Featured Posts

  • Prev
  • Next

கவிஞர் பற்றி இன்னுமொரு நினைவு

Posted on : 27-02-2010 | By : mohamedali | In : Uncategorized

Tags: , , ,

0

Dr.Rudhran

1972.. முதலாம் ஆண்டில், MBBS , BDS இரு பிரிவினரும் அப்போது ஒன்றாகப்பயிலும் காலம்.
ஏதோ ஒரு வகுப்பு.. நான் குறிப்பு எடுப்பதைப்போல் பாவனை செய்து கொண்டிருந்து விட்டு, அதிலும் சலிப்பு தோன்ற அந்த டைரியை மூடித் திறந்து ஆடிக்கொண்டிருந்தபோது என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாணவன் என்னிடம் பேச்சு கொடுக்க, அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தோம்..
அவனிடம் நான் கேட்ட கேள்விகளும் அவனது பதில்களும்:
“உங்க வீடு?”
“தி.நகர்”
உங்கப்பா என்ன செய்றார்?”
“பாட்டு எழுதுவார்”
ஓ என்று என் டைரியை பிரிக்க, அதில் அந்தக் காலத்தின் என் வழக்கத்தின்படி, கண்ணதாசனின் பாடல் வரிகள்..
ஹூம் இவங்கப்பா பாட்டு எழுதுவார்னு சொல்றானே என்னன்னு சொல்றது என்று நான் யோசிக்கும்போதே அவன் சொன்னான்..
“இது எங்கப்பா எழுதினது தான்..”

அவனிடம் சில ஆண்டுகள் கழித்து,
“உங்கப்பாவை விழாவுக்கு வரச்சொல்றியா” என்றபோது அவன் சொன்னபதில்,
“இதெல்லாம் நீயே பாத்துக்கப்பா, என்னை மாட்டிவிட்டு அப்புறம் தராறு பண்ணாதே”
பல வருடங்கள் கழித்து அவனுடைய அண்ணன் மகனின் கல்யாணத்தில் பார்த்தவுடன் கட்டிக்கொண்டான். இப்படி என்னிடம் நேசம் பாராட்டுபவர்களை எல்லாம் என் மனைவிக்கு அறிமுகம், அதனால் அவள் ஆச்சரியத்தோடு பார்த்தபோது நான் சொன்னது..
“அவன் பெயர் கமால்.
இன்று பல் மருத்துவர், என்றும் நெஞ்சிற்கு இனியவர்!..தன் தந்தையால் அல்ல, தன்னால்.

கவிஞர் பற்றி இன்னுமொரு நினைவு

மிக்க நன்றி:http://rudhrantamil.blogspot.com/2009/06/blog-post_24.html

வாழும்கலை

Posted on : 26-02-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

முனைவர் கல்பனாசேக்கிழார்

மானிடனே
பலமுறை வீழும் போது தான்
வீழ்தலின்
அர்த்தம் புரியும்

தோல்வியில் தான்
நீ
உன்னை அறிவாய்

தோல்வியில் தான்
பல வெற்றிகள்
மறைந்து கிடக்கும்

தோல்வியின் முடிவு
மரணமல்ல
வாழ்வின் தொடக்கம்

தோல்வியை
மற
வெற்றியை
நினை.

முயற்சி
மூவுலகையும்
ஆளும்

உறுதி
உள்ளத்தின்

தெளிவு

நன்றி : http://www.sekalpana.com/2009/07/blog-post_04.html

மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

Posted on : 26-02-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM)

0

இஸ்லாம் இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்

மஸ்ஜிதுந் நபவீண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, “ஈதே மீலாத்” என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நாட்களுக்கு முஸ்லிம் சமூகம் அளிக்கும் முக்கியத்துவத்தினைக் கருத்தில் எடுத்து, மாற்றாரும் இந்நாட்களை இஸ்லாத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தும் வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக இந்திய அரசால் அந்நாள், இஸ்லாமிய அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த நாளின் பின்னணி என்ன?, இது நபிவழியில் அனுமதிக்கப்பட்டதா?, இதனைக் கடைபிடிப்பது ஸுன்னத்தா? பித்அத்தா? போன்ற பல ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்து மக்களை விழிப்புணர்ச்சியூட்டி வருவதும், வாத-பிரதி வாதங்களுடன் இது சரிகாணப்படுவதையும், மறுக்கப்படுவதையும் பரவலாக இந்திய அளவில் காண முடிகிறது.


அதேபோன்று இந்தியாவிலிருந்து அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கும் இதைப்பற்றிப் பேசுவதும், இங்கிருந்து சென்ற சிலர் அங்கும் மீலாது கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கூடும் நிலையும் உள்ளது. அரபு நாடுகளில் “மீலாது” என்ற பெயரில் விடுமுறையோ கொண்டாட்டங்களோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ நடைபெறுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த மக்காவிலோ, புலம்பெயர்ந்த மதீனாவிலோகூட இந்நாள்வரை மீலாது என்ற பெயரில் ஏதும் விசேஷ விடுமுறையோ, நிகழ்ச்சிகளோ இல்லையென்பதும் கவனிக்கப்படவேண்டிய உண்மையாகும்.


நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களை மட்டுமே காட்டிச் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களிடம் ஒட்டியிருந்த முந்தைய எல்லா அனாச்சாரக் கொண்டாட்டங்களையும் ஒழித்து, ரமலான் மாதத்தை ஒட்டி “ஈதுல் பிஃத்ர்” எனும் ஈகைப் பெருநாளையும் ஹஜ்ஜை ஒட்டிய “ஈதுல் அழ்ஹா” எனும் தியாகத் திருநாளையும் முஸ்லிம்களுக்கான விழாநாள்கள் என வரையறுத்தார்கள். நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமியப் பண்டிகை தினங்களாக அடையாளப் படுத்தப்பட்டு இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பண்டிகை தினங்கள் இரண்டு மட்டுமே. இதனை இன்றும் அரபு நாடுகளில்  அதிகப்படுத்தாமல் கடைபிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.


ஈதே மீலாத் என்ற மீலாது எனும் விழா நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத, அவர்கள் அங்கீகாரம் பெறாத ஒரு செயல் என்பதே தெளிவு. ஆயினும் ஈதே மீலாத் என்பதன் பொருள், இது பின்பற்றப்படுவதன் பின்னணி, மற்றும் மார்க்கத்தில் அதன் நிலை போன்றவற்றை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.


ஈத் என்றால் பெருநாள்-பண்டிகை என்று பொருள். மீலாத் என்றால் பிறப்பு என்று பொருள். ஆக, ஈதே மீலாத் என்றால், பிறந்த நாள் பண்டிகை(பெருநாள்) என்று பொருள். நபி(ஸல்) அவர்களின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக அவர்கள் பிறந்ததாகக் கருதப்படும் ரபியுல் அவ்வல் 12ஆம் நாளை ஈதே மீலாத் என முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.


இன்று ஆங்கிலக் காலண்டரில் பல்வேறு பிற மதக் கடவுளர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள்களின் பட்டியலோடு ‘மீலாது நபி’யும் இடம் பிடித்துள்ளது.


“நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லையே” என்ற ஒரு கருத்தும், “நபி(ஸல்) அவர்களை நேசிப்பவர்கள் கண்டிப்பாக மீலாது விழா கொண்டாடியே ஆக வேண்டும்” என்ற ஒரு கருத்தும் இன்று பொதுவாக மக்கள் மனதில் பதிந்து கிடப்பதைக் காண முடிகிறது.


மார்க்கத்தில் இவ்வாறு ஒரு தினத்தை விஷேசமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி உள்ளதா? என்பதைப் பார்க்கும்முன் இந்நாட்களில் “மீலாதுக் கொண்டாட்டம்” என்ற பெயரில் நாட்டில் நடக்கும் விஷயங்களை முதலில் பட்டியலிடுவது அவசியமாகும்.


மீலாதுக் கொண்டாட்டத்தில் மௌலிது ஓதுதல், பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை நடைமுறையில் உள்ளவற்றுள் முக்கியமானவையாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் பிற மதத்தினரின் ஊர்வலங்களில் நடக்கும் அனாச்சாரங்களை மிஞ்சும் விதத்தில் மீலாது விழா ஊர்வலங்கள் நடத்தப்படுவதும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன.


ஊர்வலங்களின்போது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் உச்சதொனியில் தக்பீர் முழங்குவதோடு, பிற மதத்தினரைச் சீண்டும் விதத்தில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.


மார்க்கம் அனுமதித்த விதத்தில் பொது நிகழ்ச்சிகள் மூலம் பிற மதத் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் அனைவருக்கும் இஸ்லாத்தினையும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைப்பது தவறு அல்ல. அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத ஒரு நாளில் அதுவும் அதை பெருநாளாகக் கருதி செயல்படுத்துவது அல்லாஹுக்கோ அல்லாஹ்வின் அருமைத் தூதர் – முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான அண்ணல் – நபி(ஸல்) அவர்களுக்கோ உகந்த செயலாக முடியுமா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.


மீலாது விழா அல்லாஹ்வுக்கு உகந்ததோ, நன்மைகளை விளைவிக்கக் கூடியதோ என்றால் அதை மார்க்கத்தை நமக்குக் காட்டித்தர வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க மாட்டார்களா? அவ்வாறு அவர்கள் காட்டித் தராத ஒரு நன்மையான(?) காரியத்தை இன்று முஸ்லிம்கள் செய்கின்றனர் எனில் அதனை காட்டித் தர நபி(ஸல்) அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்(நவூது பில்லாஹ்) என்பது அல்லவா பொருள்? அல்லாஹ் பாதுகாப்பானாக.


தனது இறுதிப்பேருரையின் பொழுது அரஃபா மைதானத்தில் வைத்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்:

“கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா?” எனக் கேட்டபோது, “ஆம் அல்லாஹ்வின் தூதரே!” என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர் (புகாரி).

நாகூர் ரூமியும் நானும்

Posted on : 25-02-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , , ,

0

by Abdul Qaiyum

பிரபலமானவர்களின் பெயரை நம்மோடு இணைத்துப் போட்டால் நாமும் பெரிய ஆளாகி விடலாம் என்ற எண்ணம் எனக்கும் இல்லாமலில்லை.

இணையத்தில் சென்று “நாகூர்” என்று தட்டச்சு செய்து குதுகூலமாய் ‘கூகுளி’த்துப் பார்த்தால், நாகூர் தர்காவைவிட அதிகமான தகவல்கள் நாகூர் ரூமியைப் பற்றித்தான் காணக் கிடைக்கின்றன.

நாகூர் ரூமி, டிராயர் போட்டுக்கொண்டு (அண்ட்ராயர் அல்ல) அலைந்த காலத்திலிருந்து அவரை எனக்குத் தெரியும். அப்போது அவரது பெயர் A.S.முஹம்மது ரபி. அவரது தந்தை என் தந்தையின் ஆத்ம நண்பர். சாவன்னா என்று அன்போடு அழைக்கப்படும் அவர், நாகூர் கடைத்தெருவில் நடந்து வந்தால் ஏறெடுத்து பார்க்கத் தோன்றும். சடசடவென்று சலசலக்கும் ரெட்டைமூட்டு புதுக்கைலி உடுத்தி, “See through” பாரின் சட்டை, அரசியல்வாதியைப் போன்று தோளில் உல்லன் ஷால். அரும்பு மீசை. கையில் 555 சிகரெட் டின். பார்ப்பதற்கு இளம் வயது S.S.R. போன்று காட்சியளிப்பார். பெரியவனானதும் நாமும் இப்படித்தான் பந்தாவாக காட்சிதர வேண்டும் என்று அப்போது மனதில் நினைத்ததுண்டு.

ரபிக்கும் எனக்கும் சிறுவயதிலேயே ஓர் ஒற்றுமை உண்டு. ஆமாம். நாங்களிருவரும் ‘பாட்டிச் சொல்லைத் தட்டாத’ பிள்ளைகள்.

அது என்ன “நாகூர் ரூமி” என்ற புனைப்பெயர்? எனக்கு குழப்பம் என்றால் குழப்பம், அப்படியொரு குழப்பம். ரூமி என்றால் ரோம் நகரத்தைச் சேர்ந்தவர் என்று பொருள். ஜலாலுத்தீன் என்ற பெயரில் ஒரு மகா கவிஞர் இருந்தார். அவர் ரோம் நகரத்திலிருந்து வந்ததால் அவருக்கு ஜலாலுத்தீன் ரூமி என்று பெயர் வந்ததாக எங்கோ படித்த ஞாபகம்.

அப்படியென்றால் இவர் “நாகூரைச் சேர்ந்த ரோம நகரத்துக்காரர்” என்றல்லவா அர்த்தம் ஆகிறது. அப்ப இவர் ரோம நகரத்துக்காரரா அல்லது நாகூர்க்காரரா? – இது இன்னும் எனக்குத் தீராத குழப்பம்.

ஜலாலுத்தீன் ரூமியின் நினைவாக புனைப்பெயர் சூட்டிக் கொண்டாரா அல்லது ரூமிலேயே தங்கி உட்கார்ந்துக் கொண்டு நூல்கள் புனைந்துக் கொண்டிருப்பதால் ரூமி என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டாரா என்று விளங்கவில்லை.

எது எப்படியோ, இவர் ரூமில் உட்கார்ந்து எழுதும் நூல்கள் இன்று உலகம் முழுவதும் படிக்கப் படுகிறது, விமர்சிக்கப்படுகிறது என்பதே உண்மை. ‘பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும்’ என்று சொல்வதைப்போல இவரை என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் எழுத்துலகம் என்னையும் ஓர் எழுத்தாளன் என்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

மை நேம் ஈஸ் கான்!

Posted on : 25-02-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

மை நேம் ஈஸ் கான்!

எழுதியவர் யுவகிருஷ்ணா
சரியாக எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக என்பது நினைவில்லை. 1999 உலகக்கோப்பை போட்டியாக இருக்கலாம். இந்தியா-பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. வெற்றி நிலை மாறிக்கொண்டே இருந்தது. அண்ணாசாலை விஜிபி ஷோரூமுக்கு முன்பாக சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியா தோற்பது போன்ற ஒரு சூழல்.

நடுத்தர வயதுடைய ஒருவர் வெறுப்பாக சொன்னார். “துலுக்கப் பசங்கள்லாம் கொண்டாடுவானுங்க! பாகிஸ்தான் ஜெயிக்கப் போவுது!!” இத்தனைக்கும் அப்போது இந்திய அணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தவர் முகம்மது அசாருதீன்.

இறுதியில் வென்றது இந்தியா. சாலை என்று பாராமலும் ‘ஹூர்ரே’ என்று குரலெழுப்பி, ஹைவோல்டேஜ் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தவர் கமெண்டு அடித்த நடுத்தர வயதுக்காரர் அல்ல. அவருக்கு அருகில் இருந்த இளைஞர். தலையில் வெள்ளைத் தொப்பி. திருவல்லிக்கேணிகாரராக இருக்கலாம்.

நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியரை இழிவுபடுத்தும் தேசமாக இந்தியா இருக்கிறது. ‘பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லக்கூடிய ஒரு இஸ்லாமியரை கூட இதுவரை நான் சந்தித்ததேயில்லை. ஒரு இஸ்லாமியனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நான் ஏங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தான் அனேகம்.

* – * – * – * – * – *

ஷாருக்கின் ‘மை நேம் ஈஸ் கான்’ ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் ஒரு சதவிகிதத்தை கூட என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஒரு இஸ்லாமியராகவே மனதளவில் வாழும் சாரு போன்றவர்களின் விமர்சனம் சரியான வெளிப்பாடாக அமையும் என்று நம்புகிறேன். அடையாளம் தொடர்பான அரசியலை மிக நுட்பமாக பேசும் படம் இது. உணர்வுகளை அலைக்கழிக்கும் இதுபோன்ற திரைப்படங்கள் வெளியாவது அரிதிலும் அரிதாக நடக்கும் அபூர்வம்.

ஏதோ வாயில் நுழையாத பெயருடைய நோய் கொண்ட ரிஸ்வான்கான் சூழ்நிலை காரணமாக அமெரிக்கா செல்கிறான். மூளை தொடர்பான நோய் அது. புரிந்துகொள்வதிலும், பேச்சிலும், நடத்தையிலும் மற்றவர்களிடமிருந்து சற்றே வேறுபட்டவன் ரிஸ்வான். ஆயினும் அவனுக்கு வேறு சில விஷயங்களில் அதீதமான மாற்று ஆற்றல் உண்டு.

அமெரிக்காவில் இளம் விதவையான மந்திராவை சந்திக்கிறான். இயல்பாக மலரும் காதல் திருமணத்தில் முடிகிறது. மந்திராவுக்கு ஏற்கனவே ஒரு மகன் உண்டு. 2001 செப்.11 சம்பவத்துக்கு பிறகு இஸ்லாமியர் மீதான அமெரிக்கர்களின் விரோத மனோபாவம் நீறுபூத்த நெருப்பாய் மாறி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வன்முறையில் முடிகிறது. ஒரு இஸ்லாமியன் தனக்கு திடீர் தகப்பன் ஆனதாலேயே மந்திராவின் மகன் ஒரு வன்முறையில் உயிரிழக்கிறான்.

‘கான் என்ற உனது பெயர்தான் என் மகனை கொன்றது!’ என்று மந்திரா கோபத்தில் குற்றம் சாட்டுகிறாள். “உனக்கு தைரியம் இருந்தால் அமெரிக்க அதிபரை சந்தித்து ‘என் பெயர் கான். நான் தீவிரவாதி இல்லை’ என்று சொல்!” என்று கத்துகிறாள். கோபத்தில் விளைந்த இந்த அர்த்தமற்ற வார்த்தைகளை கான் சீரியஸாக எடுத்துக் கொள்கிறான். அமெரிக்க அதிபரை சந்திக்க தன் பயணத்தை தொடர்கிறான். இதையடுத்து அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், கான் அமெரிக்க அதிபரை சந்திக்க முடிந்ததா? என்பதுதான் கதை.

தான் பிறந்த இனத்துக்கு ஒரு கலைஞனால் செய்யப்படக்கூடிய உச்சபட்ச கைமாறினை ஷாருக்கான் செய்து தந்திருக்கிறார். அமெரிக்க அரசியல், அதன் குடிமக்கள், வர்க்கம் – இவை தொடர்பான வேறுபாடுகளை நுணுக்கமாக பதிவு செய்கிறார். “அமெரிக்காகாரங்களே இப்படித்தான் எசமான்!” என்று புலம்பாமல், மனிதத்தை மதிக்கும் அமெரிக்கர்களையும் கருப்பின தாய் கதாபாத்திரத்தின் வாயிலாக படம்பிடித்து காட்டுகிறார்.

‘அன்பே சிவம்’ படத்தில் கமல்ஹாசனின் நடிப்பைக் கண்டு சிலாகித்தபோது, இனிமேல் இப்படி நடிக்க ஒருவன் பிறந்துதான் வரவேண்டும் என்று நினைத்தேன். ஷாருக்கான் எப்போதோ பிறந்துவிட்டார். ஒரு காட்சியிலாவது கதாபாத்திரத்தின் தன்மையிலிருந்து விலகி ஷாருக்கின் ஹீரோயிஸம் எங்காவது வெளிப்படுமா என்று பார்த்தோமானால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அடுத்த ஆண்டு ஷாருக் வீட்டின் கதவுகளை வரிசையில் நின்று விருதுகள் தட்டும்.

ஒரு சினிமாவுக்கு தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என்னவென்று படம் வரைந்து பாகம் குறித்து காட்டுகிறது ’மை நேம் ஈஸ் கான்’. குறிப்பாக கஜோலுக்கான ஒப்பனை, உடையலங்காரம் வழியே கதையின் வலிமை வெகுவாக கூட்டப்படுவது அபாரம். ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு, ஷங்கர் என்லாயின் இசை என்றெல்லாம் தனித்தனியாக குறிப்பிட இயலாதவாறு, ஒட்டுமொத்தமாக ஒரு அதிசயத்தை சாதித்துக் காட்டியிருக்கின்றனர் இந்த படக்குழுவினர்.

ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.

அப்போது இந்தியர்களுக்கு?

கமல்ஹாசன் விரைவில் ‘மை நேம் ஈஸ் தெனாலி’ என்றொரு படம் எடுப்பார். 1991, மே 21-க்குப் பிறகு, சென்னையில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழன் சோனியா காந்தியை சந்தித்து, “நான் தெனாலி, நான் விடுதலைப்புலி அல்ல” என்று சொல்லுவது கதையாக இருக்கும். இந்தியத் தணிக்கைக்குழு அனுமதித்தால் இப்படத்தை இந்தியர்களுக்கு போட்டுக் காட்டலாம்.

எழுதியவர் யுவகிருஷ்ணா

வகை ,

நன்றி : http://www.luckylookonline.com/

கான் – ஒரு எதிர்வினை!

Posted on : 25-02-2010 | By : mohamedali | In : Uncategorized

0

Hi

I do not know why you guys always support Muslims in the first place.

If the same movie has been taken by a Hindu, will you appreciate?
Immediately, You and Your groups will start writing about SECULARISM

Have you ever written about those hindus who are staying in Pakistan and do not have rights to vote also?

Think man. Think and write before you think again.

During mogul period what has happened to our country. Imagine.
Go and read the books. You will know the truth.

Sooner the entire India will be converted to Islam and Christianity.
Do not worry. Your kid and my kid will do a research on Hinduism just like Americans are doing about Greeks and Latin. But they are the one burried those civilization.

Bye

Regards
Ramanujam Varaddhan

* – * – * – * – * – * – * – * – *

வணக்கம் திரு ராமானுஜம் வரதன்!

இப்படம் ஒரு இந்து இயக்குனரால்தான் இயக்கப்பட்டிருக்கிறது. நாயகனை தவிர்த்து படத்தில் பணிபுரிந்த பெரும்பாலானோர் இந்துக்களே.

முகலாயர் காலத்தில் ‘இந்தியா’ என்றொரு நாடே கிடையாது. இன்று இருக்கும் அமைப்பு கூட பரஸ்பர நலன் சார்ந்த ஒரு கூட்டமைப்பு மட்டுமே. இங்கே பரஸ்பர நலன்கள் மறுக்கப்படுவதுதான் தெலுங்கானா, நக்சல்பாரி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.

நீங்கள் அஞ்சுவதைப் போல இந்நாடு ஒட்டுமொத்தமாக இஸ்லாமியத்துக்கோ, கிறிஸ்தவத்துக்கோ மாறக்கூடிய வாய்ப்பு எக்காலத்திலும் இல்லை. சுதந்திரம் அடைந்தபோது இங்கிருந்த மத விகிதாச்சாரம் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பார்க்கப்போனால் இந்துக்களின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

சிந்திக்க வேண்டியது நானல்ல. நீங்கள்!

அன்புடன்
யுவகிருஷ்ணா

எழுதியவர் யுவகிருஷ்ணா

பின்னூட்டங்கள்

Source : http://www.luckylookonline.com/

மேலைத்தேய நாசகார நாகரீகம்

Posted on : 24-02-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , , , , ,

0

பதிவர் : கலையரசன்

-”அவர்கள் எம்மை எதற்காக வெறுக்கிறார்கள்? நாம் உலகிலேயே மிகச் சிறந்த நாகரீகத்தை கொண்டிருக்கிறோம். எமது ஜனநாயக பாரம்பரியம், தனி மனித சுதந்திரம் இவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள்.”

-”நாகரிக மேற்குலகின் மீது பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் தாக்குதல்.”
-”தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம்.”

மேற்குறிப்பிட்ட கூற்றுகள் யாவும், கடந்த எட்டு வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும், அமெரிக்காவும், அதன் மேற்குலக கூட்டாளிகளும், கூறிவரும் நியாயங்கள். “நாகரீக உலகம்”, “காட்டுமிராண்டிகளின் உலகம்” இந்த சொற்பதங்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். அமெரிக்காவின் தீமைக்கெதிரான, அல்லது பயங்கரவாதத்திற்கெதிரான போர் ஆப்கானிஸ்தான் படையெடுப்போடு மட்டும் நின்றிருந்தால், “ஒரு வல்லரசின் பழிவாங்கல்” என்பதோடு பிரச்சினை முடிந்திருக்கும். ஈராக், வட-கொரியா என்று ஒன்றோடொன்று சம்பந்தப்படாத நாடுகள் மீதும் “நாகரிக உலகம்” போர் தொடுத்தது, அல்லது திட்டமிடுகிறது. மேற்குலக மக்கள் ஆதரவு “நாலாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த கொள்கை” அடிப்படையில் ஒன்று திரட்டப்படுகிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக புஷ் பதவி வகித்த எட்டு வருடங்களில் உலகம் அடியோடு மாறி விட்டது. “புஷ் ஆட்சிகாலம் மறைந்தாலும், அதன் தாக்கம் இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.” என்று புஷ்சின் சுயசரிதையை திரைப்படமாக்கிய ஒலிவர் ஸ்டோன். அமெரிக்கா மட்டும் தனது சிறந்த கலாச்சாரப் பாரம்பரியத்தை மீளக் கண்டுபிடிக்கவில்லை. ஐரோப்பாவிலும் “கிறிஸ்தவ கலாச்சாரப் பெருமை” பேசும் வலதுசாரி சக்திகள் தலையெடுத்தன. சில நேரம் ஆட்சியில் இருப்பவர்களே, “பண்பாடு” “வாழும் நெறி” பற்றி தமது பிரசைகளுக்கும், குடியேறிய வெளிநாட்டவர்களுக்கும் வகுப்பெடுத்தனர். வந்தேறுகுடிகள் ஐரோப்பிய கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். நம் நாட்டு மக்களில் பலர் தமது (இந்தியக்) கலாச்சாரமே உயர்ந்தது என்றும், ஐரோப்பியர்கள் தம்மை விடக் கீழான சீரழிவுக் கலாச்சாரம் கொண்டவர்கள் என்றும் ஒரு தலைப்பட்சமாக கருதுகின்றனர். மறு பக்கத்தில் ஐரோப்பியர்கள் தமது கலாச்சாரமே உலகில் சிறந்தது, மற்றவை எல்லாம் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் என்று கருதுகின்றனர்.

மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் இப்போதும் “கலாச்சார மோதல்” பற்றி கற்பிக்கப்படுகின்றது. அதாவது நாகரீகமடைந்த மேற்கத்திய கலாச்சாரம், உலகின் பிற காட்டுமிராண்டிக் கலாச்சாரங்களுடன் மோதிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் இறுதியில் மேற்கத்திய கலாச்சாரம் வெற்றி பெறும். ஏனெனில் இது தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம். கறுப்பர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், சீனர்கள், இவர்களுடன் ரஷ்யர்கள் கூட “பல குறைபாடுகளைக் கொண்ட சமூகங்களாக” சித்தரிக்கப்படுகின்றனர். அரசுகள், பல்கலைக் கழகங்கள், ஊடகங்கள், இப்படி மக்களை வழிநடத்தும் கருவிகள் யாவும் “காட்டுமிராண்டிகளை நாகரீகப்படுத்தும்தேவையை” சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திரமின்மை, ஊழல், போர்க் காலக் குற்றங்கள், சித்திரவதை, சர்வாதிகாரம், பயங்கரவாதம்…. இப்படி நீண்டு செல்லும் பட்டியலில் குறிப்பிடப்படும் எதிர்மறையான விடயங்கள் யாவும், காட்டுமிராண்டி நாடுகளின் விசேட குணங்கள். இந்த நாடுகளைச் சேர்ந்த நாம் அப்படி நினைக்காமல் விடலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்படும் அப்பாவி மக்கள், அப்படித்தான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாட்டு மாணவர்களுக்கு வரலாறு ஒரு கட்டாய பாடம். அந்தப் பாடத்தில் சித்தி அடையாமல், பல்கலைக்கழகம் செல்ல முடியாது. வரலாற்றுப் பாடத்தில், ஐரோப்பிய சரித்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஐரோப்பாவின் சரித்திரம் கிரேக்கத்தில் இருந்து தொடங்குவதாக அனைத்து நூல்களும் போதிக்கின்றன. நோர்வே முதல் இத்தாலி வரை பல்வேறு மொழிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஐரோப்பிய சரித்திரம் ஒரே மாதிரித் தான் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் மறைந்த பிறகு, அங்கே எப்படி “நடுநிலை வரலாற்றுப் பாடம்” எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். சந்தேகத்திற்கிடமின்றி மேற்குலக கண்ணோட்டத்தில் சரித்திரம் திருத்தி எழுதப்பட்டிருக்கும். ஐரோப்பிய நாடுகள், அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. தற்போது தாம் முன்பு ஒரே வரலாற்றைக் கொண்டிருந்ததாக சொல்வதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. அமெரிக்காவில் சென்று குடியேறிய ஐரோப்பிய வம்சாவழியினரே, அங்கே அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் அமெரிக்க நாகரீகமும் கிரேக்கத்தில் இருந்தே ஆரம்பமாவது தவிர்க்க முடியாதது.

அடிக்கடி “கிரேக்கதைப் பாருங்கள்” என்று சுட்டிக் காட்டுகிறார்களே, அங்கே அப்படி என்ன இருந்தது? “ஜனநாயகம்”, “தனி மனித சுதந்திரம்” இந்த வார்த்தைகள் இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் பயன்படுத்தினர். கிரேக்க மொழியில் Demos என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே “Democracy” என்ற மக்கள் ஆட்சி அங்கே நிலவியது. குறிப்பாக ஏதென்ஸ் என்ற நகர-தேசம் மன்னர் ஆட்சியற்ற குடியரசாக இருந்தது. அங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கைகளில் ஆட்சியதிகாரம் இருந்தது. தனி மனித சுதந்திரம் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டது. சுருக்கமாக சொன்னால், இன்றுள்ள மேற்கத்திய நாடுகளைப் போல பண்டைய கிரேக்கம் காட்சியளித்தது. இவையெல்லாம் சரித்திர பாடப் புத்தகங்களில் எழுதப் பட்டிருப்பதின் சாராம்சம். மேல்நிலைப் பள்ளியில் போதிக்கப்படும் “ஜனநாயக சித்தாந்தம்”, பெரியவர்கள் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது. இந்நாடுகளில் ஆசிரியர்கள் இப்படித்தான் கற்பிக்க வேண்டுமென்று, கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப் படுகின்றனர்.

Editorial: Insult Islam and I’ll Knock You Out!

Posted on : 23-02-2010 | By : mohamedali | In : English(ARTICLES), Uncategorized

Tags: , , , , , , , , , , , ,

2

TheRevivalEditor

By Sajid Iqbal

Let me ask you something… If someone insulted your mum or dad, how would you react? ‘I’ll kick his head in’ is what you will probably say, yeah? If someone insulted your sister, brother, husband or wife what then? You’ll probably react with anger, flex your muscles and may be use every swear word you can think of, am I right? We all know that’s not the best way to behave, but sometimes when someone goes too far you simply lose the plot, innit?

Now, if you hold the Prophet Muhammad (peace be upon him) closer to you than your mum, dad, brother or sister and people insult him, then what? If the person you see as your ultimate role model is ridiculed then what must you be feeling? Let me guess, you’re vexed, you’re fuming, you feel demonised, insulted and hurt. Now when Geert Wilders’ film ‘Fitna’ takes the mick out of the Quran and the teachings of the Prophet Peace and  Blessings of Allah be upon him – how do you feel? When cartoons are printed which take the mick out of the Prophet Peace and  Blessings of Allah be upon him – how do you feel? When books, websites, documentaries, cartoons, speeches criticise, demonise, insult and take the mick out of your Prophet Peace and  Blessings of Allah be upon him, your teachings and your faith then how are you supposed to react?

Many people will answer by showing anger, hatred, violence, causing havoc, letting off steam, shouting and screaming!

A Christian surveyor, Professor Edward reported in TIME Magazine on April 16, 1979, that in a span of 150 years, from 1800 to 1950 over 60,000 books had been written against Islam. That works out to more than one book against Islam every day. And more recently, since September 11 the propaganda and hatred against Islam is more visible than ever before. So are we gonna throw a strop, burn an effigy, react with hatred, shout and scream every time anyone criticises or insults Islam? Well it seems to be the way a lot of Muslims have reacted, from Rushdie’s Satanic Verses to the Danish cartoons furore up until now.

The next time anyone insults the Prophet Peace and  Blessings of Allah be upon him or his teachings then before you start a riot and react fanatically just ask yourself a simple question:

When the Prophet Peace and  Blessings of Allah be upon him himself was insulted, attacked, abused and mocked how did he react?

Well let’s find out shall we…

When the Prophet Peace and  Blessings of Allah be upon him had just started preaching the call of Islam he went to Ta’if, a lush town just south-east of Makkah. He was hoping that perhaps the people of this nice city would be receptive to his message, which had been rejected by most of the people of Makkah for more than a decade.

However, the people of Ta’if proved to be just as cruel and intolerant as his own people. Not only did they scorn his message of worshipping Allah alone, but they even turned their youth against him who hurled insults and even stones and garbage at him as he sadly left the city. In the face of continued disappointment, the Archangel Gabriel came to Prophet Muhammad Peace and  Blessings of Allah be upon him and said,

“God Almighty has heard the sayings and accusations of your people and He, the Almighty, has commanded the angel of the mountains to obey any order from you against them.”

The angel of the mountains called out to Prophet Muhammad Peace and  Blessings of Allah be upon him and said,

“If you wish, I will crush the town of Ta’if between the surrounding mountains.”

Bleeding from head to toe, battered and exhausted, the Prophet Peace and  Blessings of Allah be upon him was faced with a choice; should he or should he not seek to destroy the people who had just humiliated him by having their children chase him out of town while throwing stones at him? And for what crime? All he had wanted to do was convey the message of the One God to His creation and seek benefit his own people.

A VILLAGE IN SRILANKA – இலங்கையின் கிராமமொன்று !

Posted on : 23-02-2010 | By : mohamedali | In : country

0

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

Labels: , , http://msmrishan.blogspot.com

இலங்கை,மாத்தளையில் அமைந்திருக்கும் அங்குனுமிட்டியாவத்த எனும் கிராமத்தின் படங்கள் சில உங்கள் பார்வைக்கு…!

படங்களின் பாதியே இங்கு தெரிகின்றன.படங்களின் மேல் இரு தடவைகள் அழுத்த படங்களை முழுதாகப் பார்க்கலாம்.
புகைப்படங்களை எடுத்தனுப்பிய நண்பருக்கு நன்றி !

பெருநகரப் பூக்கள்

Posted on : 23-02-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

தனித்தனியாகப் பிரிந்துசெல்லும்
பாதைகள் வழியும்
அடர்காட்டுக்குள்ளும்
பூத்துக்கிடக்கின்றன
சில வனாந்தரப்பூக்கள்

வாசத்தைப் பரப்பும்
பூக்களை ரசிக்கவோ
பூசைக்கென்று கொண்டாடவோ
யாருமற்ற வெளியிலும்
இயல்பினை மறக்காமல்
தத்தம் பாதையில் வெகு ஆனந்தமாக
பூத்துக்கொண்டே இருக்கின்றன

இயற்கையின் பன்னீர்த்தூவல்
ஒளிக்கீற்றின் களி நர்த்தனம்
இலை மிகுக்கப் பச்சையங்கள்
வட்டமிட்டபடியே சுற்றிவரும் தேன்குருவி
அனைத்தும் மிகைத்துக் கிடக்க
காட்டுப் பூக்களுக்குக் கவலையேதுமில்லை

ஒளி மறுக்கப்பட்டுக்
குளிர்விக்கப்பட்ட அறையில்
பூ மலர்ந்தபொழுதில்
தொட்டிச் செடிக்கு மனதும் வலித்தது
மூன்றாவதாகப் பிறந்ததும் பெண்ணாம்

flowers_11

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# அகநாழிகை கலை இலக்கிய இதழ் 01 – அக்டோபர், 2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

Labels: , , , , ,,

நன்றி :http://mrishanshareef.blogspot.com

அதிகாரத்தின் குரல்-5- மீளாத சாபமும் ஒரு மேடை இலக்கிய குறிப்புகளும்- உரையாடலிலிருந்து

Posted on : 22-02-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

Posted by கே.பாலமுருகன்

(அடர்ந்த வனம்- ஒரு தீ பந்தம் எரிந்து கொண்டிருக்கிறது)

வழிப்போக்கன்: உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன். வெகு சமீபத்தில் உங்களின் இந்தக் கோமாளியின் முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

கோமாளிபதி: அப்படியா? கட்டாயமாக என்னை மேடைகளில் பார்த்திருக்கக்கூடும். என்னிடம் ஒரு மேடைக் குறிப்புகள்/ மேடையில் நான் பேசுவதற்கென்றே ஒரு உரை குறிப்பு உண்டு. அதையும் பார்த்ததுண்டா?
வழிப்போக்கன்: ஆமாம். பலருக்குத் தெரியும். வெளியில் இது பற்றி பேசிவிட்டு, இடைவேளையாகக் காரி உமிழ்ந்து தள்ளுகிறார்களாம்.
கோமாளிபதி: அப்படியா? மிக்க மகிழ்ச்சி. பெருமையாக உள்ளது. என் பெருமையில் உங்களுக்குப் பரிச்சயமான ஏதாவது எருமையை மேய விடமுடியுமா?
வழிபோக்கன்: மன்னிக்கவும். உங்களது 10 வருடத்திற்கும் மேலான அந்த மேடை குறிப்புக்கு முன் எருமைகளுக்கும் கொஞ்சம் கௌரவம் உண்டு. ஆதலால். . அது இயலாது.
கோமாளிபதி: அப்படியா! மிக்க மகிழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி. நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவன். என்னுடைய அந்தப் பாரம்பரிய உரை குறிப்பு எங்கோ தொலைந்துவிட்டதால், பெரும் பதற்றத்திற்க்குள்ளாகியுள்ளேன். எனது இருப்பு அர்த்தமற்றுப் போய்விடும் என்கிற அச்சத்தில் வனத்திற்கு ஓடி வந்துவிட்டேன்.
மேடைக் குறிப்புகள் உங்களது இலக்கிய மேடை குறிப்புகள் காணவில்லையா? ஐயகோ! வருடந்தோறும் இலக்கிய விமர்சனம் என்கிற பெயரில் நீங்கள் முன்வைக்கும் குப்பைகளை இனி பொதுமக்களும் சில அப்பாவி எழுத்தாளர்களும் கேட்க முடியாதா? இது எத்துனைப் பெரிய விடுதலை தெரியுமா?

கோமாளிபதி: விடுதலையா? இது பெரிய இழப்பு. காலம் காலமாக அதை நம்பித்தான் எனது சிறுகதை விமர்சனங்களைக் கொடுத்து வருகிறேன். சதி செய்து யாரோ எனது மேடை இலக்கிய குறிப்புகளைத் திருடிவிட்டார்கள். அதைத் திருடியவர்களின் கைகள் நெருப்பில் பொசுங்க வேண்டும்.

வழிப்போக்கன்: நிதானமாக இருங்கள். நீங்கள் மெத்த படித்தவர். பட்டம் பெற்றவர். நீங்கள் அறியாததா? உங்களின் மேடை பசப்பலில் உங்களின் மேதாவித்தனத்தின் உச்சம் வெளிப்படும் தருணத்தில் உங்கள் கைகளில் வலுவாகச் சிக்கிக் கிடக்கும் அந்த 10 வருடத்திற்கும் மேலான இலக்கிய குறிப்புகளை நீங்கள் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கொண்டிருப்பீர்களே, ஞாபகம் இருக்கிறதா? உங்கள் வன்முறையான பிடியிலிருந்து அந்த ஒப்பீட்டு இலக்கிய குறிப்புகள் எப்படித் திருடப்பட்டிருக்கும்?
கோமாளிபதி: தம்பி. அதிகம் பேசாதே. நீ என்போல அதிகம் படிக்காதவன். படித்தவனுக்கு எங்கும் எப்பொழுதும் எதையும் பேசவும் சொல்லவும் உரிமையும் தகுதியும் இருக்கின்றன. நீயும் உன்னைப் போல குறைவாகப் படித்தவர்கள் வாயைப் பொத்திக் கொண்டு அருகில் பம்மிக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் உனக்கு விதிக்கப்பட்டது. அதை மீறுவதற்காக இலக்கியம், விமர்சனம் என்று எனதுரிமையைப் பறிக்காதே. நாட்டின் சிறுகதை போக்குகள் எப்படி இருக்கின்றன என்பது பற்றி எனக்குத்தான் தெரியும். கைவிடப்பட்ட பெற்றோர்கள், வியாபாரத்தில் தோல்வியடைந்த வியாபாரியின் முன்னேற்றம், காதலில் முன்னேறத் துடிக்கும் கல்லூரி மாணவர்கள், சோதனையில் விரக்தியடைந்த இளைஞனின் வாழ்க்கை முன்னேற்றம் என இப்படியான தளங்களில் சிறுகதை எழுதப்பட வேண்டும். அவ்வப்போது வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த வேறு இனத்தைச் சேர்ந்த கதைப்பாத்திரங்களும் கதையில் கட்டாயம் வரவேண்டும். அதுதான் சிறுகதை. நான் சொல்வது போலத்தான் படைப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பரிசு கிடைக்கும்.
வழிப்போக்கன்: இதை எங்குச் சொன்னீர்கள்?
கோமாளிபதி: இதை ஒரு பரிசளிப்பு விழா மேடையில் அடுத்த வருடம் கதை எழுதவிருக்கும் பலருக்காகச் சொன்னேன்.
வழிப்போக்கன்: இதைச் சொல்லும் நீங்கள்தான் அடுத்த வருடமும் அந்தப் போட்டிக்கான நீதிபதி என்று எல்லோருக்கும் தெரியுமா?
கோமாளிபதி: ஏன் தெரியாது? அடப்பாவி மானுடா? அது எழுதி வைக்கப்பட்ட மிகச் சிறந்த வரலாறு. பலர் கேலி செய்தாலும் விடமாட்டேன் என்கிற பிடிமானத்துடன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். யார் தடுத்தாலும் விடமாட்டேன்.

வெளிநாட்டு வேலைக்குப் போறீங்களா…?

Posted on : 22-02-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , , , ,

0

by க‌ரிச‌ல்கார‌ன்

‘வெளிநாட்டு வேலை…’ – நம் மக்களுக்கு ஆசை காட்டும் வார்த்தை இது!

சொந்த மண்ணில் பிழைப்பதற்கு எல்லா வழிகளும் அடைத்துப் போய்விட்ட சூழ்நிலையில், இந்த வேலை ஒரு கடவுள். ஓரளவு வருமானம் கொண்ட குடும்பத்துக்கு, இந்த வேலை கைதூக்கிவிடும் ஏணி. ஐ.டி., பிஸினஸ்வாலாக்களுக்கு, வெளிநாட்டு கரன்ஸிகளுடன் புழங்கிவிட்டு ஊர் திரும்புவது, ‘ஸ்டேட்டஸ் சிம்பல்’!
இப்படி அப்பர், மிடில், லோயர் என எல்லா வர்க்கத்தினருக்கும் இஷ்டமான இந்த வெளிநாட்டு வேலைகளில், இந்திய ரூபாயின் ஒப்பீட்டு மதிப்புடன் சில பல மடங்குகள் அதிகமான ஃபாரின் கரன்ஸிகள், அவர்களுக்கு வசப்படுத்தும் அதிகபட்ச சம்பளம்தான் அவர்களை ஃப்ளைட் ஏற வைக்கும் தூண்டில்! அப்படி ‘வெளிநாட்டு சம்பாத்தியம்’ என்று செழித்தவர்கள் பலர் இருந்தாலும், வேலைக்குச் சென்ற இடத்தில் கொடுமைக்கு உள்ளாகி, அந்நாட்டு சிறைகளில் அடைபட்டு என அவ்வப்போது செய்தித்தாள்கள் தரும் செய்திகளையும் புறக்கணிப்பதற்கில்லை. அந்த துர்சம்பவங்களுக்கு, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அவர்களிடம் லட்சங்களை கறந்துவிட்டு, முறையான அனுமதி, ஆவணங்களின்றி அவர்களை அனுப்பி வைத்த ‘ஏஜென்ஸி’களுக்கு முக்கிய பங்கிருக்கும்!” என்று நிதர்சனம் பகிர்கிறார், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிவரும் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி இளங்கோவன்.
தொடர்ந்து பேசியவர், இத்தகைய சூழ்நிலையில், திறமை இருப்பவர்களுக்கான அயல்நாட்டு வேலை வாய்ப்பு எப்படி? அவற்றை அரசு வகுத்திருக்கும் சட்டங் களின் கீழ் முறையாக பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? மோசடிக்கார ஏஜென்ஸிகளிடம் ஏமாறாமல் சுதாரிப்பது எப்படி? என்பவை குறித்தெல்லாம் விரிவான விளக்கம் அளித்தார்.
காத்திருக்கும் வேலைகள்!
“வெளிநாட்டில் வேலையை நாடுபவர்கள், முதலில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன வேலை வாய்ப்புகள் சாத்தியப்படும் என்பது குறித்து அறிய வேண்டும். பொதுவாக போன்ற கல்ஃப் நாடுகளில் எப்போதும் கட்டட வேலை நடந்துகொண்டே இருக்கும். அதனால் கட்டடத் கூலித் தொழிலாளர்கள், எலெக்ட்ரீஷியன் கள், பொறியாளர்களுக்கு அங்கே தேவை அதிகம்.
மலேசியா, சிங்கப்பூரில் ரப்பர் தோட்டங்கள் அதிக அளவில் இருப்பதால், அங்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிக தேவை இருக்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் சாஃப்ட்வேர் துறையினருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு, எல்லா நாடுகளிலும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது” என்ற இளங்கோவன், ‘ஏஜென்ஸிகள்’ மூலம் வெளிநாடு செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கினார்.

நடுநிலைவாதியின் கொள்கைகள்

Posted on : 22-02-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

ஓர் தினம் இருவரிடையே சண்டை மூண்டது. ஒருவன் இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து, மற்றவனின் உடலிலிருந்து இறைச்சியை வெட்டியெடுக்க மல்லுக்கட்டினான். மற்றவனோ தனது உடலிலிருக்கும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடினான்.

இந்த சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பலரும் சதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுபவனின் பக்கம் சார்ந்திருந்தனர். இறைச்சி வெட்டுபவனின் பக்கமும் அவனது சகாக்கள் சிலரிருந்தனர்.

இந்த இருபுறமும் சாராமல் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நடுநிலைவாதியும் அங்கிருந்தார்.

‘ ஒரு வார்த்தையாலாவது உதவாமல் நீங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதேனோ?’ என ஒரு பக்கத்தைச் சார்ந்திருந்தவன் அவரிடம் கேட்டான்.

‘ நான் இந்த இரண்டு பக்கங்களுக்கும் இல்லை’ என பதில் கூறினார் அவர்.

‘ பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்யப்படும்போது நீங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் செய்வது, அநீதியின் பக்கம் சார்வதுதான்’ அவன் சொன்னான்.

‘ ஏதாவதொன்றில் கலந்துகொள்ளாமல், எதுவும் செய்யாமல் இருக்கும்போது ஒரு பக்கம் சார்ந்திருப்பதென்று சொல்வதெப்படி?’

‘ அதுதான் இன்றைய உலகின் நியதி. அதிக பலம் வாய்ந்தவனுக்கு அதை நேர்மையற்ற வழிகளில் பாவிக்க இடம்கொடுத்து பார்த்திருப்பதென்பது தானாகவே அவன் பக்கம் சார்வதுதான்’

‘ இல்லையில்லை. நடுநிலைமை உயர்ந்த கொள்கையாகும். நான் இதற்கு வெளியே இருந்து, இந்த இருவருக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைமையான தீர்ப்பு கிடைப்பதைப் பார்க்க விரும்புகிறேன்’ எனச் சொன்ன நடுநிலைவாதி சதையைக் காப்பாற்றப் போராடுபவனிடம் இவ்வாறு கேட்டார்.

‘ உங்கள் தேவை என்ன?’

‘ எனக்குப் புதிய தேவைகள் எதுவுமில்லை. எனது உடலின் சதைகளை இந்த இறைச்சி வெட்டுபவனிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதன்றி’

‘ நல்லது. உங்கள் வேண்டுகோள் என்ன?’ என்று இறைச்சி வெட்டுபவனிடமும் கேட்டார்.

‘ எனக்கு இவனின் உடலிலிருந்து சதை வேண்டும்’ என உறுதியாகச் சொன்னான்.

‘ ஆமாம். உங்கள் இருவரினதுமே எதிர்பார்ப்புகள் ஈடேறுவதுதான் நடுநிலைமையானது!’ நடுநிலைமைவாதி சொன்னதும்,

‘ நீங்கள் மிக மிகச் சரி!’ எனக் கூறிய இறைச்சி வெட்டுபவன், ‘ இவனின் சதையை வெட்டிக்கொள்வது நடுநிலையானதென மத்தியஸ்தரே கூறி விட்டார்’ என மேலும் உற்சாகத்தோடு சதையை வெட்டியெடுக்க முற்பட்டான்.

மூலம் – எஸ்.ஜீ.புஞ்சிஹேவா (சிங்களமொழியில்)
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.


நன்றி – உயிர்மை

Posted by எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி : http://rishantranslations.blogspot.com/

Chart new path with Pink Slip

Posted on : 21-02-2010 | By : mohamedali | In : English(ARTICLES)

Tags: , ,

0

Lourda Sexton says job seekers need to be more innovative. (SUPPLIED)
By David Tusing

A recruitment-focused networking event in Dubai is hoping to give job seekers fresh opportunities and offer employers new ways to find the best talent.

The second Pink Slip Dubai event, to be held tonight at the Radisson Blu Hotel, Dubai Media City, aims to connect UAE employers and recruiters with those seeking new opportunities in a range of industries.

Set in an informal environment, the monthly event will now feature talks by experts to help guide and give advice to out-of-work professionals or those looking for a career change.

Lourda Sexton, Founder of Pink Slip Dubai, said the reason to start the group was borne out of her own frustrations. “I have witnessed first-hand the difficulties faced by job seekers in getting in touch with recruiters and employers and wanted to bridge the gap,” she said.

“Recruiters and employers are bombarded with CVs everyday. This event gives them the platform to move beyond the CV and interact with people and screen potential candidates without ploughing through countless resumes online.”

A former business development professional, Sexton said the first Pink Slip Dubai event held in October received “a pretty good response” from both job seekers and employers.

“I think the main frustration is the difficulty for those looking for jobs to get access to recruiters and employers in the current environment.

“The event makes it easier for them to interact face-to-face with potential employers and make a bigger impact,” said Sexton.

Pink Slip parties are quite popular in the West, with the concept gaining popularity during the 1990s’ dot com crash. It has since seen a worldwide revival in the past year during the global economic crisis.

“In the current environment when jobs are rare, the most important thing is to be innovative in your approach to job search,” said Sexton.

Pre-registration is essential to attend Pink Slip Dubai.

Admission fee is Dh100, inclusive of a complimentary drink. To register, go to www.pinkslipdubai.com.

Source : http://www.business24-7.

நாடகப்பணிக்கு நாகூராரின் பங்களிப்பு

Posted on : 19-02-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , , , ,

0

- அப்துல் கையூம்

நாகூர் என்ற சிறிய வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வரவே மாட்டீர்களா? என் அபிமான வாசகர்கள் பலர் இதே கேள்வியைத்தான் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். நான் பிறந்த மண்ணைப்பற்றி சிந்தித்து சிலாகித்து எழுதுவதற்கு அளப்பரிய விஷயங்கள் அந்த அளவுக்கு மலிந்துக் கிடக்கின்றன.

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு” என்று கவிஞர் வைரமுத்து சொன்னதுபோல, நான் பிறந்த மண், தனக்கென ஒரு  மகரந்த வாசனையை நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. படித்து தெரிந்துக் கொள்ளும் விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதை விட, பரிச்சயமான விஷயங்களை நுகர்ந்து, அனுபவக் கலப்போடு அலசி ஆராய்வது எவ்வளவு சுகந்தம் தெரியுமா?

நாடகப் பணியையும் நாகூரையும் இணைத்துப் பேசுகையில், முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இச்சிற்றூரில் நாடகப் பங்களிப்பு என்ன இருக்க முடியும் என்றுதான் மேலோட்டமாக நம்மை சிந்திக்க வைக்கும். ‘அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் முடியும்?’ என்று நினைக்கக் கூடும்.

இசையும் நாடகமும் இஸ்லாத்துக்கு எதிர்மறையான விஷயங்கள். ஆதலால் இவைகளுக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு இருக்க முடியாது என்ற எண்ணம் பொதுவாகவே நிலவுகிறது. முன்னோடியான காரியங்களை முஸ்லீம்கள் நிகழ்த்தி அமைதிப் புரட்சி செய்திருக்கிறார்கள் என்பது கலப்படமில்லாத உண்மை.

“நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு கவிஞன் அல்லது பாடகன் காலில்தான் விழவேண்டும்” என்ற ஒரு வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஆட்டுக்கால் சூப்பு விற்பவரும், கசாப்புக்கடை வைத்திருப்பவரும், முடிதிருத்துபவரும், சாயம் பூசுபவரும் இரவு நேரமானால் மேடையேறி தன் இனிய குரலால் ரசிகர்களை வசீகரிப்பது இங்கு சகஜமாக இருந்திருக்கிறது. யாரும் அவர் செய்யும் தொழிலை வைத்து எடை போட்டு குறைத்து மதிப்பிடுவதில்லை. மாறாக கலைக்கு அந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் தருபவர்கள் இவ்வூர் மக்கள்.

நாகூர் வழிபாட்டுத்தளம் என்று புகழ் பெற்றிருந்ததால் வடநாட்டு இசைக்கலைஞர்கள் திரண்டு வந்து நாகூர் தர்காவில் ‘கவ்வாலி’ என்ற சூஃபி இசையை அறிமுகம் செய்து, ஹிந்துஸ்தானி இசையின் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுப் போனார்கள். தமிழிசையும்,  வடநாட்டு இசையும் கலந்து இஸ்லாமிய இசை என்னும் ஒரு புதுவடிவத்திற்கு நாகூர் அடிகோலிட்டது. பெரும்பாலான நாகூர்க்காரர்களுக்கு உருதுமொழி தெரியாத போதிலும் கூட விடிய விடிய உடகர்ந்து இசையைக் கேட்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தது அவர்களது இசையார்வத்திற்கும் கலையுணர்வுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றும் கடைவீதியில் சென்று நோட்டம் விட்டால் நுஸ்ரத் பதே அலிகான் ‘கவ்வாலி’ பாடி அசத்திக் கொண்டிருப்பார் அல்லது குலாம் அலி ‘கஸல்’ இசைத்துக்கொண்டு இருப்பார் அல்லது உவைஸ் ரிஸா காதிரி “நாத்” பாடி பரவசப்படுத்திக் கொண்டிருப்பார். (கேசட் கடையில்தான்)

நாகூரார்களின் இயற்றமிழ் மற்றும் இசைத் தமிழ் பங்களிப்பை பிறிதொருமுறை நாம் அலசி ஆராய்வோம். அதற்கென நிறைய பக்கங்கள் ஒதுக்க வேண்டிவரும்.

எத்தனையோ சிற்றூர்கள் தமிழுக்காக தங்களது பங்களிப்பை அளித்திருக்கின்றன. உண்மை இப்படியிருக்க நாகூரை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்ற கேள்வி எழ நியாயமிருக்கிறது.  “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்று சொல்வதைப்போல நாகூர்க்காரர்கள் தாங்கள் பிறந்த ஊரை மெச்சிப் பேச வாய்பிருக்கிறது.

நாகூரைப் பொறுத்தவரை நாகூரின் இலக்கிய மேன்மைகளை அதிகம் பேசுபவர்கள் நாகூர்க்காரர்கள் அல்ல. வெளியூர்க்காரர்கள்தான். “புதையல் மூட்டை மீது அமர்ந்துக் கொண்டே, புதையலைத் தேடுகின்றோம் நாம்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வதைப் போல நாகூரின் பெருமை அவர்களுக்குத் தெரிவதில்லை. நாகூர் வரலாற்றுச் சிறப்பைக் கூறுவதற்கு ஒரு புதுக்கோட்டை ராஜா முஹம்மது தேவைப்படுகிறது.

முத்தமிழ்

வேந்தர்கள் மூவர்: சேர, சோழ, பாண்டியர்; சங்கங்கள் மூன்று: தலைச் சங்கம், இடைச் சங்கம், கடை சங்கம்; குறளின் அதிகாரம் மூன்று: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்; குற்றங்கள் மூன்று: காமம், வெகுளி ,மயக்கம்;  தோஷங்கள் மூன்று: வாதம், பித்தம், சிலேட்டுமம்; முக்கனிகள் மூன்று: மா, பலா வாழை; இப்படி எல்லாவற்றையும் மூன்றாக பிரித்தார்கள் தமிழர்கள்.

த-மி-ழ் : மூன்றெழுத்து. வல்லினத்திலிருந்து ‘த’ என்ற எழுத்தையும், மெல்லினத்திலிருந்து ‘மி’ என்ற எழுத்தையும், இடையினத்திலிருந்து ‘ழ்’ என்ற எழுத்தையும் தேர்ந்தெடுத்து தங்கள் மொழிக்கு பெயர் சூட்டிக் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ் என்பதற்கு ‘இனிமை’ என்ற மூன்றேழுத்து பொருளையும் கொடுத்தார்கள். நா-கூ-ர் என்ற மூன்றெழுத்து ஊர் முத்தமிழுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு அளவிட முடியாது.

இயற்றமிழ், இசைத்தமிழ் , நாடகத்தமிழ் என்று முறையே பிரித்து முத்தமிழ் என்று அழைத்தார்கள் நம் முன்னோர்கள். இம்மூன்றும் ஒன்று மற்றொன்றைச் சான்றது. ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை. இயலின்றி இசையில்லை. இசையின்றி நாடகமில்லை, இயலின்றி நாடகமுமில்லை. இந்த தத்துவத்தை முழுமையாக புரிந்து வைத்திருந்தவர்கள் நாகூரார்தான் என்றால் மிகையாகாது.

“மூன்று தமிழ் சேர்ந்ததுவும் உன்னிடமோ?” என்று வாலி எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல் நாகூருக்கு அட்டகாசமாக பொருந்துகிறது.

நாகூருக்கு “புலவர் கோட்டை” என்ற காரணப் பெயர் ஏற்பட்டதற்கு இந்த வாதம் வலிமை சேர்க்கிறது. மூன்று தமிழையும் ஒருசேர வளர்த்து போற்றியது இந்தச் சிற்றூர் என்றால் அது வியப்பில் ஆழ்த்துகின்ற விஷயம்தானே?

அன்றைய பத்திரிக்கைகள், நூல்கள் சமஸ்கிருத மொழியைக் கலந்து தமிழ் வார்த்தைகளுக்கு சமாதி கட்டிக் கொண்டிருந்த காலங்களில் தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் முன்னின்று நடத்தினார். அவர் நாகையைச் சார்ந்தவராக இருந்ததால் அதன் பாதிப்பு நாகூரிலும் தெரிந்தது. தூயதமிழ் வார்த்தைகள் நாகூர் வாழ் பாமர மக்களின் வாயில் புழக்கத்திலிருப்பது இன்றும் கண்கூடு. மணிப்பிரவாளத் தமிழில் சிக்காமல் தப்பிப் பிழைத்த ஊர் நாகூர் என்று பெருமை பட்டுக் கொள்ளலாம்.

நாகூர் குலாம் காதிர் நாவலர் தனது 74- வது வயதில் 28-01-1908 அன்று உயிர் நீத்தபோது அவரது மாணவராக விளங்கிய மறைமலை அடிகள் கையறு நிலையில் பாடிய பாடல் இங்கு நினைவு கூறத்தக்கது.

“வாடுகின்ற வையத்தின் வகைவிளங்க வசைபடுத்து
பீடுகெழு தமிழ்த் தெய்வ குலாம்காதிர் பெரும்புலவோய்
நீடுவளப் புத்தேளிர் நினைவின் மாசகற்றிவிட
ஓடிமறைந் துற்றாயோ இனியெங்குற் றுணர்வேனோ”

என்ற பாடல் இருவருக்குமிடையே இருந்த நெருக்கத்தை உணர்த்த போதுமானது.

“பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச் சோறென்போம்,
ஆத்திரமாய் மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்,
சொத்தை யுரை பிறர் சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லீம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே!”

என்ற நாகூர் புலவர் ஆபிதீனின் காலத்தால் அழியாத இப்பாடல் நாகூரில் வழக்கிலிருந்த தூயதமிழ் வார்த்தைகளுக்கு ஒரு நற்சான்று.

நாகூர் வளர்த்த நாடகத்துறையை ஆராய்வதற்கு முன்னர் ஒரு முன்சுருக்கம். உலக அளவில் அரேபியர்கள் நாடகத்திற்கு செய்திருக்கும் மகத்தான பங்கு அளவிட முடியாது. தமிழகத்திற்கு அரேபியர்களின் வருகைக்குப் பிறகு ஆயிரத்திற்கு மேற்பட்ட அரபு வார்த்தைகளை தமிழ்மொழி ஏற்றுக் கொண்டுள்ளது. புதுப்புது வார்த்தைகளுக்கு ஒரு மொழி கொடுக்கும் அங்கீகாரம்தான் அம்மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறதென்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.

“ஆயிரத்தொரு இரவுகள்” “அலாவுத்தீனும் அற்புத விளக்கும்” “லைலா-மஜ்னு” “யூசுப்-ஜுலைகா” போன்ற கதைகள், தமிழ் நாடக உலகில் மகத்தான  வரவேற்பைப் பெற்றதற்கு அதில் காணப்பட்ட “Fantasy” எனப்படும் கற்பனையுலக அனுபவமும், பிரமாண்டமும், நவீனத்துவமும் ஒரு முக்கியக் காரணம்.

“குலேபகவாலி” “பாக்தாத் திருடன்” “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” போன்ற படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெற்றமைக்கு காரணம் தமிழுக்குப் புதிதான விஷயங்களை இறக்குமதி செய்ததினால்தான்.

ஜெயமோகன் போன்ற பழுத்த எழுத்தாளர்கள் ‘இஸ்லாமியர்களுக்கு சமகால இலக்கியப் பரிச்சயமில்லை’ என்று கண்மூடித்தனமாக எழுதுவது மிகுந்த வேதனையளிக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை; மரபுக்கவிதை காலம் முதல் புதுக்கவிதை காலம்வரை; சித்தி ஜுனைதா முதல் கவிஞர் சல்மா வரை; இஸ்லாமியர்கள் இலக்கியத்துறையில் ஆர்ப்பாட்டமின்றி முத்திரை பதிந்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.

எம்.ஜி.ஆரின் “குடியிருந்த கோயில்” படம் வந்த காலத்திலேயே  ‘ரோஷனாரா பேகம்’ என்ற முஸ்லீம் பெண் கவிஞர் எழுதிய ‘குங்குமப்பொட்டின் மங்கலம்’ என்ற பாட்டு எல்லோரையும் முணுக்கவைத்தது நமக்கு ஞாபகம் இருக்கும்.

மஞ்சள் மகிமையையும், தாலியின் சிறப்பையும், குங்குமப்பொட்டின் மங்கலத்தையும் ஒரு முஸ்லிம் பெண்மணி பாடினார் என்றுச் சொன்னால் மதநல்லிணக்கத்திற்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

திருவாளர் ஜெயமோகன் தயைகூர்ந்து தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றி வைப்பது நல்லது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். ஒரு சாதாரணச் சிற்றூர் முத்தமிழை எப்படி வளர்த்தது என்பதை, மனதில் இருத்திக் கொண்டால் நாகூரைப் போன்று முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற எத்தனையோ பேரூர்கள் தங்களது பங்களிப்பை எப்படியெல்லாம் செய்திருக்கிறது என்பதை சுலபமாக கணக்கிட்டுக் கொள்ள ஏதுவாகும்.

கி.பி. 17-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் நாகூர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எண்ணிக்கையில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வரலாறு பதிவாகி இருக்கிறது. அத்தனைப்பேரும் காவியம் படைத்தவர்கள். இலக்கியக் கர்த்தாக்கள். தமிழகமெங்குமுள்ள இஸ்லாமிய இலக்கியவாதிகளின் சரணாலயமாக நாகூர் விளங்கியுள்ளது. வண்ணக்கவிகள் பாடுவதில் வல்லவரான ஹமீத் இப்ராஹீமுக்கு “வண்ணக் களஞ்சியப்புலவர்” என்ற சிறப்புப் பெயரை நாகூர் தர்காவில் நடந்த புலவர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.

தொடக்க காலத்தில், தங்களது இயற்பெயரால் எல்லாதரப்பு வாசகர்கள் மனதிலும் நினைவில் நிற்க இயலாது என்ற அபிப்பிராயத்தினாலோ என்னவோ பெரும்பான்மையான இஸ்லாமிய எழுத்தாளர்களை அவரது பெயர்களை வைத்து தனியே இனம்காண முடியவில்லை. ஜெயமோகனின் குற்றச்சாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

ஒருமுறை சுஜாதாவிடம் ஒரு முஸ்லிம் வாசகர் கேள்வி கேட்டிருந்தார்: “அதென்ன, நாவலாசிரியர்கள் நிறைய பேர் பிராமணர்களாகவே இருக்கிறீர்கள்?” அதற்கு சுஜாதாவின் பதில் இருந்தது “அதென்ன, புதுக்கவிஞர்களில் நிறைய பேர் முஸ்லிம்களாகவே இருக்கிறீர்கள்? – இது சுஜாதாவின் பதில். இந்த தகவலும் ஜெயமோகனின் கவனத்திற்காகவே.

எண்ணற்ற இஸ்லாமிய இலக்கியவாதிகள் தங்களது அரபிப்பெயரை தமிழ்ப்படுத்தியும், யாரோ ஒருவருக்கு “தாசன்” ஆகவோ அல்லது தன் துணைவின் பெயரிணைத்து “மணாளன்” என்ற புனைப்பெயரைச் சூட்டியோ தங்களை அடையாளப் படுத்திக் கொண்டதை நாம் பார்க்கிறோம். கவிக்கோ அப்துல் ரகுமான், பேரா. அப்துல் காதர்  போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு.

இன்றளவும் இச்சிற்றூரில் எண்ணற்ற சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், மொழி ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மின்னிதழ் எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் என்று பன்முக படைப்பாளிகள் இலக்கிய உலகில் சுடர்விட்டு வருகிறார்கள். சாரு நிவேதிதா, நாகூர் ரூமி, ஆபிதீன், ஏ.எச்.ஹத்தீப் சாஹிப், கவிஞர் இஜட் ஜபருல்லா, கவிஞர் நாகூர் சலீம், காதர் ஒலி, இதயதாசன் போன்றவர்களை இக்கால கட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

திருமண ‘நாலாம்நீர்’ சடங்குக்கு பரிகாசப் பாடல்கள் என்று எழுதத் தொடங்கி இப்போது வெண்பா எழுதிவரும் கவிஞர்களே இதற்கு உதாரணம். இவர்கள் எந்த பல்கலைக் கழகத்திற்குச் சென்றும் “புலவர்” பட்டம் பெற்றவர்களில்லை என்பது கவனிக்கத்தக்கது. ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள்.

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற வரிசையில் முதலில் நாடகத்துறையில் நாகூர் காட்டிய ஈடுபாட்டை மட்டும் இங்கு ஆராய்வோம்.

என்ன உலகம் இது,…

Posted on : 18-02-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

Posted by ம.பிரகாஷ்.எம்.ஏ.,எம்.ஃபில்., தமிழ் ஆய்வாளன்

தாய்க்கு பின் – தாரம்

தாரத்துக்கு பின்,…

தாய் பாரமா ?!,…

என்ன வினோதமான

உலகம் …

நன்றி : http://thanimaiyilidhayam.blogspot.com/

Quranic Way of Life :: The Best Way to Live life

Posted on : 18-02-2010 | By : mohamedali | In : English(ARTICLES), இஸ்லாம் (ISLAM)

Tags: , , , ,

1

In The name of Allah,The Most Merciful,The Most gracious

Quranic Way of Life :: The Best Way to Live life

Many non-muslim claims Quran is book of terrorism,creates hates.

Geert Wilders,the Dutch MP says its book of violence…nauzbillah…but i’m sure he never read quran and he is Just a Lier….becoz The Facts are totally different,and this post will proove this…InshahAllah….

If You will Apply the guidance of Quran in your life,you can live the Best life,you will be loved by ALLAH (God) and indeed peoples too…

below are the few lessons you can apply in your life to live the BEST LIFE !

Some of the lessons from Quran that apply to our general living!

1. Respect and honor all human beings irrespective of their religion, colour, race, sex, language, status, property, birth, profession/job and so on [17/70]

2.Talk straight, to the point, without any ambiguity or deception [33/70]

3. Choose best words to speak and say them in the best possible way [17/53, 2/83]

4.Do not shout. Speak politely keeping your voice low. [31/19]

5.Always speak the truth. Shun words that are deceitful and ostentatious [22/30]

6. Do not confound truth with falsehood [2/42]

7.Say with your mouth what is in your heart [3/167]

8. Speak in a civilized manner in a language that is recognized by the society and is commonly used [4/5]

9. When you voice an opinion, be just, even if it is against a relative[6/152]

10. Do not be a bragging boaster [31/18]

11. Do not talk, listen or do anything vain [23/3, 28/55]

12. Do not participate in any paltry. If you pass near a futile play, then pass by with dignity [25/72]

13. Do not verge upon any immodesty or lewdness whether surreptitious or overt [6/151].

14. If, unintentionally, any misconduct occurs by you, then correct yourself expeditiously [3/134].

15. Do not be contemptuous or arrogant with people [31/18]

16. Do not walk haughtily or with conceit [17/37, 31/18]

17. Be moderate in thy pace [31/19]

18. Walk with humility and sedateness [25/63]

19. Keep your gazes lowered devoid of any lecherous leers and salacious stares [24/30-31, 40/19].

20. If you do not have complete knowledge about anything, better keep your mouth shut. You might think that speaking about something without full knowledge is a trivial matter. But it might have grave consequences [24/15-16]

21. When you hear something malicious about someone, keep a favorable view about him/her until you attain full knowledge about the matter. Consider others innocent until they are proven guilty with solid and truthful evidence [24/12-13]

22. Ascertain the truth of any news, lest you smite someone in ignorance and afterward repent of what you did[49/6]

23. Do not follow blindly any information of which you have no direct knowledge. (Using your faculties of perception and conception) you must verify it for yourself. In the Court of your Lord, you will be held accountable for your hearing, sight, and the faculty of reasoning [17/36].

24. Never think that you have reached the final stage of knowledge and nobody knows more than yourself. Remember! Above everyone endowed with knowledge is another endowed with more knowledge [12/76]. Even the Prophet [p.b.u.h] was asked to keep praying, “O My Sustainer! Advance
me in knowledge.” [20:114]

A Good Night’s Sleep

Posted on : 16-02-2010 | By : mohamedali | In : English(ARTICLES), இஸ்லாம் (ISLAM)

0

Sheikh Salman al-Oadah

It might seem funny to devote an article to sleeping. But think about it. The average person spends around eight hours of a 24-hour day asleep. That is a third of a person’s lifetime.Allah describes sleep as a blessing from Him. He says in the Qur’an:

And We made your sleep a rest for you.” [Surah al-Naba’: 9]

And remember when He made slumber fall upon you as a reassurance from Him.” [Surah al-Anfal: 11]

It is Allah who has made the night for you, that you may rest therein, and the days as that which helps you to see. Verily Allah is full of grace and bounty to humanity, yet most people give no thanks.” [Surah Ghafir: 61]

Sleep is not only described as a blessing bestowed upon the people, but also as a testament to Allah’s creative ability. Consider where Allah says:

He it is who gathers up your souls at night and knows all that you do by day. Then He raises you up again, so that the term appointed for you (on Earth) may be accomplished. And afterward unto Him is your return. Then He will proclaim to you what you used to do.” [Surah al-An`am: 60]

Allah takes the souls at the time of their death, as well as (the souls of) those who die not, during their sleep. Then He withholds those on whom He has passed the decree of death and sends the others back until an appointed term. Most surely there are signs in this for a people who reflect.” [Surah al-Zumar: 42]

Yes, sleep is His creation, and it has its marvels. A sleeping person drifts away from his consciousness and reason, only to be fully restored to his rational faculties upon waking, refreshed and revitalized.

A sleeping person can see the strangest and most amazing things, things that a waking person could never possibly see. Our ability to dream is another of Allah’s blessings, and another sign of His greatness.

We can appreciate the importance of sleep if we consider that Allah guided His Messenger (peace be upon him) regarding the etiquettes of sleeping, like being in a state of purity and lying on his right side. (As for facing the qiblah, this is actually not established by the Sunnah.)

Likewise, a number of remembrances and supplications are prescribed for sleeping. The Prophet (peace be upon him) instructed `Ali b. Abi Talib and Fatimah to say “Subhan Allah” 33 times, “al-Hamdu Lillah” 33 times, and “Allah Akbar” 33 times. He informed them that doing so will remove their fatigue and revitalize them, and said: “It is better than having a servant.” [Sahih al-Bukhari andSahih Muslim]

Our generation is sometimes accused of being “the sleeping generation”. Most of us certainly do not need to sleep more than we already do. Nevertheless, we must respect our need to sleep by observing the etiquettes and approaches to sleep that will maximise the benefit that we get from it. This, in turn, helps us manage stress and makes our waking hours more productive.

It is a mistake to dismiss the importance of sleep. We all need it, and we all get our daily quota of sleep. Therefore, it is wrong that we make light of the subject of sleep and disdain reading or speaking about it, as if it were something superfluous.

In order to sleep better, we should first relax a bit. We need to unwind from the pressures, worries, and distresses of the day. We need to end the day on a note of forgiveness and with a few moments of tenderness with our families. We need to recite our remembrances of Allah and rid our hearts of all our animosities. We should not lay our heads down on our pillows with resentfulness in our hearts and angry thoughts in our minds. We should make our last thoughts of the day positive ones.

by xeniagreekmuslimah Source

http://xeniagreekmuslimah.wordpress.com

இறைவனுக்குமா இடைத்தரகர்

Posted on : 13-02-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM)

Tags: , , , , , , ,

0

முஸ்லிம்களில் இன்று பலர் தர்ஹாவிற்கு சென்று அங்கு இறந்து போன அவ்லியாக்களிடம் நேரடியாக தங்களுடைய தேவையை கேட்பதும், நேர்ச்சைகள் செய்வதும் அவர்களுக்காக விழா எடுப்பதும் அதற்கு ஆலிம்கள் எனப்படுவோர் இணைவைக்கும் இச்செயலை கண்டிக்காமல் அதனைக் கண்டும் காணாதது போல் இருப்பதும் மிக வேதனையானது.

நபி (ஸல்) கூறினார்கள்,”யஹுதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபித்துள்ளான். அவர்கள் தங்களது நபிமார்களுடைய கபுருகளை வணக்கஸ்தலமாக்கி விட்டனர்.” (புகாரி) நபிமார்களுடைய சமாதிகளையும், வலிமார்களுடைய சமாதிகளையும் கெளரவிக்கும் விஷயத்தில் எல்லை மீறி அவர்களிடம் நம் தேவைகளை துவா செய்தால், அதனால் சமுதாயத்தில் ‘ஷிர்க்’ என்னும் மாபாதகம் நடந்தேரும். மேலும் அல்லாஹ்வின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உள்ளாக நேரிடும் என்பதை உணர்த்தவே மேற்கண்ட ஹதீஸ் அறிவுறுத்துகிறது.

மற்றும் ஒரு ஹதீஸ் “அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பிருந்தோர் அவர்களது நபிமார்களுடைய அவர்களிடையே வாழ்ந்த நல்லடியார்களுடைய அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கினார்கள். ஆனால் நீங்கள் சமாதிகளை வணங்குமிடமாக்காதீர்கள். நிச்சயமாக நான் அதை விளக்கியுள்ளேன். இவ்வாறு கபுருள்ள இடங்களில் இறைவனை தொழவும் கூட நபி(ஸல்) அவர்கள் தடை செய்த நிலையில் உன்னத சமுதாயமென திருமறையால் புகழப்பட்ட முஸ்லிம்கள் இன்று தங்களது தேவைகளை தங்களது இறைவனிடம் கேட்க வேண்டுமென்பதை மறந்து தம்மைப் போன்ற சிருஷ்டிகளின் கல்லறைகளில் மண்டியிட்டு முறையீடு செய்வது பற்றி என்னென்று சொல்வது? அது அநாகரிகமில்லையா? அது இறைவனுக்கு இணை வைக்கும் ‘ஷிர்க்’ ஆகுமா இல்லையா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

நவதந்தைவழி சமூகமும் அரபுலகமும்

Posted on : 13-02-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , , ,

0

by எச்.பீர்முஹம்மது

வரலாறு ஓரே நேரத்தில் விடுதலையாகவும், தேவையாகவும் இருக்கிறது என்றார் கிராம்சி. புராதன சமூகம் அதன்கூட்டுத்தன்மையிலிருந்து தனித்த அமைப்பாக மாறி மாபெரும் உழைப்பு பிரிவினையில் சிதிலமடைந்தது. குடும்பம் என்ற அமைப்பு திடமான பிறகு அங்கு ஆண் முதன்மையானவனாக மாறினான்.இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சியே தந்தை வழி சமூகத்தின் உருவாக்கம். பெண் இரண்டாம் வகைக்கு உட்பட்டாள். ஆணாதிக்க அடக்குமுறை அவள் மீது திணிக்கப்பட்டது. இது பேரியல் மற்றும் நுண்தளங்களின் இயங்கியல் ரீதியான உறவாக இருக்கிறது. பேரியல் தளம் என்பது சமூகம், அரசு, பொருளாதாரம் ஆகியவற்றை குறிக்கிறது. நுண்தளம் என்பது தனி மனிதன் மற்றும் குடும்பத்தை குறிக்கிறது. வரலாற்றின் தொடர்ச்சியில் இந்த அமைப்பு முறை பரிணாமமடைந்து பிரபஞ்சம் முழுமைக்குமாக விரவி பரந்தது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் வித்தியாசமான குண இயல்புகளை அடைந்தது. இது அரபு சமூகத்தில் அடைந்த மாற்றமே பின்னர் இஸ்லாமிய சமூக அமைப்பில் பிரதிபலித்தது. அடிப்படையில் ஓரிறைக்கொள்கை (Monotheism) என்பது தந்தைவழி சமூகத்தின் பிரதியாக்கமே. இதனை குறித்து அரபு சிந்தனையாளர் ஹிசாம் சரபி விரிவாக ஆராய்ந்தார். அவரின் Neopatriarchy: A theory of Distorted arab society இதனை குறித்து விரிவாக ஆராய்ந்தது. தந்தைவழி சமூகம் என்பது பரிணாமமடைந்து அரபு சமூகத்தில் நவ தந்தைவழி சமூகமாக உருமாற்றம் அடைந்தது. சரபி இதை ஐரோப்பிய நவீனத்துவத்தின் தாக்கம் என்கிறார்.

நவீனத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரபு சமூகத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரபியில் இது நஹ்தா என்றழைக்கப்பட்டது. இது அன்றைய அரபு சமூகத்தில் உள்ளக மற்றும் தந்தைவழி சமூகத்தின் வடிவங்களில் மட்டும் மாறுதலை ஏற்படுத்தவில்லை. மாறாக நவீன சமூக கலாசார வடிவம் ஒன்றுக்கு வழி ஏற்படுத்தியது என்கிறார் ஹிசாம் சரபி. பொருளாதய நவீனமயமாக்கல் புதிய கலாசார ஒழுங்கிற்கு வடிவமளித்தது. அது கலாசாரம் மட்டுமின்றி சமூக, பொருளாதார அரங்கிலும் பிரதிபலித்தது. இதன் பரிணாம நீட்சியே நவ தந்தை வழி சமூகம். இது அக மற்றும் புற ஆகிய இரு வடிவங்களில் வெளிப்படுகிறது. இங்கு அடிப்படை கேள்வியே நவீனத்துவத்தின் பிரச்சினையை ஐரோப்பிய ஆதிக்க உலகில் எவ்வாறு எதிர்கொள்வது என்பதே? அது முதலாளித்துவத்துடன் இணைந்தே இருக்கிறது. மார்க்ஸ் முதலாளித்துவத்தின் எதிர் செயல்பாடாக புரட்சியை முன்னிறுத்தினார். மாக்ஸ் வெபர் இதனை அறிவுவாதத்தோடு தொடர்புபடுத்தினார். ஐரோப்பா அல்லாத சமூகங்களில் முதலாளித்துவம் பற்றிய நம்பிக்கை மேற்கண்ட இரு அம்சங்களும் இணைந்த ஒன்றாக இருந்தது. அரபுலகில் முதலாளித்துவம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அறிமுகமானது. அக்காலத்தில் அது ஒரு சுதந்திர முதலாளித்துவத்தின் வளர்ச்சியை நோக்கியதாக இல்லாமல் சிதிலமடைந்த, சார்புநிலை முதலாளித்துவ சமூகத்தின் அரசியல் பொருளாதார நிலைமைகளை உற்பத்தி செய்வதாக அமைந்தது.

அரபு சமூகத்தில் ஐரோப்பிய அறிவொளிகால கட்டத்தின் எதிரொலி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிபகுதியில் ஏற்பட்டது. அரபு அரசியல், சமூக வாழ்க்கை முறைமையில் மேற்கத்திய தாக்கம் முக்கியமானது. இது நவ தந்தை வழி சமூகத்திற்கு சரியான முன்தொடரலை ஏற்படுத்தியது. இந்த தொடரல் மூன்று கட்டங்களை சார்ந்து இருந்தது. ஒன்று துருக்கிய உதுமானிய ஆட்சி காலம். (இது முதல் உலகப்போருடன் முடிவுக்கு வந்தது)ஐரோப்பிய அரசியல் ஆதிக்கம் (இரு உலகப்போர் காலகட்டங்களுக்கு இடைப்பட்டது)இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கட்டம் முதல் தற்போது வரை. நவ தந்தைவழி சமூகத்தை பொறுத்தவரை அரபுலகில் சார்புநிலையான, நவீனமல்லாத சமூக, பொருளாதார அமைப்பை கொண்ட வளர்ச்சியடையாத சமூகமாகவே இன்னும் இருக்கிறது என்கிறார் ஹிசாம் சரபி. இதன் மைய சமூக உளவியல் என்பது குடும்பம் மற்றும் தேசத்தின் மைய உறுப்பினராக தந்தையே (ஆண்)செயல்படுகிறார். இதனடிப்படையில் ஆட்சியாளர் -ஆளப்படுபவர், தந்தை -குழந்தை ஆகியயோர் செங்குத்தான உறவு நிலையின் கீழ் வருகின்றனர். இங்கு சமூகத்திற்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் தந்தையின் விருப்பமே ஒருமையானதாக திணிக்கப்படுகிறது. தந்தையின் விருப்பமே அரசு என்ற புறநிலை சமூகத்திற்குள்ளும் நீள்கிறது. இரு அரசு முறையானது எல்லா நவ தந்தைவழி சமூகத்திலும் வழக்கிலிருக்கிறது. இராணுவ எதேச்சதிகார அரசுகள் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதோடு அதை கண்காணிக்கவும் செய்கின்றன. சிவில் மற்றும் அரசியல் இருத்தலில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு சாதாரண குடிமகன் அரசின் கண்காணிப்புக்குள்ளாகி விர்ச்சுவல் கைதியாக மாறுகிறான்.ஆக நவ தந்தை வழி சமூகத்தின் வெளிப்படையான வடிவம் என்பது பொருளாதய, சட்ட, கலாசார தளங்களில் வலுவாக இருப்பதுடன் அதன் உள்கட்டுமானமானது தந்தை வழி மதிப்பீடுகளை,மத மற்றும் இனக்குழு நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அமைகிறது.