Featured Posts

  • Prev
  • Next

தி.மு.க. ஆட்சிக்கு இஸ்லாமியர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted on : 31-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

சென்னை: தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினரக தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசுகையில்:

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக எப்போதும் விளங்குபவர் கருணாநிதி. 31 ஆண்டுகளாக நானும் தொடர்ந்து இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன். என்னுடைய  கோரிக்கை என்னவென்றால்,  அழைப்பிதழில் என்னுடைய பெயரை ஒவ்வொரு முறையும் சிறப்பு விருந்தினர் என்று குறிப்பிடுகிறீர்கள். நான் சிறப்பு விருந்தினர் அல்ல. நான் உங்களின் ஒருவனாக இருந்து இந்த வாய்ப்பை பெற்றுவருகிறேன். எனவே, அடுத்த ஆண்டாவது உங்களின் ஒருவனாக என்னைக் கருதி பங்குபெறும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும்.

கழக ஆட்சியில் தான் மீலாது நபிக்கு முதன் முதலாக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. உருது பேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் கருணாநிதி தான், அண்ணா சாலையில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டியதும் அவர் தான்.

900 ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவமனை – காஞ்சீபுரம் அருகே கண்டுபிடிப்பு!

Posted on : 30-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

900 ஆண்டுகளுக்கு முன் 15 படுக்கைகளுடன் மருத்துவமனை இருந்தது பற்றிய கல்வெட்டு காஞ்சீபுரம் அருகே கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம் அருகே உள்ள திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆலய சுவரில் இருந்து பழைய கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டில் 900 ஆண்டுகளுக்கு முன் அந்த கோவிலுடன் இணைந்து ஒரு மருத்துவமனை செயல்பட்டது பற்றி அரிய தகவல் கிடைத்து உள்ளது.

இதுபற்றி தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறியதாவது:-

பாலாறு, வேகவதி ஆறு மற்றும் செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் கரையோரம் திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கல்வெட்டுகள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் இந்த ஆலயத்தில் வீர சோழன் என்று பெயரிடப்பட்ட 15 படுக்கை கொண்ட மருத்துவமனை இருந்தது தெரியவந்துள்ளது. இதில் நிறைய ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். கோதண்டராமன், அஸ்வத்தமன், பகத்தன் என்ற அறுவை சிகிச்சை நிபுணர்களும், பல செவிலியர்களும் ஊழியர்களும் இங்கு பணியில் ஈடுபட்டு வந்து இருப்பது தெரியவருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் எலும்புருக்கி நோய், சிறுநீரக கோளாறு, மூலவியாதி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து உள்ளது.

தாம்பத்யம் சிறக்க சிறந்த வழி : ஆய்வு முடிவு

Posted on : 23-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

புகைபிடிக்கும் பழக்கம் உடைய கணவன்மார்கள் புகைபிடிப்பதை நிறுத்தி கொண்ட பின் தாம்பத்தியத்தில் அதிக இன்பம் கொள்வதாக ஹாங்காங் பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 28.1 சதவீத புகைபிடிக்கும் ஆண்கள் விறைப்பு தன்மையில் குறைவினை உடையர்கள், புகை பிடிப்பதை நிறுத்திக்கொண்ட பின் அதில் 91.5  சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் உதவிய பேராசிரியை சோஃபியா சான் “சீனா மற்றும் ஆசியாவில் ஆண்களுக்கு விறைப்புதன்மையில் மந்தம் பரவலாக காணப்படுகிறது” என்றும் “இந்த ஆராய்ச்சி புகைபிடிப்பதை நிறுத்த உதவும்” என்றும் கூறியுள்ளார்.

இவருடன் ஆராய்ச்சியில் ஈடுபட்ட லாம் தை-ஹிங் கூறுகையில் “புகைபிடிப்பவர்கள் அதன் மூலம் ஏற்படும் பின் விளைவுகளை தெரிந்து கொண்டு, விறைப்பில் குறைவு ஏற்படுதல் மற்றும் இன்னபிற பாதிப்புகளில் இருந்து உடனே மாற்றம் காண புகைபிடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றுள்ளார்.

30 முதல் 50  வயதுடைய 700பேரை மூன்று வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் இவ்வாறு நிருபிக்கப்பட்டுள்ளது.

http://www.inneram.com/2010082310229/quitting-smoke-is-boosting-sex-life

கொசு விரட்டி வெடித்தது! தீயில் கருகி தந்தை மகள் சாவு!

Posted on : 21-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

கோவை : மின்சாரக் கசிவால் கொசு விரட்டி பாட்டில் வெடித்து சிதறி தீப்பிடித்ததில் உறங்கிகொண்டிருந்த கல்லூரி மாணவி தீயில் கருகினார். இவரை காப்பாற்ற சென்ற அவரது தந்தையும் தீக்கிரையானார்.

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் அருகே காமாட்சிபுரம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் தாமஸ்(50); பாப்பம்பட்டி பிரிவில் உள்ள இரும்புக் கடை ஊழியர். இவரது மகள் அல்போன்சா(19). உக்கடம் அருகே ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி. நேற்று முன்தினம் இரவு அல்போன்சா தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் அந்த அறையில் இருந்து புகை வருவதை பார்த்த தாமஸ், அவரது மனைவி ஜான்சியும்  உடனே அந்த அறைக்கு சென்ற போது படுக்கையுடன் சேர்ந்து மகளும் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அறையிலிருந்து வந்த புகையின் நெடியால் மயங்கி கணவனும், மனைவியும் விழுந்தனர்.

நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிவதை பார்த்து பக்கத்து வீட்டார், விரைந்து சென்று மயங்கி கிடந்த தாமசையும், ஜான்சியையும் எடுத்து வந்து முதலுதவி செய்தனர். இதன் பின், அப்பகுதி மக்கள், வீட்டில் நுழைந்து பார்த்தபோது மாணவி அல்போன்சா தீயில் கருகி இறந்து கிடந்தார். இத்தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ அணைத்தனர். அப்போது, மயக்கம் தெளிந்து எழுந்த தாமஸ் அலறியபடி மீண்டும் வீட்டினுள் சென்றார். அப்போது தீயில் அகப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், மாணவி அல்போன்சா தூங்கிய அறையில் கொசு விரட்டி பாட்டில் வெடித்து சிதறியதால்  அதன் நெடியில் மயக்கமடைந்து  தீயில் கருகி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்

http://www.inneram.com/2010082010173/mosquito-repeller-blasts-daughter-and-father-burned

மன்ஹாட்டன் மசூதி கருத்துக்கள்: வருத்தமில்லை – ஒபாமா!

Posted on : 19-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

நியூயார்க் நகரில் சென்ற 2001 செப்டம்பர் 11 அன்று தகர்க்கப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்துக்கு அருகில் நிறுவப்பட்டுவரும் பல்லடுக்குக் கட்டடத்தின் தரைத்தளத்தில் மசூதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த மசூதி அமைப்பதற்கு வலதுசாரி அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போதும், அமெரிக்க அதிபர் ஒபாமா தனது ஆதரவை நல்குவதாக அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, ஒபாமாவின் இக்கருத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு “அமெரிக்காவை அந்தரத்தில் ஒபாமா விட்டு விட்டார்” என்று கிண்டல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தனது கருத்தை சற்றே மாற்றிய ஒபாமா மதச் சுதந்திரத்துக்குத் தான் தனது ஆதரவு என்றும் இரட்டைக் கோபுரம் இருந்த இடத்திற்கு மிக அருகே மசூதிகளை நிறுவுவது பதற்றத்தை உண்டுபண்ணக்கூடும் என்றும் கருத்தை மாற்றிக் கூறினார்.

இந்நிலையில் NBC  தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் முன்னர் தான் தெரிவித்த கருத்துக்காக வருந்தவில்லை என்றும், அக்கருத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

http://www.inneram.com/2010081910150/no-regrets-on-manhattan-mosque-issue-obama-says

100 ரூபாயில் ஏழே நாட்களில் ரேஷன் கார்டு: தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

Posted on : 18-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

சென்னை: வெறும் இருப்பிட ஆதாரத்திற்காக மட்டும் ரேஷன் கார்டு வேண்டுவோர், ரேஷனில் எந்த பொருளும் தேவைப்படாதவர்கள்,  ‘தத்கல்’ முறையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் போட்டோவுடன் பூர்த்தி செய்து, கருவூல கணக்கில் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இருப்பிட முகவரிக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்து, ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

ஏழு நாளில் வெள்ளை நிறத்திலான ரேஷன் கார்டு வழங்கப்படும். இவற்றை பொருட்கள் பெறும் கார்டாக மாற்றம் செய்ய முடியாது என, அரசு தெரிவித்துள்ளது

http://www.inneram.com/2010081810119/100

பிரதமர் செயலை இப்போதே செய்கிறேன்: ராகுல்

Posted on : 14-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

மைசூர்: வரும்காலத்தில் பிரதமர் ஆனால் என்ன செய்வேனோ அதை நான் இப்போதே செய்து கொண்டு இருக்கிறேன் என, ராகுல்காந்தி கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி எம்.பி. மைசூர் பெங்களூர் ரோட்டில் உள்ள செயின்ட் பிலோமினா கல்லூரியில் இந்திய தேசிய மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி:

போராட்ட சுதந்திரம், பேச்சு சுதந்திரம், உரிமை சுதந்திரம் என்றால் என்ன என்பது பற்றி இளைஞர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அதன்படி நடக்க வேண்டும். நமது நாட்டில் உயர்கல்வி கற்றுக்கொண்டு, வெளிநாட்டில் சென்று சேவை செய்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது. நமது நாட்டிலேயே பணியாற்ற வேண்டும். மேலும் வெளிநாட்டில் உயர்கல்வி கற்றுக்கொண்டு, அதை பயன்படுத்தி நமது நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

நமது நாட்டின் முதுகெலும்பாக கல்வி, விவசாயம் ஆகியவை உள்ளது. எனவே கல்வி, விவசாய முன்னேற்றத்துக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டு, அதன் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும். இந்திய விவசாயிகளுக்கு வெளிநாட்டு விவசாய முறைகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும். மேலும் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு, அதன் மூலமும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை களைய இளைஞர்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும். அதன்மூலம் நமது நாடு வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றார். பின்னர் அவரிடம்,  நீங்கள் பிரதமர் ஆவீர்களா? அவ்வாறு பிரதமர் ஆனால் மக்களுக்கு என்ன செய்வீர்கள்?’ என்று மாணவர் ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில்,  நான் வரும்காலத்தில் பிரதமர் ஆனால் என்ன செய்வேனோ அதை நான் இப்போதே செய்து கொண்டு இருக்கிறேன்’ என்று சிரித்தபடி சொன்னார்.

இன்போசிஸ் நிறுவனம் ஒரு திருட்டு காயலான் கடை : அமெரிக்க செனட்டர் பாய்ச்சல்

Posted on : 10-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

நியூயார்க் : இன்போசிஸ் போன்ற இந்திய ஐ.டி. முண்ணணி நிறுவனங்களை திருட்டு கார்களிலிருந்து பாகங்களை பிரித்தெடுத்து விற்கும் காயலான் கடைகளுக்கு ஒப்பிட்டு அமெரிக்க செனட்டர் சார்லஸ் செனட் விவாதத்தின் போது கூறினார். மேலும் பாதுகாப்பற்ற அமெரிக்க – மெக்சிகோ எல்லை பகுதியை மேம்படுத்த 600 மில்லியன் டாலர் தேவைப்படுவதால் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் H1-B விசாக்களின் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய கடிகாரம், ரமழானில் பரிசீலிக்கப்படவுள்ளது

Posted on : 10-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

உலகின் மிகப் பெரிய கடிகாரம், ரமழானில் பரிசீலிக்கப்படவுள்ளது

சர்வதேச குழு: சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற உலகின் மிகப் பெரிய மணிக்கூட்டுக் கோபுரம், புனித ரமழான் மாதத்தின் முதல் வாரத்தில் பரீட்சித்துப் பார்க்கப்படவுள்ளது.

ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து பொறியியலாளர்கள் மற்றும் ஐரோப்பாவையும் ஏனைய நாடுகளையும் சேர்ந்த நிபணர்கள் குழுவினால் விருத்தி செய்யப்பட்டுள்ள மக்கா மணிக்கூட்டுக் கோபுரச் செயற்றிட்டம், இன்னும் மூன்று மாதங்களில் முழுமைப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்படும்.

இம்மணிக்கூட்டுக் கோபுரத்தின் மொத்த உயரம் 601 மீற்றர்களாகும். கோபுரத்தின் மணிக்கூட்டினது உயரம் 251 மீற்றர்களாகும் என சவூதி பத்திரிகை ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.

http://www.iqna.ir/ta/news_detail.php?ProdID=627603

ஹஜ் பாஸ்போர்ட் பெறுவதற்கு போலீஸ் சான்றிதழ் தேவையில்லை!

Posted on : 09-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இசுலாமியர்களுக்கு போலீஸ் சான்றிதழ் இல்லாமல் 8 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி முதல் பாஸ்போர்ட் சென்னையில் வழங்கப்பட்டது.

சாதாரணமாக பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தால் முகவரி மற்றும் பிற தகவல்கள் உண்மையானவை எனச் சான்றழிக்கும் போலீஸ் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதனால் அனாவசிய தாமதம் ஏற்படுகிறது.

மக்காவுக்கு புனித ஹஜ் பயணம் வருபவர்களுக்கு சர்வதேச கடவுச்சீட்டு  அவசியம் என சமீபத்தில் சவூதி அரேபிய அரசு அறிவித்ததையடுத்து ஹஜ் யாத்ரீகர்களின் நலனுக்காக, விரைந்து பாஸ்போர்ட் வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஹஜ் யாத்திரிகர்கள் போலீஸ் சான்றிதழ் இல்லாமலேயே 8 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகத் தக்க சர்வதேச பாஸ்போர்ட் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் 8 மாதத்திற்கான தற்காலிக ஹஜ் பாஸ்போர்ட் வழங்கப்படும். நிரந்தரமாக மாற்றிக் கொள்ள விரும்பினால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிறகு போலீஸ் சான்றிதழ் உள்ளிட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்த பாஸ்போர்ட்டாக அது மாற்றித்தரப்படும்.

இதுகுறித்து அனைத்து வட்டார பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் மத்திய வெளியுறவுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,

ஹஜ் கமிட்டி கவர்எண் உள்ள அனைத்து ஹஜ் விண்ணப்பத்தாரர்களுக்கும் புதிய திட்டப்படி உடன டியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும். தனியார் ஹஜ் பயண முகவர்களுக்கு 45 ஆயிரம் பயண கோட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.ஆகஸ்டு 13-ம் தேதிக்குள் தகுந்த நிரூபண ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னையில் புதிய பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்த ஒருவருக்கு15 நாட்களுக்குள்  பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக துணை பாஸ்போர்ட் அதிகாரி K.S. தவுலத் தமீம் அறிவித்தார்.

http://www.inneram.com/201008099912/police-certificataion-not-necessary-for-haj-travellers

ஈராக்கை ஓநாய்களிடம் விட்டு விட வேண்டாம் : சதாமின் வலது கரம் எச்சரிக்கை

Posted on : 08-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

இனியவன்

லண்டன் : அமெரிக்கா தான் அறிவித்துள்ள படி படைகளை ஈராக்கிலிருந்து வாபஸ் பெற்றால் ஈராக் ஓநாய்களிடம் சிக்கி விடும். புஷ் செய்த தவறுக்கு ஒபாமா பரிகாரம் தேட வேண்டுமே தவிர இன்னொரு தவறை செய்து விட கூடாது என்று கார்டியன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹீசேனின் வலது கரமாய் திகழ்ந்த் ஈராக் முன்னாள் துணை அதிபர் தாரிக் அஜீஸ் கூறியுள்ளார்.

கடந்த ஏழரை வருடங்களாக சிறையில் வாடும் தன்னால் எந்த ஒரு சாதாரண குடிமகனோ, மதவாதியோ அல்லது ராணுவ வீரனோ பாதிக்கப்படவில்லை என்றும் ஒரு நபர் கூட அப்படி தான் குற்றம் இழைத்ததாக புகார் அளிக்கவில்லை என்றும் கூறினார்.

தான் புரட்சிகர படையின் உறுப்பினர், பாத் கட்சியின் தலைவர்களில் ஒருவர், ஈராக்கின் துணை பிரதமர் போன்ற பதவிகளை வகித்தேன் என்பதை ஒத்து கொண்ட தாரிக் அஜீஸ் தனக்கு மனித இனத்துக்கெதிரான குற்றம் புரிந்ததற்காக விதிக்கப்பட்ட 15 ஆண்டு கால தண்டனை அநீதியானது என்றும் கூறினார்.

108 வயதுப் பாட்டியின் 23 ஆவது திருமணம்

Posted on : 04-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

Tags: , , ,

0

23 தடவைகள் திருமணம் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 108 வயது மலேசிய வயோதிப மாதான வூக் குன்டர், குழந்தையொன்றை பெற்றுக் கொள்ளும் முகமாக தனது 23 ஆவது கணவருடன் மீள இணைந்துள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் மலேசிய “த ஸ்டார்” ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

வூக் குன்டருடன் மீள இணைந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்தமை குறித்து அவரின் 23 ஆவது கணவரான மொஹ்மட் நூர் சே மூஸா (38 வயது) விபரிக்கையில், தன்னுடைய வீட்டில் மழலையொன்று தவழ வேண்டும் என்ற தனது மனைவியின் விருப்பத்தை திருப்தி செய்ய ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.

“நாங்கள் ஏற்கனவே இதற்காக (குழந்தைக்காக) முயற்சித்தோம். ஆனால் எனது மனைவியின் வயது தடையாக இருந்தது. அதனால் நாங்கள் ஆண் குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்கத் தீர்மானித்துள்ளோம்” என்று மொஹ்மட் நூர் சே மூஸா தெரிவித்தார்.

மொஹ்மட் நூர், போதைவஸ்துக்கு அடிமையான நிலையில் 18 மாத சிகிச்சை பெற்று அண்மையிலேயே வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

குழந்தையொன்றின் பிரசன்னமானது கோலா பெராங் நகரிலுள்ள, கம்புங் புகித் டொக் பட் எனும் இடத்திலுள்ள தமது இல்லத்தை மகிழ்ச்சிகரமான ஒன்றாக மாற்றும் என நம்புவதாக மொஹ்மட் நூர் குறிப்பிட்டார்.

தனது மனைவி குழந்தையொன்று வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாகவும் குழந்தைக்கான பொருட்களை சேகரிப்பதில் மிகவும் நாட்டங் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

போதைவஸ்துக்கு அடிமையானமை காரணமாக தனக்கும் தனது மனைவிக்குமிடையே கருத்து முரண்பாடு நிலவி பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்த மொஹ்மட், சிகிச்சைக்கு பின் தனது நிலை மாறியுள்ளதாக தெரிவித்தார்.

“நான் இப்போது ஒரு மாறிய மனிதன். நான் எனது மனைவியுடன் கழிக்கும் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சிகரமாக உணர்கிறேன்’” என்று அவர் கூறினார்.

மொஹ்மட் நூர் 5 வருடத்திற்கு முன் தனது இளமையான மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்று வயோதிப வூக் குன்டரை திருமணம் செய்ததன் மூலம் உலகளாவிய ரீதியில் பரபரப்பாகப் பேசப்பட்டார்.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/08/108-23.html

மக்கா குர்ஆன் போட்டியில் 8 வயது சிறுவன் வெற்றி

Posted on : 02-08-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

மக்கா குர்ஆன் போட்டியில் 8 வயது சிறுவன் வெற்றி

சர்வதேச குழு: புனித மக்கா நகரில் சிறுவர்களுக்கென நடத்தப்பட்ட குர்ஆன் மனனப் போட்டியில், எட்டு வயது நிரம்பிய சிறுவனொருவன் முதலிடம் பெற்றுள்ளான் என அல்மதீனா தினசரி தெரிவிக்கின்றது.

இப்போட்டி, புனித அல்குர்ஆனை மனனமிடுவதற்கான அறக்கொடைச் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், 2000 சிறுவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

வெற்றி பெற்ற சிறுவன், போட்டியில் கேட்கப்பட்ட அனைத்து வினாக்களுக்கும் சரியான விடைகளை அளித்ததுடன், ஓதல் மற்றும் தஜ்வீத் சட்டங்களில் 100 புள்ளிகளைப் பெற்றிருந்தான் என அச்சங்கத்தின் தலைவர் நவாப் அல்காலிப் தெரிவிக்கின்றார்.

ஜனாப் காலிப் மேலும் குறிப்பிடும் போது, சிறியதொரு மாணவன் இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளமையானது, குர்ஆனிய நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்காக எமது சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் அடைவ மட்டத்தை காண்பிக்கின்றது என்றார்.

புனித அல்குர்ஆன் மனனத்திற்கான அறக்கொடை சங்கம் இது வரை முழுக் குர்ஆனையும் மனனமிட்ட 800 ஹாபிழ்களையும் 15 ஜுஸ்உகளை மனனமிட்ட 1500 ஹாபிழ்களையும் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://iqna.ir/ta/news_detail.php?ProdID=622231

வணிகர் சங்க பேரமைப்பு உதயம்

Posted on : 28-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கலைக்கப்பட்டு புதிதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.வணிகர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் பேரவையின் தலைவர் வெள்ளையன் நீக்கப்பட்டதாகவும் இன்று காமராஜ் அரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.புதிய அமைப்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மாநிலத் தலைவராக ஏ.எம்.விக்கிரமராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக கே.மோகன், பொருளாளராக அரிகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*தற்காலிகமாக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட த.வெள்ளையன் பேரவை விதிகளுக்கும் வணிகர்களின் நலனுக்கும் முற்றிலும் முரணாக தொடர்ந்து செயல்பட்ட காரணத்தால் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்குவது என ஏகமனதாக பொதுக்குழு தீர்மானிக்கிறது.

130 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

Posted on : 26-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

ஜோர்ஜியாவிலுள்ள பின்தங்கிய மலைப்பிராந்திய கிராமமொன்றில் வசிக்கும் பாட்டியொருவர் வியாழக்கிழமை தனது 130 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

அன்ஸா கவிசவா என்ற மேற்படி பாட்டி, உலகில் உயிர்வாழும் மிகவும் வயதான நபர் தானே என உரிமை கோரியுள்ளார்.

திபிலிஸி நகரின் மேற்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சசினோ என்ற கிராமத்தில் 40 வயதான தனது பேரனுடன் அன்ஸா கவிசா வாழ்ந்து வருகிறார்.

தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அன்ஸா கவிசவா, தனது குடும்பத்தினருடன் இணைந்து சோளக்கஞ்சி மற்றும் வாசனையூட்டப்பட்ட இறைச்சி என்பவற்றை உண்டு மகிழ்ந்தார். அவர் போர் மற்றும் புரட்சி என்பவற்றின் போது தனது பிறப்புச் சான்றிதழை இழந்த போதும், அவரது கடவுச்சீட்டு ஆவணங்கள் அவரது வயதை உறுதிப்படுத்துவதாக ஜோர்ஜிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தள்ளாத வயதிலும் சிவப்பு உதட்டுச் சாயத்தை பூசுவதில் ஆர்வம் காட்டும் அன்ஸா கவிசவா விபரிக்கையில், “நான் எப்போதும் ஆரோக்கியமாகவும் வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்து கொண்டும் இருக்கின்றேன்” என்று கூறினார்.

உலகில் வயதான நபர்தானே என அன்ஸா கவிசவா உரிமை கோருவதற்கு முன்னர் பிரான்ஸைச் சேர்ந்த இயுஜினி பிளன்சார்ட் என்ற 114 வயது பெண்மணியே உலகின் வயதான நபராக அடையாளங் காணப்பட்டிருந்தார்.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/07/130.html

“டயானா கொலை” வழக்கறிஞர் தகவலால் பரபரப்பு

Posted on : 24-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கார் விபத்து மூலம் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவ்வழக்கை விசாரித்த புலனாய்வுத்துறை வழக்கறிஞர் மைக்கேல் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில் கார் டிரைவர் பாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் பாலின் வங்கிக் கணக்கில் பல கோடி மதிப்பிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு டிரைவரின் வங்கிக் கணக்கில் திடீ‌ரென அதிகளவிலான பணம் மு‌தலீடு செய்யப்பட்டுள்ளது குறித்து வழக்கு விசாரணையில் ஒரு வரி கூட இடம்பெறாததது,

டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வதாகவும் மைக்கேல் தெரிவித்துள்ளார். டயானா கொலை சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த அவர் வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

மைக்கேலின் இந்த தகவலால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/07/blog-post_24.html

புகாரியின் கவிதை நூல்களும் கிடைக்கும் இடங்களும்

Posted on : 22-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

1. வெளிச்ச அழைப்புகள் (2002)

கிடைக்கும் இடங்கள்:

Murugan Book Store
5215 Finch Avenue East
Scarborough, ON M1S 0C2
Canada
001-416-321-0285‎

மணிமேகலைப் பிரசுரம்
த.பெ. எண்: 1447
7 (ப.எண்: 4), தணிகாசலம் சாலை
தியாகராய நகர், சென்னை – 600 017
தொலைபேசி: 91-44-2434-2926
தொலைநகல்: 91-44-2434-6082
மின்னஞ்சல்: manimekalai@eth.net
வலைத்தளம்: www.manimekalaiprasuram.com

நியூ புக் லாண்ட்
52C வடக்கு உஸ்மான் சாலை
தி. நகர், சென்னை 600 017
(பனகல்பார்க் அருகில்)
தொலைபேசி: 91-44-2815-6006

காவ்யா பப்ளிகேசன்ஸ்
14, முதல் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்
கோடம்பாக்கம்
சென்னை – 600 024
தொலைபேசி: 91-44-2480-1603
மின்னஞ்சல்: kaavyabooks@yahoo.co.in
வளைத்தளம்: www.kaavyabooks.com

உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்ரமணியன் தெரு
அபிராமபுரம், சென்னை – 600 018
தொலைபேசி: 91-44-2499-3448
செல்பேசி: 91-98-4027-1561
மின்னஞ்சல்: Sales@Uyirmmai.com
வலைத்தளம்: www.Uyirmmai.com

* கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரை

* இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன் முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல்

* டொராண்டோ கனடாவில் வெளியிடப்பட்டது

*கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருது சிறப்புப் பரிசு

2. அன்புடன் இதயம் (2003)

கிடைக்கும் இடங்கள்:

Murugan Book Store
5215 Finch Avenue East
Scarborough, ON M1S 0C2
Canada
001-416-321-0285‎

மணிமேகலைப் பிரசுரம்
த.பெ. எண்: 1447
7 (ப.எண்: 4), தணிகாசலம் சாலை
தியாகராய நகர், சென்னை – 600 017
தொலைபேசி: 91-44-2434-2926
தொலைநகல்: 91-44-2434-6082
மின்னஞ்சல்: manimekalai@eth.net
வலைத்தளம்: www.manimekalaiprasuram.com

நியூ புக் லாண்ட்
52C வடக்கு உஸ்மான் சாலை
தி. நகர், சென்னை 600 017
(பனகல்பார்க் அருகில்)
தொலைபேசி: 91-44-2815-6006

காவ்யா பப்ளிகேசன்ஸ்
14, முதல் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்
கோடம்பாக்கம்
சென்னை – 600 024
தொலைபேசி: 91-44-2480-1603
மின்னஞ்சல்: kaavyabooks@yahoo.co.in
வளைத்தளம்: www.kaavyabooks.com

உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்ரமணியன் தெரு
அபிராமபுரம், சென்னை – 600 018
தொலைபேசி: 91-44-2499-3448
செல்பேசி: 91-98-4027-1561
மின்னஞ்சல்: Sales@Uyirmmai.com
வலைத்தளம்: www.Uyirmmai.com

* கவிநாயகர் வி. கந்தவனம் வாழ்த்துரை

* இலந்தை சு. இராமசாமி அணிந்துரை

* எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணைய சரித்திரத்தில் முதன் முதலாக வெளியிடப் பட்ட நூல். தமிழ்மொழி மற்றுமென்றில்லாமல் வேறு எந்த மொழிக்குமே இணையம் வழி நிகழ்ந்த முதல் நூல் வெளியீடு இதுவே.

* சென்னையில் நிகழ்ந்த கற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் இதன் ‘தண்ணீர்’ கவிதை காட்சிக்கு வைக்கப்பட்டு மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இதன் ‘தண்ணீர்’ கவிதை பங்கேற்றுள்ளது.

* வெளியீடு – பா. ராகவனின் சபரி பதிப்பகம்

77ஆவது வயதில் கராத்தேயில் கறுப்புப் பட்டி வென்ற முதல் பெண்மணி

Posted on : 21-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

சர்வதேச ஜூஜிட்சு கராத்தேப் பயிற்சியில் 7ஆவது டான் கறுப்புப் பட்டியை முதல் தடவையாக கிரானி எனா மல்லெட் என்ற சவுத் வோல்ஷாமைச் சேர்ந்த 77 வயது பெண்மணி பெற்றுள்ளார்.

இவர் தனது கிராம மண்டபத்தில் விளையாட்டுத்துறை வகுப்புக்களை நடத்தி வருகின்றார். அத்துடன் வார நாட்களில் தினசரி  இரு தடவைகள் பாடசாலை மாணவர்கள் வீதியைக் கடப்பதற்கு போக்குவரத்து நடவடிக்கைகளிலும் உதவுகின்றார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ஜூஜிட்சு கரோத்தே முற்றாக சுயகட்டுப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சி. என் நிஜ வாழ்க்கையில் ஒரு தடவை 14 வயது சிறுவன் ஒருவன் கடையில் மிட்டாய்களைத் திருடிக்கொண்டிருந்தபோது கராத்தே திறமையை வெளிக்காட்டி அவனை மடக்கிப் பிடித்தேன்” என்றார்.

தன்னை விட அதிக எடையை சுமக்கும் …..

Posted on : 18-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

Tags: , , ,

0

தன் எடையை விட அதிக எடையுள்ள பொருட்களை, அசையாமல் எறும்புகள் சுமந்து செல்வது எப்படி என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
உழைப்புக்கும், சேமிப்புக்கும் உதாரணமாகக் கூறப்படும் உயினம் எறும்பு. இது தன் உடல் எடையைவிட பல மடங்கு அதிக எடையை சுமந்து செல்லும் தனிச்சிறப்பு கொண்டது. இதுகுறித்து, பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

அதாவது, ஒரு புல் துண்டையும், பேப்பரில் இலை போன்று செய்து அதை தோடம்பழச்சாறில் ஊற வைத்து எறும்பை எடுத்துச் செல்ல செய்தனர். பின், அது செல்லும் தூரத்தையும், விதத்தையும் ஆய்வு செய்தனர்.

முதலில், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செங்குத்தான மற்றும் சரிவான பொருட்களின் மீது ஏறி, இறங்கச் செய்தனர். பின், பக்கவாட்டில் ஊர்ந்து போகச்செய்து ஆய்வு செய்தனர். அதில், எறும்புகள் தன்னைவிட அதிக எடையுள்ள பொருட்களை அசையாமல் கொண்டு செல்வதற்கு, அதன் கழுத்தும், தலையும் உதவுகின்றன என்பது தெரியவந்தது.

எறும்பின் கழுத்தும் தலையும் இணையும் இடத்தில், “ஸ்பிரிங்” போன்ற அமைப்பு உள்ளது. இதன் மூலம், தன்னை விட நீண்ட, அதிக எடைகொண்ட பொருட்களை எறும்புகள் சுமக்கும் போது, எந்த கோணத்தில் அவை சென்றாலும், அதற்கேற்ற வகையில், தனது தலையின் நிலையை மாற்றி அமைத்துக் கொள்கிறது. இதனால், அது வைத்திருக்கும் பொருட்களில் நிலைமாறாமலும், கீழே விழாமலும் இருக்கிறது. இரையை சுமக்கும் போதும் இதே முறையைத்தான் எறும்புகள் கையாளுகின்றன.

இதுதொடர்பாக, ஆய்வாளர்கள் கூறுகையில், எறும்புகளின் கழுத்து இணைப்பின் மூலம் மிக எளிதான தனது சுமைகளை கோணம் மாற்றி வைத்துக் கொண்டு எளிதாக பயணம் செய்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

http://mrishan.blogspot.com/2010/07/blog-post_18.html

11 ஆண்டுகள் பிணத்துடன் வாழ்ந்த 91 வயது பெண்!

Posted on : 17-07-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

அமெரிக்காவைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் தனது கனவரின் பிணத்துடன் 11 ஆண்டுகளும், சகோதரின் பிணத்துடன் 1 ஆண்டுகளும் வாழ்ந்துள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் வேயலுசிங் என்ற கிராமத்தை சேர்ந்தவர் “ஜீன் ஸ்டீவன்ஸ்”(91) இவரது கணவர் பெயர் “ஜேம்ஸ்”, சகோதரியின் பெயர் “ஜூன்”.

தன் கணவர், மற்றும் சகோதரி ஜூன் ஆகிய இருவரின் மீதும் ஜீன் ஸ்டீவனுக்கு அளவுகடந்த பாசம். ஜேம்ஸ் ராணுவத்தில் பணியாற்றியவர், 1999ம் ஆண்டு மே 21ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் புதைத்து விட்டு சென்றதும், ரகசியமாக அதை தோண்டியெடுத்து வீட்டுக்கு தூக்கி வந்துள்ளார் மனைவி ஜீன்.

பின்னர் பிணம் கெடாமல் இருக்க பல ரசாயனங்களை தடவி 11 ஆண்டுகளாக பாதுகாத்து அதனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அன்பு சகோதரி ஜுனும் கடந்த ஆண்டில் இறந்தார். முன்புச் செய்ததை போலவே பிணத்தை உறவினர்கள் புதைத்த பின்னர் யாருக்கும் தெரியாமல் சகோதரியின் பிணத்தை வீட்டுக்கு கொண்டு வந்தார். ரசாயன திரவங்களை பயன்படுத்தி பாதுகாத்து வந்துள்ளார்.

இந்த விஷயம் வெளியே தெரிய போலீஸ் ஜீனிடம் விசாரணை நடத்தியது அப்பொழுது ஜீன் போலிஸிடம் கூறுகையில், “என் கணவர், சகோதரியின் இறப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உடலை அழித்து விட்டால் நினைவுகள் அழிந்து விடும். ஆனால், இப்போது பாருங்கள். கணவர், சகோதரியை தினமும் பார்க்கிறேன். அவர்களுடன் பேசுகிறேன். கொஞ்சி மகிழ்கிறேன்’’ என்கிறார்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில்: “ஜீனிடமிருந்து பிணங்களை பிரித்து வைத்துள்ளோம். அவர் மீது வழக்கு எதுவும் தொடரவில்லை” என்றார்.

ஜீன் மற்றும் அவரது சகோதரி ஜூன் ஆகிய இருவரும் இரட்டையர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : http://www.inneram.com/201007179350/91-years-old-lady-living-11-years-with-husband-sister-dead-body