்ச் செம்மொழி” என்பதில் உள்ள மூனறு சொற்களும் பொருள் பொதிந்தவை மட்டுமல்ல; பொருத்தமானவையும் ஆகும். தமிழ் உலக மொழி மட்டுமல்ல; உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், ஞானமுதல் மொழி தமிழே என்று நிறுவிக்காட்டியிருக்கிறார்.

இன்னும் எழுதப்படாத என் கவிதை

Posted on : 17-03-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature, கவிதைகள் (POEM)

0

எம்.ரிஷான் ஷெரீப்

பொய்யைக் கனவைக் கற்பனையைக்
கவிதையாய்க் கிறுக்கிடினும்
பிரமிப்புகள் நீங்கலாக
என்னவெல்லாமோ
எஞ்சியிருக்கின்றன இன்னும்
எழுதப்படாமலே இங்கு…!

வானவில்லின் வசீகரம்,
வண்ணத்துப்பூச்சி அழகு,
இதழ் விரிக்கும் பூக்களின் மென்மை,
காதலியின் பொய்க்கோபம்-எல்லாமே
எழுதப்பட்டிருப்பினும்…

எந்த மொழியில்,
எந்தச் சொற்களைக் கொண்டு,
எப்படி எழுதி முடிப்பேன்
என் தாயின் புன்னகையை
ஒரு சில வரிகளில்…..?

- எம்.ரிஷான் ஷெரீப்,

மாவனல்லை,
இலங்கை.

Posted by எம்.ரிஷான் ஷெரீப் 

Jazakkallahu hairan

நன்றிhttp://mrishanshareef.blogspot.com

அம்மா

Posted on : 17-03-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature, கட்டுரைகள் (ARTICLES), கவிதைகள் (POEM)

0

அன்புடன் புகாரி


அம்மா
இந்த உலகம் சிறியது
உன் பாசம் மட்டுமே
பெரியது

என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை

உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது

.

பொழுதெல்லாம்
உன் முத்த மழையில்
என் உயிரை நனைத்தப்
பாச அருவியே

நீ
என்றென்றும்
எனக்காகவே கறுத்துக் கிடக்கும்
மழைமேகம் என்று சொன்னாலும்
என் எண்ணம் குறுகியது

என் கண்களில்
வெளிச்சத்தை ஏற்றவே
உன் மேனியைத் தீயில் உருக்கும்
மெழுகுவர்த்திப் பிறவியே

நான் வசித்த முதல் வீடு
உன்
கருவறையல்லவா

நான் உண்ட முதல் உணவு
உன் இரத்தத்தில் ஊறிய
புனிதப் பாலல்லவா

நான் கேட்ட முதல் பாடல்
உன் ஆத்மா பாடிய
ஆராரோ ஆரிரரோ வல்லவா

நான் கண்ட முதல் முகம்
பாசத்தில் பூரித்த
உன் அழகு முகமல்லவா

நான் பேசிய முதல் வார்த்தை
என் ஜீவனில் கலந்த
‘அம்மா’ வல்லவா

நான் சுவாசித்த முதல் மூச்சு
நீ இட்ட
தேவ பிச்சையல்லவா

.

வாய்க்குள் உணவு வைத்து
நான்
வரும்வரைக் காத்திருக்கும்
பாச உள்ளமே

என் பாதங்கள்
பாதை மாறியபோதெல்லாம்
உன் கண்ணீர் மணிகள்தாமே
எனக்கு வழி சொல்லித்தந்தன

உனக்காக நான்
என் உயிரையே தருகிறேன்
என்றாலும்
அது நீ
எனக்காகத் தந்த
கோடானு கோடி பொக்கிஷங்களில்
ஒரே ஒரு துளியை மட்டுமே
திருப்பித் தருகிறேன்
என்னும்
நன்றி மறந்த
வார்த்தைகளல்லவா

Label:

Jazakkallahu hairan
நன்றி :http://anbudanbuhari.blogspot.com

நரை நீக்கும் நல்ல மருந்து

Posted on : 23-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

Tags: , ,

0

by முனைவர்.இரா.குணசீலன்

முடி நரைக்காமல் இருப்பதையே நாமெல்லாம் விரும்புகிறோம். அதற்காக எத்தனை மருந்துகள், மாத்திரைகள்,மருத்துவ ஆலோசனைகள்………
இருந்தும் முடி நரைப்பது தடுக்க இயலாததாகவே உள்ளது.

முடியின் இயற்கையான நிறமே வெண்மைதான். முடியில் உள்ள நிறமிகளே முடிக்கு நிறத்தைத் தருகிறது. அதனால் தான் நாட்டுக்கு நாடு முடியின் நிறம் வேறுபடுகிறது. நிறமிகள் தீர்ந்துபோனபின், முடி தன் இயற்கையான நிறத்தை (வெண்மை)அடைகிறது.

முடி நரைப்பதற்கு மரபியல் அடிப்படையில் பல காரணங்களை அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆயினும் முடி நரைக்காமல் இருக்கவேண்டும் என்ற நமது ஆசையை மூலதனமாகக் கொண்டு பல விற்பனை நிறுவனங்கள் தம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. நரை நீக்கும் மருந்துகள் இன்றைய நிலையில் பல வடிவங்களில் கிடைக்கின்றன.

சங்க காலத்திலேயே நரை நீக்கும் மருந்து ஒன்று இருந்தது……..
அதனைக் காண்போம்….

கோப்பெருஞ்சோழன்(அரசர்), பிசிராந்தையார்(புலவர்)இருவரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களாவர். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்புக் கொண்டிருந்தனர். கோப்பெருஞ்சோழன் தம் பிள்ளைகளோடு மாறுபட்டு தன் அரசுரிமையைத் துறந்து வடக்கிருந்து தம் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டார்.

இணைக்குறள் 1330 : (திருக்குறளும் விளக்கக் குறளும்) :

Posted on : 18-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

Posted by துரை. ந.உ

அன்பின் உள்ளங்களுக்கு .,

திருக்குறளுக்கு விளக்கவுரையை குறளிலேயே அமைக்கலாம் என்ற முயற்சி இது .
. நான் செய்யக்கூடியது , செய்யக் கூடாதது பற்றிய தங்களின் அறிவரைக்காக வேண்டி நிற்கிறேன்

இதனப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை அறியக் காத்திருக்கிறேன்.

அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :
================================

01)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

விளக்கக் குறள் :
அ)
எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகுக்கு என்றும் இறை

ஆ)
எழுத்துக்கு மூலம் அகரம்; இறைவன்
உலகத்தில் வாழும் உயிர்க்கு

இ)
அகரமே மூலம் மொழிக்கு; இறைவன்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு

ஈ)
அகரம் மொழிக்கெல்லாம் மூலம்; பகலவன்கீழ்
வாழும் உயிர்க்கு அவன்

02)
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

விளக்கக் குறள் :
கற்றறிந்தோர்; ஆண்டவன்தாள் ஏற்காதோர்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர்

03)
மலர்மிசை ஏகியான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவா வார்

விளக்கக் குறள் :
மலர்மனம் வாழும்இறைத் தாளடி சேர்ந்தோர்
உலகில் நிலைத்துவாழ் வார்

வள்ளுவர் கண்ட சமுதாயம்…1

Posted on : 17-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

by முனைவர் கல்பனாசேக்கிழார்

கள்ளுண்ணாமை……..

சமுதாயம் என்பது என்ன என்னும் வினாவிற்கு எப்படி விடை கூறலாம்.மனிதர்கள் கூட்டமாக வாழ்வது சமுதாயமா? பன்றிகள் கூடதான் கூட்டமாக வாழ்கின்றன அதனை சமுதாயம் என்று கூறலாமா?முடியாது இல்லையா?அப்பொழுது சமுதாயம் என்பது பகுத்தறிந்து தனக்கு இது தேவை தேவை இல்லை என ஆய்து அறிந்து தெளிந்த சிந்தனை,நல்வழிபட்டு நடந்து பிறரையும் நடத்தி வைப்பவர்கள் நிறைந்த கூட்டத்தையே சமுதாயம் என்று கூற வேண்டும்.ஆனால் இன்று சமுதாயம் எப்படி உள்ளது.எங்கு காணீணும் பொய்கள் புரட்டுகள் ஏமாற்றங்கள்,வஞ்சகங்கள்,இளைய சமுதாயம் பெரும்பாலர் மதுவுக்கு அடிமை,என்றல்லவா இருக்கின்றது.இதனை சமுதாயம் என்று எப்படி ஒத்துக்கொள்வது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முப்பாட்டன் வள்ளுவ பெருந்தகை நாம் வாழ்க்கையில் சிறந்த நெறியைப் பின்பற்றி மேன்மைகளை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வாழ்க்கையின் சாரத்தை ஒன்றே முக்கால் அடியில் பிழிந்து சாறாக கொடுத்துள்ளார்.

அவற்றுள் ஒன்றுதான் கள்ளுண்ணாமை .அறிவினை மயக்கும் கள்ளினை உண்ணுவதால் ஏற்படும் உடல் நலக்கேட்டினையும் ,கள்ளுண்ணுபவனைச் சமுதாயம் எப்படி மதிக்கும் என்பதைப் பற்றி பத்துக் குறள்கிளில் கூறுகின்றார்.

மிளகின் கதை

Posted on : 15-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

by முனைவர் கல்பனாசேக்கிழார்


நான் தாங்க மிளகு என்னைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லாம் என்று இருக்கிறேன்.நான் எவ்வளவு பழமையாவள் என்பது உங்களுக்குத் தெரியுமா?என்னை யார் யார் எல்லாம் விரும்பி வாங்கினார்கள் தெரியுமா?என்னுடை பிறப்பிடம் என்னுடைய சிறப்பு இதுவாது உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்.

எதுவுமே ஆதாரத்துடன் சொன்னால் தானே நீங்கள் நம்புவீர்கள்,நான் பழமையானவள் என்பதற்குக் கட்டியம் கூறும் நம்முடைய பழமையான சங்க இலக்கியம்.வாங்க கொஞ்சம் பார்த்துவிட்டு என்னைப் பற்றி சங்க இலக்கியம் என்ன சொல்லுதுனு பார்ப்போம்.

எனக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறனும் உள்ளது.அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராமப் பகுதியில் கூறுவார்கள்.எல்லா இடத்திலையும் நான் விளைந்து விடமாட்டேன்.மலை சாரல் பகுதிதான் மிகவும் பிடித்த பகுதி.

தமிழ்ச்சிந்தனைகள்

Posted on : 09-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

இடுகையிட்டவர். முனைவர்.இரா.குணசீலன்

தமிழ்ச் சிந்தனை

அறிவியலே இன்றைய மானிட வளர்ச்சிக்கு அடிப்படை.தமிழில் அறிவியல் குறித்த செய்திகள் நிறைய உள்ளன.ஆனால் அறிவியலில் தான் தமிழ் குறித்த செய்திகள் குறைவு.அதற்கு நாம் நம் தாய்மொழியைப் புறக்கணித்ததும் ஒரு காரணமாகும்.
தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை
தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை
என்பது சான்றோர் வாக்கு.

ஒவ்வொரு மனிதனும் தன் தாய்மொழி வழியே சிந்தித்தால் தன் கருத்தை முழுமையாகவும்,ஆழமாகவும்,தெளிவாகவும் வெளிப்படுத்த முடியும்.
எதிர்காலத்தில் விஞ்ஞானம் மொழிகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு சில குறியீடுகளையே தன் மொழியாகக் கொள்ளப்போகிறது.அந்த சூழலில் செம்மொழிகள் சில மட்டுமே வழக்கில் இருக்கும்.
இன்றைய போக்கில் தமிழர் சிந்தனையும்,தமிழாய்வும் சென்றால் தமிழ் மொழி வழக்கொழிந்து போக வாய்ப்புள்ளது.

நாம் செய்யவேண்டியன

அறிவியல் துறையின் மணிமகுடமாகத் திகழ்வது கணிப்பொறி. கணிப்பொறியின் வளர்ச்சி நிலை இணையம்.தமிழர்கள் இணையம் குறித்த ஆழமான அறிவு பெற வேண்ணடும்.
அறிவியற்தமிழ் குறித்த ஆய்வு
இணையத்தமிழ் குறித்த ஆய்வு
இவையிரண்டும் இன்று தேவையான ஆய்வுகளாகும். நாம் தான் தாய்மொழி வழியே எல்லா அறிவியற்துறைகளையும் படிக்கும் வாய்ப்பிழந்து போனோம்.நம் வருங்காலத் தலைமுறையினராவது தாய்மொழிவழியே எல்லா அறிவியற்துறைகளையும் படிக்க வழிவகை செய்ய வேண்டும் அதில் உள்ள குறைகளைக் கண்டு களைய வேண்டும்.

முச்சங்கம் வைத்ததும் மூன்றுதமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.வலைமொழியில் சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.யாதும் ஊராக யாவரும் கேளிராக உலகுபரவி வாழும் தமிழர்களை இணையவழியே தமிழால் இணைப்பது நம் நாளையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நம் தமிழ் மொழி எதிர்காலத்தில் நிலைத்திருக்கும்.மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

களவு

Posted on : 07-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

புலமாடன்
breaking_hearts” ..ஆற்றது  தீமை அறிவுறு கலக்கமும்
காப்பின் கடுமை கையற வரினும்
களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக்
காதல் மிகுதி உளப்படப் பிறவும்
நாடும் ஊரும் இல்லும் குடியும்
பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி
அவன் வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ
அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்
ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப்
பொய்யெனெ மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்……….”

(தொல்காப்பியம் – களவியல் நூற்பா- 24 )

களவில் தோழியின் பங்கு இன்றியமையாதது; தலைமக்களின் களவுக் கூட்டத்துக்குத் துணைபுரிவது தோழியே!

களவில் அலரும் அம்பலும் எழுவதால் தலைவி இற்செறிக்கப்படும் ஆபத்து உருவாவதைத் தலைவி அஞ்சுவாள்;அவளைக் காணக் குறியிடத்து வரும் தலைவன் அறியுமாறு  வரைவு பற்றித் தலைவியோ தோழியோ பேசுவது அல்லது தலைவி இற்செறிக்கப்பட்ட செய்தியைக் குறியிடத்து வரும் தலைவனிடம் கூறி விரைந்து வந்து அவளை மணந்து கொள்ளுமாறு தோழி கூறுவது சங்கப் பாடல்களில் காணப்படும் சிறந்த கூறாகும்.

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.

Posted on : 05-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

இடுகையிட்டவர். முனைவர்.இரா.குணசீலன்

தமிழ் விரிவுரையாளர் .
கே.எஸ் .ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோடு

ங்க காலத்தமிழர் கடல் வணிகத்தில் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.சங்க இலக்கியங்கள் இதற்கு முதல் சான்றாதரங்களாகின்றன. தாலமி, பிளினி போன்ற வெளிநாட்டு யாத்ரிகர்களின் குறிப்புகளும் இதனை மெய்ப்பிக்கின்றன.

மலேசியாவில் கிடைக்கும் தமிழ்க்கல்வெட்டு,
தாய்லாந்தில் கிடைக்கும் சங்ககால நாணயம்,
கம்போடியா கல்வெட்டில் கிடைக்கும் தமிழ்மன்னனின் பெயர்,
சங்க இலக்கியத்தில் கிடைக்கும் யவனர் பற்றிய குறிப்பு ஆகியனவும்

சங்ககாலத்தமிழர் கடல்வாணிகத்தில் புகழ்பெற்றிருந்தமைக்குத் தக்க சான்றுகளாகவுள்ளன..

பெரிய கப்பல் என்றதும் பலருக்கு டைட்டானிக் கப்பல் தான் நினைவுக்கு வரும். இன்று பெரிய பெரிய கப்பல்களை அதிநவீன வசதிகளுடன் பயன்படுத்தி வருகிறோம்.

சங்ககாலத்தமிழர் பயன்படுத்திய கப்பல்கள் பற்றிய குறிப்பை சங்கப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.

இசைக்கு மயங்கிய கிளிகள்.

Posted on : 04-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

இடுகையிட்டவர். முனைவர்.இரா.குணசீலன்

இன்று ஒரு ஆண் ஒரு பெண்ணை எதிர்பாராத விதமாகப் பார்ப்பதும்,காதல் கொள்வதும்,
அதனால் முதல்நாள் சந்தித்த இடத்திலேயே மீண்டும் சந்திக்க முயற்சிப்பதும்,
பின் தன் நண்பனின் வாயிலாகவோ, அந்தப்பெண்ணின் தோழியின் வாயிலாகவோ மீண்டும் சந்திக்கவோ எண்ணுவதுண்டு இதற்கு சங்க காலத்தில் இருந்த பெயர்,

இயற்கைப் புணர்ச்சி
இடந்தலைப்பாடு
பாங்கர்கூட்டம்..
.

தலைவன் தலைவியை எதிர்பாராமல் பார்ப்பது இயற்கைப் புணர்ச்சியாகும், முன் சந்தித்த இடத்திலேயே மீண்டும் சந்திப்பது இடந்தலைப்பாடு, தோழியின் வாயிலாகவோ, தோழனின் வாயிலாகவோ ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வர் அதற்குப் பாங்கர் கூட்டம் என்றும் தோழியிற் புணர்ச்சி என்றும் பெயர்கள் உண்டு..

சிராப்பள்ளி

Posted on : 02-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

by முனைவர் கல்பனாசேக்கிழார்

சங்க கால சோழவேந்தரிகளின் தலைநகரமாக செழிப்புற்று விளங்கிய ஊர் உறையூர்(உறைவதற்கு அதாவது வாழ்வதற்றகு ஏற்ற இடமாக இருந்ததால் இப்பெயர் பெற்றது).இன்று உறையூர் பொலிவிழந்து திருச்சியின் ஒரு பகுதியாக இருப்பதைப் பார்க்கின்றோம்(ஒரு காலத்தில் புகழ்பெற்று இருந்த ஊரின் இன்றைய நிலை இது மனிதனுக்கும் பொருந்தும்) சிராப்பள்ளி என்று பின்னால் பெயர் வரக் காரணம் சமயங்களின் தாக்கமே.சமணர்கள் அதிகம் இப்பகுதியில் வாழ்ந்து மக்களுக்கு கல்வி முதலிவற்றைப் போதித்ததால் இப்பெயர் வந்தது என்று கூறுகின்றனர் பள்ளி என்பதற்குப் பொதுவாக வாழுமிடம் இல்லது தங்குமிடம் என்று பொருளுண்டு( பள்ளிவாசல், பள்ளி கூடம்,பள்ளியறை இங்கு வரும் பள்ளிகள் எல்லாம் பக்குவப்படுத்துதல் அல்லது பக்குவப்படுதல் என்ற பொருளில் வரும்)

மூன்று தலையை உடைய அசுரன் இங்கு உள்ள இறைவன் வழிப்பட்டமையால் இப்பெயர் வந்தது எனப் புராணங்கள் கூறுகின்றன.

சிராப்பள்ளியைப் பற்றி ஆய்வு செய்த தி.வை சாதாசிவபண்டாரத்தார்,கி.பி.5-ஆம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமணதுறவிக்ள தங்கி தவம் புரிந்துக்கொண்டிருந்தனர்.அவர்களுள் சிரா என்னும் பெயருள்ள முனிவர் தலைமை முனிவராக இருந்து ,மற்ற முனிவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.அவர் பெயராலேயே அவ்வூர் சிராப்பள்ளி என்று அழைக்கப்பெற்றது என்று கூறுகின்றார்.பின்பு நாம் எதையுமே பக்தி கண்ணோட்டத்துடன் தானே பார்ப்போம் ,அதனால் பிற்காலத்தில் சிராப்பள்ளி என்பது திரு என்னும் சிறப்பு பெயர் கொடுக்கப்பெற்று திருச்சிராப்பள்ளி என வழங்கப்பெற்றது.இன்று அதுவும் மருவி திருச்சி என வழங்கப்பெறுகின்றது.(பொருளில்லாமலே பொருளைத் தெரியாமலே திருச்சி திருச்சி என்று வழங்குகின்றோம்,இப்படி எல்லாவற்றையும் சுருக்கி சுருக்கி கொண்டே இருந்தால் எதுவுமே பொருளில்லாமல் போய்விடும்,மனித மனங்களும் கூட)

நன்றி http://www.sekalpana.com/

வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்),

Posted on : 01-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

முனைவர் இரா.குணசீலன்

சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாமல் தலைவன், தலைவி செவிலி, நற்றாய் என்று சுட்டப்பெற்ற சங்ககால அகவாழ்வியலின் பதிவுகள் பழந்தமிழரின் வாழ்வியல் இலக்கணங்களாக இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

அகவாழ்க்கையை அகத்திணைகள் உணர்த்துகின்றன.
அகவாழ்க்கை களவு(காதல்) கற்பு (திருமணத்துக்கு பின்)
என இரு கூறுகளைக் கொண்டது.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகவும் கைக்கிளை பெருந்திணை என்னும் திணைகளும் அகத்திணைகளாகவே கொள்ளப்படும். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நிலங்கள் கிடையாது.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு பாலைத் திணை முல்லையும் குறிஞ்சியும் தன்னிலையில் திரிந்த் நிலையாகும்.

பண்டைக் காலத்தில் கிடைத்த சங்கப்பாடல்கள் எந்த விதமான வகைபாடும் இன்றியே கிடைத்தன.

சங்கப்பாடல்கள் பாடபட்ட காலம் வேறு தொகுக்கப்பட்ட காலம் வேறு.
தொகுக்கப்பட்ட போது முழுமையான நெடும்பாடல்களைத் தொகுத்து பத்துப்பாட்டாக்கினர். எஞ்சிய பாடல்களை அகம், புறம் என்னும் பெரும்பாகுபாட்டுக்குள் எட்டுத்தொகையாக வகுத்தனர். அகப்பாடல்களில் ” முதல் – கரு – உரி என்னும் இலக்கண மரபுகளைக்கொண்டு திணைப்பாகுபாடு செய்தனர்.

முதல் என்பது நிலம் – பொழுது என்பதன் இயல்பு கூறுவதாகும்

கரு
என்பது அந்ததந்த நிலத்துக்கான தெய்வம், உணவு, பறை, யாழ், விலங்கு, பறவை போன்ற கூறுகளைக் கூறுவது

உரிப்பொருள் என்பது அந்த நிலத்துக்கு உரிய மாந்தர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு
கூடல்
ஊடல்
பிரிதல்
இருத்தல்
இரங்கல் என்ற வகைப்பாடு பெறுவதாகும்.இதனை,

இந்த அட்டவணைகள் விளக்கும்.

இட்டவி

Posted on : 01-01-2010 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

முனைவர் கல்பனாசேக்கிழார்


நம் தமிழ்நாட்டின் அனைவரும் விரும்பி உண்ணக்கூடியதும்,தொல்லை இல்லாத உணவு எது என்றால் இட்டிலி என்று கூறிவிடலாம்.இந்த பெயர் எப்படி வந்தது என்று சிந்திப்போமா?
இட்டலி,இட்லி,இட்டிலி,இட்டெலி என்றெல்லாம் கூறுகின்றோம் இதில் எது சரியென்று எண்ணியிருக்கோமா!

இட்லி,இட்டெலி என்று கூறுவதைக்காட்டிலும் இட்டிலி என்று கூறுவதே பொருத்தமுடையது என்பர்.காரணம் ‘ட்’ என்னும் வல்லினப் புள்ளியெழுத்துக்கு அடித்து அதே உயிர்மெய் வருவதே இலக்கணமுறைமை ஆகையில் இட்டலி என்பது சரியென்பர்.
கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்கள் செல்லமும் சிறுமியும் என்னும் தலைப்பில் ஒரு பாடல் இயற்றிருப்பார்கள்.

மொழியும் வளமும் – 9

Posted on : 06-12-2009 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature, கட்டுரைகள் (ARTICLES)

0

களவு

குறியிடம் பிழைத்தல்

“ஒரு பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே”–

(வைரமுத்து)

ளவில் தோழியின் பங்கு பற்றி முன்னர்க் கண்டோம். குறியிடத்தில் தலைவியுடன் துணையாக வருவதும் அல்லது தலைவனிடம் தலைவியின் செய்திகளைச் சொல்வதும் தோழியே!

இரவுக்குறியில் வந்து தலைவியைக் காணாது கலங்கி நிற்கிறான் தலைவன். அப்போது அவனிடம், “உயர்ந்த மலைநாட்டின் தலைவனே! உன் வாக்குறுதிகள்  ஒழிந்து போகட்டும். அவை பாழ்வாக்குகளாயின. வழியில் எதிர்ப்படும் துன்பங்களைப் பேணாது,  பூந்தாள்கள் நெருங்கிய கற்கள் நிறந்த சிறுவழியினூடே, நீ இரவில் வந்து இவளின்  தேமல் நிறைந்த, திரண்டு விளங்கும் மார்பினைத் தழுவிச் சென்றதால் நறுநாற்றம் நிறைந்த அவளது தோளில் வண்டுகள் மொய்த்தன. அதுகண்டு ஐயுற்ற தாயோ விழிகளில் ஐயமும் சினமும் தோன்ற, “முன்னரும் இவ்வண்ணம் நடந்ததுண்டோ” என வினவினாள். அதற்கு மறுமொழி அளிக்க இயலாமல் திகைத்து என் முகம் நோக்கினாள் இவள். என் தோழியான உன் காதலியையும் உங்கள் காதலையும் காப்பாற்ற, ஆங்கு மணம் பரப்புதற்காய் எரிந்து கொண்டிருந்த சந்தனக் கொள்ளியைக்காட்டி, இதிலிருந்து வந்த வண்டுகள் இவளை மொய்த்தன என்றேன். தாய் ஐயுற்றதால் தலைவி இற்செறிக்கப்பட்டாள்; அதனால் அவள் வாராள்”. என்றாள் தோழி..

புகாரி என்றால் என்ன?

Posted on : 06-11-2009 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

என் பெயர் புகாரி. என் தந்தை எனக்கு அன்போடு வைத்த பெயர். புகாரி என்று ஏன் பெயர் வைத்தார் என்று எனக்குத் தெரியாது. சொல்லும்போது அதன் உச்சரிப்பு அவரை ஈர்த்திருக்கலாம். அதன் பொருளில் மயங்கி வைத்திருக்கலாம். அல்லது எங்கோ ஒரு நண்பர் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனின் பெயர் புகாரி என்று கேட்டு, அன்றே தன் பிள்ளைக்கும் அதே பெயரைச் சூட்டவேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கலாம். ஆனால் எது உண்மை என்று நான் கேட்டுத் தெரிந்துகொள்ள என் தகப்பனார் உயிரோடு இல்லை. என் ஒன்பதாவது வயதிலேயே நான் போகிறேன் என்று ஒருவார்த்தை என்னிடம் கூறாமலேயே போய்விட்டார். அவருக்கு ரொம்பப் பிடித்தது அதனால் புகாரி என்று பெயர் வைத்தார் என்று என் அம்மா ஒற்றை வரியில் தன் விளக்கத்தை முடித்துக்கொண்டார்.
நான் என் பெயருக்கான பொருள் தேடி அலைந்தேன். ரஷ்யாவில் புகாரா என்ற இடத்திலிருந்து முகமது என்ற ஓர் இமாம் அரபு நாடு வந்து நபிகளின் வரலாறு அறிந்து ‘ஹதீஸ்’ என்னும் குறிப்புகள் தொகுத்தார். நபிகள் வாழ்வில் நடந்ததாகவும் நபிகள் கூறியதாகவும் இவர் தொகுத்த அந்தக் குறிப்புகள், ஆதாரப்பூர்வமானவை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவரை இமாம் முகமது புகாரி என்று அழைப்பார்கள். அதாவது புகாரி என்பது புகாராவிலிருந்து வந்தவர் என்று பொருள் கொண்டது. அது அவருக்குக் குடும்பப் பெயர் ஆனது.

நான் புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனா என்றால் சத்தியமாய் இல்லை.

ஆக, நான் புகாராவிலிருந்து வந்தவனும் அல்ல; புகாரி குடும்பத்தைச் சேர்ந்தவனும் அல்ல. ஒரு குடும்பப் பெயர் எனக்கு முதல் பெயராய் அமைந்திருக்கிறது. எனவே பொருளை நாமே உருவாக்க வேண்டியதுதான் என்று முடிவுசெய்தேன்.

அன்புகெழுமிய தோழி தில்ஷாத்திற்கு

Posted on : 30-10-2009 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

- -நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். ஸயீத் பி.ஏ., பி.எல்.,

அன்புகெழுமிய தோழி தில்ஷாத்திற்கு ரமீஜா வரைவது.  ஆண்டவன் உனக்கு சாந்தியும், சமாதானமும் தந்தருள்வானாக!

திருமணத்திற்கு முன் நாம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தது, நாம் இருவரும் திருமணமாகி கணவர் இல்லம் சென்று விட்டோம்.  புல மைல்களுக்கப்பால் பிரிந்து வாழும் நாம் பல வருஷங்களாக சந்திக்க முடியாமல் போயிற்று.  நாம் நேரில் தான் சந்தித்து அளவளாக இயலாவிட்டாலும் கடிதத்தொடர்பு மூலமாவது நம் நட்பை வளர்த்துக் கொண்டிருக்கலாமல்லவா! தன் மனத்தின் மகிழ்ச்சியையோ அல்லது துக்கத்தையோ உற்ற தோழியிடம் சொன்னால் தான் மனம் அமைதியடையும்.  நான் உன் முகவரியை அடையமுடியவில்லை.  அடிக்கடி அலுவலக மாற்றலின் காரணமாக நம்மைப் போன்ற குடும்பத்தினர் வாழ்வு, புகைவண்டி பிரயாணம் போல் இருக்கிறது.  இருவருக்கும் கடிதத் தொடர்பு தொடர்ந்து நடக்கும் வண்ணஞ் செய்யத்தான் நான் இதை எழுதுகிறேன்.

அன்புள்ள தம்பிக்கு,

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

அன்புள்ள தம்பிக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.  இறைவன் அருளால் நலம்; ; நலமறிய ஆவல்.

சென்ற கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த அன்பு வேண்டுகோளின்படி நீயும் உனது நண்பர்களும் உற்சாகமுடன் மீலாத்விழா வெகு சிறப்பான முறையில் கொண்டாடியது அறிந்து மகிழ்ந்தேன் ஒரு சில தவிர்க்க முடியாத வேலைகளின் காரணமாக அப்புனித விழாவில் நான் பங்கு பெறும் பேறு கிடைக்காமல் போய்விட்டது.  இது போன்ற இஸ்லாமியத் திருநாட்களில் நீங்கள் விழா நடத்தும் போது உங்களில் பலர் மேடையேறிப் பேசுவது மிக சிறப்பாக இருக்கும்.

இஸ்லாத்தைப் பற்றி, அப்புனித மதத்தின் தீர்க்கதரிசி முஹம்மது நபி அவர்களைப் பற்றி, பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனும் திறம் பெற்றிருக்க வேண்டும்.  மற்ற மத நண்பர்களோ நம் மதத்திலேயே நமது நாகரிகம், கலை, பண்பாடு முதலியவற்றை அறியாத பாமர மக்களோ நம்மிடம் விளக்கம் கேட்கும் போது கொஞ்சமும் தயங்காது விரிவுரை தருவதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இதற்குப்பல வழிகள் இருக்கின்றன.

பொதுவாக ஒவ்டிவாரு முஸ்லிம் கிராமத்திலும் சங்கங்கள் இயங்கிவருகின்றன.  திருமண வைபவங்களில் கலந்து பணியாற்றுவதையே பிரதானக் கடமையாக அவைகள் கருதுகின்றன.  அப்படி இல்லாது இன்னும் பல பணிகளில் அவைகள் ஈடுபட வேண்டும்.

முகம் மூடி அகம் திறப்பவர்கள்

Posted on : 29-10-2009 | By : mohamedali | In : இலக்கியம்/Litrature

0

முகமூடிகளாய் வந்து, இணையத்தில் புகுந்து விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன்.
எனக்குள்ளும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த பலரின் முகத்தையும் நான் காட்ட
விரும்புகிறேன். அதுதானே நான்?

என்னை
அன்புடையோனாகப் பார்ப்பவர்கள்
அன்புடன் நிர்வாகியாகப் பார்ப்பவர்கள்
கருணையுடையோனாகப் பார்ப்பவர்கள்
பலவும் எழுதும் கவிஞனாகப் பார்ப்பவர்கள்
காதல் கவிஞனாக மட்டுமே பார்ப்பவர்கள்
தமிழ்ப் பற்றாளனாகப் பார்ப்பவர்கள்
கிரந்தம் விரும்புவதால் தமிழ் விரோதியாகப் பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வியப்போடு பார்ப்பவர்கள்
கருத்தாடலில் வெறுப்போடு பார்ப்பவர்கள்
தனிமனித கீறலை விரும்பாதவனாகப் பார்ப்பவர்கள்
மதங்கள் கடந்த கடவுளையே நேசிப்பவனாகப் பார்ப்பவர்கள்

இப்படியே அடுக்கலாம்…..

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி முகம் காட்டி நான் நிற்கலாம்தான். ஆனால் இவை
அனைத்தின் கலவைதானே உண்மையான நான்? என் நிஜமுகத்தோடு, அது எத்தனை
அழகாயிருந்தாலும் சரி எத்தனை அசிங்கமாக இருந்தாலும் சரி, என்னைக்
காட்டிக்கொள்வதுதானே சரி. ஏன் பயப்படவேண்டும்? யாருக்குப் பயப்படவேண்டும்?

என் புத்திசாலித்தனங்களை மட்டுமல்லாமல் என் முட்டாள்தனங்களையும் சேர்த்தவன்
தானே நான் என்று காட்டிக்கொள்வதில் எனக்கு நாணம் வரவில்லை. ஆனால் இயன்றவரை
முட்டாள் தனங்களிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று எண்ணவாவது செய்கிறேன்.

கண்ணதாசன் வனவாசத்தில் இயன்றவரை தன் நிஜ முகம் எழுதினார். காந்தி அவருக்கு அந்த
எண்ணத்தைத் தந்தார் என்றும் சொல்கிறார். கண்ணதாசன் உண்மையான முகம் நமக்குத்
தெரிகிறது. போலியற்ற நிலையில்தான் மனிதர்கள் உயர்வானவர்கள் என்பது என் கருத்து.

கலாச்சாரம் பண்பாடு, கௌரவம், பெறுமை என்ற போர்வைக்குள் சுயம் கொன்று ஆடும்
கூத்து எனக்கு அருவறுக்கத்தக்கதாய்ப் படுகிறது.

நான் நிச்சயமாக எவரையும் குறைகூறவில்லை. என் மனமும் முகமூடி நாடியது. முயன்றும்
பார்த்தேன், பின் அதைக் கைவிட்டேன். நான் நானாக இருப்பதால் எவருக்கேனும்
பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றே பொருள், இதில்
இழப்பு என்ன இருக்கிறது என்று திடமாக உணர்ந்தேன்

அன்புடன் புகாரி