Featured Posts

  • Prev
  • Next

புண்ணிய பூமியில் காசேதான் கடவுளடா!

Posted on : 27-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

1

வாழ்நாள் முழுவதும் கஷ்டப் பட்டு அரசுப் பணியில் வேலை செய்தால் கூட சம்பாதிக்க முடியாத தொகையை ஒரே கையெழுத்தில் பெற்று வந்து இருக்கிறார் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கேதான் தேசாய். என்ன தலை சுற்றுகிறதா? ஆம். சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க ரூ. 30 கோடி வரை லஞ்சமாக பெற்றுக் கொண்டு அனுமதி தந்து இருக்கிறார் தேசாய்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள கியான் சாகர் மருத்துவ கல்லூரியில் 2010 – 2011 வருட மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்க பேரம் பேசி முதல் கட்ட தொகையாக ரூ 2 கோடி லஞ்சம் கேட்டதாக வந்த புகாரை அடுத்து மத்திய புலனாய்வு துறையினர் தேசாய் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் கன்வல்ஜித் சிங் ரூ 2 கோடி பணத்தைக் கேதான் தேசாய்க்குக் கொடுக்கும் போது மத்திய புலனாய்வு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

அதே நிலா

Posted on : 24-04-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

அன்புடன் புகாரி

மூன்றாம் பிறையும்
அமாவாசையும்
நிலவிடமில்லை
நிற்கும் இடத்திலிருந்து
நோக்கும் நிலையில்தான்

பார்வைகளும் கோணங்களும்
முட்டிக்கொள்ளும்போது
எங்கோ தொலைதூரத்தில்
தேம்பி அழுகிறது
உண்மை

நிஜம்
வெளிவராமலேயே
புதைக்கப்படுவதும்
சுகமாகப் பிரசவிக்கப்படுவதும்
ஆழ்ந்த அனுபவத்திடமும்
நம்பிக்கையிடமும் உள்ளது

வாதிடுவதற்காகப்
பேசத் தொடங்கினால்
எதுவும்
பேசப்படப் போவதே இல்லை

பேசுவதற்கே
வாதிடக் கூடிய நிலை
அதனினும் அவலம்

எவ்வழியே யாதறியினும்
முடிவிலா
ஞான அலசலுக்குள்ளாக்குவதே
தெளிந்த நல்லறிவு

Label:

நன்றி :http://anbudanbuhari.blogspot.com/

நீங்கள் நினையுங்கள்; நான் அதன்படி நடக்கிறேன்

Posted on : 24-04-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

” நான் முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்”  என்று இனி யாரும் பஞ்ச் டயலாக் விடத் தேவையே இல்லை. “உங்கள் சிந்தனை எனக்கான கட்டளை பாஸ்” என்று நமது எண்ணங்களைப் படித்து செயலாற்றக் காத்திருக்கிறது ஜப்பான் தயாரிக்கப்போகும் ரோபோட்கள்.

Brain – Machine Interface தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மனித மூளையின் நியுரோ அலைகளையும், அதன் இரத்த ஓட்டத்தையும் வைத்து எண்ணங்களை அளக்கும் கருவியின் மூலம் இதனை சாத்தியமாக்க முயலும் இந்த வகை ரோபோட்கள் அடுத்த பத்தாண்டுகளில் வெளிவந்து விடும் என்று நம்பபப்படுகிறது.

இது மட்டுமல்ல உங்கள் ஒரு விரல் அசைவு இல்லாமலே உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கவும் முழுவதுமாக உங்கள் சிந்தையின் மெல்லாம் கட்டமைக்கப்பட்ட குறுந்தகவல்களை (SMS) அனுப்பும் செல்போன்களும் இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வரவிருக்கின்றன என்று நிக்கி நாளிதழ் தெரிவிக்கிறது.

இது, ஜப்பான் அரசாங்கமும் ஒரு தனியார் நிறுவனமும் கூட்டாக இணையவுள்ள மிகப்பெரும் தயாரிப்புத் துறையாக வரவிருக்கிறது என்றும் அந்த நாளிதழ் தெரிவிக்கிறது. இதுமட்டுமின்றி வாகன ஓட்டி பசியாக உணரும்போது அருகே எங்கெல்லாம் உணவகங்கள் உள்ளன என்று தேடும் மென்பொருட்களும், அறையின் தட்பவெப்ப நிலை அதிகக் குளிராகவோ, சூடாகவோ இருப்பதாக அதிலுள்ள மனிதர் உணர்ந்தாலே அதற்கு தகுந்தாற்போல ஏர் கண்டிஷனரை அட்ஜஸ்ட் செய்திடும் தொழில் நுட்பமும் வர உள்ளதாக நிக்கி நாளிதழ் கட்டியம் கூறுகிறது.

Source :  http://www.inneram.com

நீங்கள் நினையுங்கள்; நான் அதன்படி நடக்கிறேன்

உலகின் மிகப் பெரும் வணிக நிறுவனங்களில் 56 இந்திய நிறுவனங்கள்!

Posted on : 23-04-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

உலகின் வலிமையான முதல் 2000 வணிக நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட 56 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுளளன.

பிரபல அமெரிக்கப் பத்திரிகையான போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை உலகின் வலிமையான முதல் 2000 நிறுவனங்கள் எவை என்பதை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. வணிக நிறுவனங்களின் விற்று வரவு, இலாபம், சொத்து மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.

இந்த ஆய்வுகளின் படி அமெரிக்க வங்கியான ஜே.பி. மார்கன் முதல் இடத்தை வகிக்கிறது. ஜெனரல் எலக்டிரிக்ஸ், பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் எக்ஸன் மொபைல் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.

இந்தியாவின் மிகப் பெரும் வணிக நிறுவனமான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உலக அளவில் 126 ஆவது இடத்தை வகிக்கிறது.

அரசுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 130ஆவது இடத்திலும், எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் (ONGC) 155ஆவது இடத்திலும் இருக்கின்றன.

ஐசிஐசிஐ வங்கி (282), இந்தியன் ஆயில் (313), என்டிபிசி (341), டாடா ஸ்டீல் (345), பார்தி ஏர்டெல் (471), ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா (502), லார்சன் & டூப்ரோ (548) மற்றும் எச்.டி.எஃப்.சி. வங்கி (632) ஆகிய நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

62 நாடுகளின் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் வழக்கம் போலவே இம்முறையும் அமெரிக்க நிறுவனங்களே (515) அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானிய (210) நிறுவனங்கள் உள்ளன. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளின் நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெறுவது கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்து வருகிறது.

சீனாவின் 113 நிறுவனங்களும் இந்தியாவின் 56 நிறுவனங்களும் கனடாவின் 62 நிறுவனங்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Source : http://www.inneram.com/

முல்லாவின் உடைவாள்–நகைச்சுவை

Posted on : 23-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

1

நகைச்சுவை

ஒருவர் நகைச்சுவையை தானே உருவாக்கி சிரித்துக் கொண்டிருக்க முடியாது. சிரிப்பை பகிர்ந்து கொள்ள, பற்ற வைக்க கூட ஒருவர் தேவை

‘கனவுகளுக்கும், நகைச்சுவைகளுக்கும் சில பொதுத் தன்மைகள் இருக்கின்றன. கனவுகள் நமது ஆழ் மனதை தெரிவிக்கும். அது போல, பகுத்தறிவின் பிடி தளர்ந்த நிலையில் வார்த்தை களினால் நெய்யப்படும் நகைச்சுவைகளிலும் நம் ஆழ்மனம் எட்டிப் பார்க்கும்.

முல்லாவின் உடைவாள்

முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.

அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும்.

முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு. முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார்.

அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டீரா ? என்று கேட்டார்.

“கள்வன் என்னை என்ன செய்வான் ? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே ? “ என்றார் முல்லா.

“கள்வனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உம்மிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப் பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய முடியும் ? “ என்று அண்டை வீட்டுக்காரர் கேட்டார். அவர் சொன்னதில் இருந்த உண்மையை முல்லா உணர்ந்து கொண்டார்.

“நீங்கள் சொல்வது சரிதான் நான் என்ன செய்வது ? பிரயாணத்தைத் தவிர்க்க முடியாதே ? “ எனக் கவலையுடன் கூறினார் முல்லா.

“கவலைப்படாதீர்கள் என்னிடம் நல்ல உடைவாள் ஒன்று இருக்கிறது. அதைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். திருடன் எதிர்ப்பட்டால் இந்த உடைவாளைப் பயன்படுத்தி அவனை விரட்டிவிட்டுக் கழுதையைக் காப்பாற்றுங்கள் “ என்ற கூறி உடைவாளையும் அவரிடன் அளித்தார்.

முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார். ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்.

“கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் “ என்று திருடர்கள் கேட்டனர்.

“என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை” என்றார் முல்லா.

கோடை

Posted on : 23-04-2010 | By : mohamedali | In : கவிதைகள் (POEM)

0

பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான்
எரித்து எரித்துக் கருக்கி
எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி
பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல
அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து
இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட
எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான்
மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி http://mrishanshareef.blogspot.com

கோடை

அறிஞர்.அண்ணா கட்டிய வீடு.

Posted on : 22-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

by முனைவர்.இரா.குணசீலன்

அறிஞர்.அண்ணா அவர்களின் மனைவி தன் பேத்தி வாயிலாக அண்ணாவிடம் நாம் வீடுகட்டவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாராம். தன்பேத்தி கொண்டு வந்த கோரிக்கை எழுதிய தாளிலேயே வீட்டின் படத்தை வரைந்து கொடுத்தார் அண்ணா.

வரைபடத்தைப் பார்த்த அவரின் மனைவி, நம் வீட்டின் மாதிரிப்படமா? என்று கேட்க. அதற்கு அண்ணா அவர்கள்,

“நம் வீடே அதுதான்“ என்றாராம்.

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

Posted on : 22-04-2010 | By : mohamedali | In : உடல் நலம் -(Health)

0

குழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.
2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.
3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்
4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்
5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு
6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்
7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்
8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்
9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்
10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்
11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.
12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.
- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியவை

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;

1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.
2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.
3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.
5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள்
மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.

- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.

மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்

தாடி வளர்த்தல்– அபூ முஸ்லிம்

Posted on : 19-04-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM)

0

முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் தாடியை மிகவும் கேவலமான ஒன்றாக கருதிக் கொண்டு (பெண்களைப் போல்) முகத்தை வைத்து கொள்ள விரும்புகின்றனர். இஸ்லாமியர்கள் இந்த நடைமுறையை கைவிட்டு விட்டதால், நீதி மன்றங்களும் கூட தாடி வைக்கத் தடை விதிப்பதை நாம் காண்கிறோம். ஆண்களுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள தாடியைச் சிரைத்து கொள்வது இன்று நாகரீகமாகக் கருதப்படுகின்றது.

மாடர்ன் முஸ்லிம்கள்(?) சிலர் “தாடி என்பது அரபியர்களின் வழக்கம், அந்த அடிப்படையை ஒட்டியே நபியவர்கள் தாடி வைத்திருந்தனர்” அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறத் துவங்கியுள்ளனர். தாடி என்பது அரபியர்களின் வழக்கம் என்பதும் உண்மையே! அபூ ஜஹ்ல் உட்பட பல அரபியர்கள் தாடி வைத்திருந்தனர்.

“மக்கத்துக் காபிர்களின் தலைவன் அபூஜஹ்ல், பத்ரு போர்க் களத்தில் வெட்டப்பட்டுக் கிடக்கும் போது, இப்னு மஸ்ஊது(ரழி) அவர்கள், அபூஜஹ்லின் தாடியைப் பிடித்துக் கொண்டு “நீதான் அபூஜஹ்லா” என்று கேட்டனர். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல் : முஸ்லிம்

இதை சிலர் “தாடி அரபிகளின் வழக்கம்” என்று கூறி முழுக்கச் சிரைத்து விடுகின்றனர். “நாட்டு வழக்கம்” என்ற அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்றைச் செய்தால் அதை நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நபியவர்கள் கோதுமை உணவு உண்டார்கள் என்பதற்காக, நாமும் கோதுமை உண்வு தான் உண்ண வேண்டுமா? என்று அவர்கள் கேட்கின்றனர்.

“நாட்டு வழக்கங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை” என்பது உண்மைதான் என்றாலும், ஒரு வழக்கத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திக் கட்டளை இட்டு விட்டால் அது மார்க்கத்தின் சட்டமாக ஆகி விடும். அதை நாம் பின்பற்றியே ஆக வேண்டும்.

கோதுமை உணவைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீங்களும் கோதுமை உண்ணுங்கள்!” என்று நமக்குத் கட்டளையிடவில்லை. ஆனால் தாடியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அது பற்றிய ஹதீஸ்களை முதலில் நாம் பார்ப்போம்.

“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” (நபிமொழி) அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ

“இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)

“நெருப்பை வணங்குவோருக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)

“அல்லாஹ்வின் தூதரே! தாடியை யூதர்கள் சிரைக்கின்றனர்’ மீசையை(ப் பெரிதாக) வளர்க்கின்றனர்” என்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, “நீங்கள் மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விட்டு விடுங்கள்! யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு நூல் : அஹ்மத்

தாடியை வலியுறுத்தி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவு மிகவும் தெளிவாக உள்ளது. இதில் மாற்றுக் கருத்துக் கொள்ள அறவே இடமில்லை.

மேற்கூறிய நபிமொமிகளை அடிப்படையாகக் கொண்டு, அறிஞர்களில் சிலர் “தாடியை சிறிதளவும் குறைக்கக் கூடாது” என்று கருதுகின்றனர். இன்னும் சில அறிஞர்கள் குறைத்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். இரண்டாவது தரப்பினரின் கருத்தே சரியானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

அன்புள்ள ஆன்மாவே!-9 இல்லறமே நல்லறம்!

Posted on : 15-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

by அன்புடன் மலிக்கா

بسم الله الرحمن الرحيم
திருமணம் தாம்பத்தியம்.[குடும்பவாழ்க்கை]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்புள்ள ஆன்மாவே!
இன்று திருமணம் தாம்பத்தியம் பற்றி!
எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக்கொள்ளவந்துள்ளேன்.

21.நீங்கள் அமைதிபெற
உங்களிருந்தே துணைவியரை
உங்களுக்காகப் படைத்து
உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும்
ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சன்றுகள் உள்ளன.
[அல்குர்ஆன் பாகம்:21---30 அர்ரூம்]

74.எங்கள் இறைவா!
எங்கள் வாழ்க்கைத்துணைகளிலிருந்தும்,மக்ககளிலிருந்தும்,
எங்களுக்கு கண்குளிரச்சியைத் தருவாயாக!
[உன்னை] அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும்
எங்களை ஆக்குவாயாக!
என்று அவர்கள் கூறுகின்றனர்.
[அல்குர்ஆன் பாகம்:19---25.அல் ஃபுர்கான்]

223: உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள்
உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!
உங்களுக்காக[நல்லறங்களை] முற்படுத்துங்கள்!
அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
அவனை சந்திக்கவுள்ளீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்!
நம்பிக்கைக் கொண்டோருக்கு நற்ச்செய்தி கூறுவீராக!
[அல்குர்ஆன் பாகம்:2 அல் பகரா]

ஆன்மாவே!

திருமணமென்பதும் தாம்பத்தியம் என்பதும்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனதார இணைந்து உடலால் ஒன்றுகூடி இவ்வுலக வாழ்க்கையை நிறைவடைச்செய்வதும், தம் மூலம் வாரிசுகளை உருவாக்கி அவர்களையும் நல்வழியில் நடத்திச்செல்வதே!

தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியடைச்செய்வதும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக்கொள்வதும். விட்டுக்கொடுக்கும் வாழ்க்கைக்குள் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நிரந்தரமாக்கிக்கொள்வதுமாகும்

திருமணம் என்ற பந்தத்துக்குள் நுழைத்த அவர்கள். உடலாலும் உள்ளத்தாலும் தீயவைகளின்பக்கம் தங்களை திருப்பிக்கொள்ளாமலிருக்க ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இனிய துணைகளாக மன இச்சைகளுக்கு தாங்களுக்கு தாங்களே மருந்தாக விருந்தாக இல்லறம் நடத்துவதுதான்.

திருமணம் செய்யாமல் தாம்பத்தியம்கூடாது. அது மனிதகுலத்துக்கே அழிவைத்தரும் தனக்குத்தானே துரோகம் செய்துக்கொள்வதுபோலாகும்.
மனிதருக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடுகளை களைவதில் மிகமுக்கியமன ஒன்று இந்த திருமணம்.
அவைகள்தான் தான் இஷ்டப்பட்ட ஒன்றிடம் என்நேரமும் கூடிக்கொள்ளும் அவைகள் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. மற்றவைகளைவிட மனிதனை உயர்ந்தவன். சிறப்பனவன் என்பதற்கு இதைவிட சாட்சிவேண்டுமா.

ஆன்மாவே!
இன்றய உலகம் எந்திரமாக்கப்படுவிட்டது தங்களின் இஷ்டப்படி தீமைகளின் பக்கமே தங்களை செலுத்தவிரும்புகிறார்கள்.
திருமணம் திருமணத்தின்மூலம் கிடைக்கும் தம்பத்தியத்தைவிட
தரம்தாழ்ந்த வெருக்கத்தக்க விசயங்களை தேடிப்போகிறார்கள்.
மதியையும் இழந்து மனக்கட்டுப்பாட்டையும் இழந்து மனம்போனபோக்கில் வாழநினைக்கிறார்கள்
துறவரம் என்றெபயரில் தூயவைகளைத்துறந்து துப்புரவு இல்லாமல் தீயவழியில் நடகிறார்கள்.

திருமணம் மனிதனுக்கு மிகவும் முக்கியம். அவன் நடத்தையாகட்டும். அவன் செயலகட்டும். அவன் ஒழுக்கமாட்டும். அனைத்திலும் நல்லவனாகயிருந்தபோதும்  அவன் ஒரு மனிதனே! அவனுகுள் ஆசாபாசங்கள். ஆயிரம் ஆசைகள்.அத்துமீரத்துடிக்கும் எண்ணங்கள் அத்தனையும் அவனுக்குள்ளே அடக்கவா? இல்லை அப்பப்ப அடுத்தவர்களிடம் தன் அனைத்து தேவைகளையும்
தீர்த்துக்கொள்வதா?.இது மனிதனுக்கு அழகா? மனிதகுணத்துக்கு சிறப்பா?

தன் சொல்லையும், செயலையும். நல்லதையும் கெட்டதையும். அணுஅணுவாய் ரசிக்க, அனுபவிக்க,பங்கேற்க. தனக்கென்று ஒரு சொந்தம் வேண்டும் அன்போடு பார்த்துக்கொள்ள, அனுசரணையோடு நடத்திசெல்ல, அவர்களுக்கென்று ஒருபாதை வகுத்துக்கொள்ள, அதில் நேரானமுறையில் பயணம் செய்ய. இவ்வுலக வாழ்கையிலும் மறு உலக வாழ்க்கையையும் வெற்றிக்கொள்ள. நிச்சியம் திருமணமும், அதனால் கிடைக்கும் தாம்பத்தியமும்தான் மனிதனுக்கு அவசியம் மிகமுக்கியம்.

காணும் இடத்திலெல்லாம் கழிந்துவைக்கும் காகமா? மனிதன்.
இல்லை
நினைத்தபொழுதிலெல்லாம் நினைத்தை நடத்திச்செல்லும் நான்குகால் மிருகமா? இல்லையே!

மனிதன் மதிப்புமிக்கவன்
தனக்கென்று ஒரு கம்பீரம். தனக்கென்று ஒருமரியாதை.
தனக்கென்று ஒரு கெளரவம். தான் எதற்காக படைக்கப்பட்டிருக்கிறோம்.
தன் பிறப்பிற்கான நோக்கமென்ன அதை உணர்ந்தால் நிச்சியம் தன்னை தரமிகுந்த.கண்ணியமான. ஆத்மார்தமான அழகியசெயலான திருமணத்தின் பக்கம் தன்னை இணைத்துக்கொண்டு தாம்பத்தியம் என்னும் உறவுக்குள் உல்லசமாய் உலாவருவான்.

திருமணத்தை ஒதுக்கி துறவரம்! [துறவரம் என்ற பெயரில் நடக்கும் அட்டூளியங்கள் சொல்லித்தெரியவேண்டியதில்லை]அல்லது தன் முன்னேற்றங்களுக்கு தடை!
அல்லது தொண்டுகளுக்கு இடையூறு. என நினைத்து திருமணத்தை வெறுப்பவன். அவன் சாதித்து என்ன? முன்னேறியென்ன? அதை திருமணம் செய்து பல இடைஞ்சலுகளுக்கு மத்தியில், சாதனைகளும் முன்னேற்றங்களும் காண்பவனே முழுமையான வெற்றியடைகிறான்.
எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் கல்லும் முல்லும் குத்தாமல் ஓடும்பாதையில் யாரும் குறுக்கே வராமல் தான்மட்டும் ஓடி நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்பதில் என்ன இருக்கு வெற்றி. அது ஒரு வெற்றியா?

திருமணம் என்பது சுகமான சுமை, அந்த சுமையில் இருக்கும் சுகம் வேறெதிலும் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது நிரந்தரமில்லை. நிச்சியம் இல்லை. கடலும் காட்டாறும் ஒன்றா? உலகில் ஓடும் அத்தனை நீரும் சங்கமம் கடலோடு என்றபோதும். காட்டாற்றில் களங்கம் கண்ட கண்ட அசிங்கங்கள் அதில் கலக்கும். கடல் அப்படியல்ல அசிங்கத்தையும் சுத்தப்படுத்தி அதையும் குடிநீராக்கி உயிர்வாழச்செய்யும் உன்னதம் மிகுந்தது.

ஆகவே ஆன்மாவே!
திருமணமென்னும் தூயதை புணைந்து தாம்பத்தியமென்னும் இனியதில்
இணைந்து. வாரிசுகளென்னும் வளமையை உருவாக்கி நன்மையின்பக்கமே நாம் அனைவரையும் வாழ்வாங்கு வாழ வல்ல ரஹ்மான்[இறைவன்] வழிசெய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன்..

ஆன்மாவே!
இன்று திருமணம் தாம்பத்தியம்பற்றி
அறியத்தந்த இறைவன்
இன்ஷாஅல்லாஹ்
இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான்
என்ற நம்பிக்கையோடும் அதுவரை நம் அனைவரையும் தீமையிலிருந்து நம்மை காத்து ஈருலக்கிலும் நற்பாக்கியங்கள் பெற்றிட இறைவனை வேண்டியவாறு விடை பெறுகிறேன் வஸ்ஸலாம்…

அன்புடன் மலிக்கா

இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவியும் தேடுகிறேன்

நன்றி  : http://fmalikka.blogspot.com/2010/04/9.html
அன்புள்ள ஆன்மாவே!-9 இல்லறமே நல்லறம்!

தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்

Posted on : 14-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , , ,

0

ஒரு வீடு என்பது மண்ணாலும் கற்களாலும் ஆனது. அதுபோல் ஒரு குடும்பம் என்பது அன்பாலும் பாசத்தாலும் ஆனது. அந்தப்பாசப்பிணைப்பு இன்று கொஞ்சங் கொஞ்சமாக மனித மனங்களிலிருந்து கழன்று கொண்டிருக்கிறதோ என்கின்ற ஐயப்பாடு தோன்றுகிறது.
பெற்றோர் அன்பு, சகோதர பாசம் உறவுத்தொடர்புகள் எல்லாம் குறைந்து வருகிறது. ‘வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.’ சில இடங்களில் இன்று இந்த நிலைதான். இந்த நிலையில் தாய் – தந்தை உறவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.

தாய்க்கு முதலிடம்:

‘மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?’ இது நபித்தோழர் ஒருவரின் வினா. ‘தாய்’ என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ‘அடுத்து யார்?’ என மீண்டும் அவர் கேட்க, ‘தாய்’ என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக ‘அடுத்து யார்?’ என்று கேட்டபோதும் ‘தாய்’ என்றே பதில் வந்தது. ‘அடுத்து யார்?’ என நான்காம் முறையாக அவர் கேட்க ‘தந்தை’ என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, – புகாரீ ஷரீஃப்.)
ஒரு குழந்iயின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். காரணம் என்ன? திருக்குர்ஆன் கூறுகிறது: ‘அவனுடைய அன்னை, அவனைச்சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.’ ( அல் குர்ஆன் 46:15).
தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம் மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின் விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய தியாகம்!
குழந்தைக்கு நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம்அல்ல, நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய், தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி இருக்கிறது பாருங்கள்: ‘ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை’. சிலரது வாழ்வில் இது உண்மையுங்கூட!

தாயன்பு:

ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள். அவளிடம் மூன்று பேரித்தங்கனிகளை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனர். தனக்குரியதை சாப்பிட அந்த பெண் எத்தனித்த போது அதையும் தங்களுக்குத் தரக்கேட்டு அந்தக் குழந்தைகள் அடம்பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் மனதைப்பெரிதும் பாதித்தது. இரவில் வீடு திரும்பிய நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த நிகழ்வைக்கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவள் நேரடியாக சுவனம் செல்வாள்’ என்ற சுபச்செய்தியை தெரிவிக்கிறார்கள். ( அப்துல்லா இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு – முஸ்லிம் ).

கண்ணியமான உறையாடல்:
தாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ). பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.
இதுமாதிரி முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப் பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது.
‘பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். ( முஸ்லிம்)

ஐஸ்கிரீமை வறுத்து சாப்பிடலாம் வாங்க!

Posted on : 13-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

1

by
வால்பையன்..

நிஜமாலும்,மெய்யாலும், சத்தியமாலும் இது சீரியஸான பதிவு தான்!

**********************
தற்சமயம் வருத்தபடாத வாலிபர் சங்கத்துல எழுதிகிட்டு இருக்கேன்! இந்த ஒரு மாசம் முழுவதும் அங்கே எழுதனும், அதனால இங்க எழுதுறது குறைவா தான் இருக்கும்!(இல்லாட்டி மட்டும் எழுதி தள்ளிருவனாக்கும்), முதல் முறை வித்தியாசமா சமையல் குறிப்பு! எப்படியிருக்குன்னு செஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க!(கொஞ்சம் வால்தனமா தான் இருக்கும்)

திரும்பவும் சொல்றேன் இது சீரியஸ் மேட்டர்!

தேவையான பொருள்கள்!

தக்கணூண்டு மைதா மாவு!
தக்கணூண்டு கார்ன்ப்ளவர்!

கண்டிப்பா ஐஸ்கீரிம் வேணும்!

அப்புறம் பிரட்ஸ்கிரம்ஸ் ரொம்ப முக்கியம், பேக்கரியில கேட்டாலே கிடைக்கும், இல்லைனா பிரட்டை காய வச்சு உதுர்த்துக்கலாம்!

உப்பு, மொளகாபொடியெலெல்லாம் உங்க வீட்ல இருக்குல்ல, ரைட்டு அதெல்லாம் பத்திரமா அங்கேயே இருக்கட்டும், நமக்கு அதெல்லாம் தேவைப்படாது!

“இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்”…..

Posted on : 12-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…

சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் “How the Bible Led me to Islam” என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.

“நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள்ளே குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).

நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.

அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது.

ஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,

“நீ பைளிளை படித்திருக்கிறாயா”

எனக்கு ஆச்சர்யம், “அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்”

“இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை”

நாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது.  புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.

அவர் தொடர்ந்தார், ”பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை”

அவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.

பிறகு அவர் கூறினார், “நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது?”

சரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று “Genesis” (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.

அதிர்ச்சிகள் பல காத்திருந்தன…

ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள். நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்?

உதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது. லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ……………..
(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).

இந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.

  • நபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா?
  • அவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்?
  • அவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்?

ஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே…இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்?

புரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,

“இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது”…

அதையேத்தான் அவரும் கூறினார். “சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது”.

சரியென்று “New Testament” டை படிக்க ஆரம்பித்தேன்.

இங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.

ஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே “New Testament”ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே? அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்…

என்ன செய்வது? மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.

“இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்”

பிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,

“இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது.  அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)”

என்ன? இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா?


அதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே?


என் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை. பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும்? இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்?  நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.


1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, “நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்” என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.


கிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.



சரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.

அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.

ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், “உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்”.

பகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.

நான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய நல்ல பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.

நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.

பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிரு

க்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.

இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.

பின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், “உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்”

நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? இது என்னுடைய தவறில்லையே…

நாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், ”உன் மூலமாக  கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்”

ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,

“முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற “Moon God” டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்” என்று என்னென்னவோ இருந்தது.      

இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.– அல்ஹாஜ் மர்ஹூம் வாஞ்ஜூர் பீர் முஹம்மது ===இளையாங்குடி சாகிர் உசேன் உசேன் கல்லூரி

Posted on : 11-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , , , ,

0

இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.
மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.
பயோ டேட்டா
வம்சம் : வாஞ்சூர். தந்தை : வாஞ்சூர் முஹம்மது;
தாயார் : பாத்துமுத்து. பிறப்பு : 1914
கல்வி : பர்மா ரங்கூனில். பாசைகள்: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம், மலாய்
தொழில்: தோல் பொருள் தயாரித்தல், விவசாயம், மிளகாய் கமிசன் மண்டி. மின்சார நுனுக்க பொருட்கள், மின்சார சாதனங்கள், சிஙகப்பூரில் பிரிட்டிஷ் ரானூவத்தினர்க்கு சப்ளை கண்ட்ராக்டர்.
பதவிகள்: ஐ.ஏன்.பி. பள்ளிவாசல் டிரஸ்டி, தர்ம ஸ்தாபனங்களில், அரசாங்க ஆலோசணை குழுக்களில், கல்வி ஸ்தாபனங்களில் அங்கத்தினர்.
சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்களில் ஒருவர். கல்லூரியின் முதன் முதல் தாளாளர்.
மரணம்: 26.03.1987
அரசியல்: பர்மா ரங்கூனில் அல்லாமா கரீம் கனி அவர்களுடைய அமைப்புகளில் தொண்டூழியம் செய்தவர். இளையாங்குடியில் இந்திரா காங்கிரசை தோற்றுவித்து அதன் தலைவராக செயலாற்றி அன்னை இந்திரா காந்தியிடமிருந்து பாராட்டு பெற்றவர். இளையாங்குடிக்கு வருகை தரும் தலைவர்களுக்கு தன் வீட்டில் விருந்தளித்து உபசரித்தவர்
வாஞ்ஜூர் பீர் முஹம்மது என்ற பெயர் எல்லா சமூகத்தினரிடையும் இளையாங்குடியில் மட்டுமன்றி சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் எதிரொலித்து வந்த ஒரு பெயராக இருந்து வந்தது.
சிவந்த மேனி, சதா சிரித்த அழகிய முகம், பேச ஆரம்பித்தால் ஒட்டு மொத்த சபையையே கவரும் நாவண்மை.. அஞ்சா நெஞ்சர். தேவை ஏற்பட்டால் சீறும் சிங்கம் போன்ற தன் கண் பார்வையினால் அடிக்காமலே அடக்கும் திறன். ஊர் மக்கள் அனைவரும் குறிப்பாக பெண்களும் கல்வியில் திறன் பெற வேண்டும் எனத்தாங்கொனா தாகம். கடுமையான அயராத உழைப்பாளி.
“வாருங்கள் வாஞ்ஜூர் பீர் முஹம்மதிடம் முடிவு கேட்போம்” என்று உள்ளூரிலும் சுற்று வட்டங்களிலும் எந்த சிக்கலான பிரச்ச்சினைகளிலும் நியாயமான நல்லதொரு முடிவை பெற அணுகப்பட்டவர்.
பெண்களிடம் சீதனம் வாங்குவதையும் சீதனம் கொடுப்பதையும் மிக கடுமையாக எதிர்த்ததுடன் நில்லாது தனது ஆறு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள் திருமணங்களையும் அக்கொள்கைகளிலே நிறைவேற்றியவர்.
தன் பெண்களுக்கு சீதனம் கேட்டவர்களிடம் ‘ என் பெண் வேண்டுமானால் பெண்ணை கட்டிககொள்” பணம் வேண்டுமானால் பணம் தருகிரேன் பணத்தை கட்டிக்கொள்” என முகத்திலடித்தாற்போல் கூறியவர். அத்துடன் சீதனம் கொடுக்கபடும் , வாங்கப்படும் எல்லா திருமணங்களிலும் கலந்து கொள்ளாது ஊரார் பலரின் வெறுப்புக்கஞ்சாது வாழ்ந்தவர்
நியாயத்தை நிலை நிறுத்த போராடும் பொழுது வரும் பகை, துன்பம், இழப்பு அவதூறு, உடன் இருந்தவர்கள்/இருப்பவர்களின் துரோகம் இவைகளை சிறிதும் சட்டை செய்யாமல் தாங்கிக்கொண்டு தனித்து தனி மரமாக கடைசி வரை போராடி வாகை சூடியவர்.
இக்கொள்கயினால் வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் அவர் மீது பகை வளர்த்து வந்தவர்கள் ஏராளம் ஏராளம்.
நிறைய தருவதாக வாக்களித்துவிட்டு இறுதியில் அறவே இல்லாமலோ அல்லாது குறைத்தே நிறைவேற்றும் பழக்கத்தை கைக்கொள்ளாது வாக்க‌ளித்தற்கு மேலாகவே எதையும் வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் நிறைவேற்றி கொடுப்பவர். கொடையாளி.
39 ஆண்டுகளுக்கு முன் இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற‌ எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகிய காலத்தே அதை செயல் படுத்த பல வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் கூடி வராத நிலையில்,
அடுத்தவர்களின் முதுகில் சவாரி செய்யாதவராக‌, வெறும் நாற்காலி மாப்பிள்ளையாக இல்லாமல் இளையாங்குடியில் ஓர் கல்லூரி அமைத்திட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அச்சாணியாக நின்று அதை செயல் வீராராக பொருளும் உழைப்பையும் தந்து நிறைவேற்றிக் கொடுத்த மாமனிதர்.
அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்த பொழுது சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு ” வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி ” என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டவர்.
அவர் மட்டும் விரும்பியிருந்தால் “ஜாகிர் உசேன் கல்லூரி” என்றில்லாமல் “வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி” என பெயரிடப்பட்டிருக்கும்
அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்து

அன்றைய மாநில கவர்னரை அழைத்து அடிக்கல் நாட்டி, தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக‌
யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்து
1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் திறப்பு செய்து அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு அதனை கொண்டே இளையாங்குடி சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,

பட‌ங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.

இரா. நெடுஞ்செழியன் அவர்களால் “கண்டத்துக்கு கண்டம், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர்” ஒரு வாஞ்ஜூர் பீர் முஹம்மது போன்றவர்கள் இருந்தால் உலகில் கல்விக்கு பஞ்சமேயில்லை என புகழாரம் சூட்டப்பட்டு,
முதல் தாளாளராக அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தலைமையில் கல்லூரி நிர்வாகம் தொடங்கியது
அப்பொழுது சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்த கேப்டன் அமீர் அலியை கல்லூரி முதல்வராகவும், மற்றும் பாதுஷா உஸ்மான், கமாலுதீன், ராஜ சேகரன் ஆகிய விரிவுரையாளர்களையும் கொண்ட திறமை மிக்க ஆசிரியர் குழுவை அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நியமித்து கல்லூரியை செயல்படுத்தினார்கள்.
நன்றி மிகுதியால் கல்லூரி முதல்வர் அமீர் அலி அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் குடும்ப போட்டோவை தன் முதல்வர் அறையிலேயே தன் பதவிக்காலம் வரை மாட்டி வைத்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் சாகிர் உசேன் கல்லூரி செயல் பட தொடங்கியது.

பட‌ங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.

அன்று அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நம் இளையாங்குடியில் கல்விக்காக விதைத்த “விதை ” எல்லாம் வல்ல இறையவனின் நல்லருளால் ஆழமாக‌ வேறூன்றி வளர்ச்சி அடைந்து கொண்டே வருவதுடன் இன்றைய இளம் அறிவாளிகளை பல துறைகளிலும் உருவாக்கிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
கல்லூரி திற‌ப்பு விழாவின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்திலும் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் உருவம் அகற்றப்பட்டு பதிலாக பிற நாற்காலி மாப்பிள்ளைகள் உருவப்படங்கள் இணைக்கப்பட்டு கல்லூரி மலர்களில் பிரசுரித்த அறிவு ஜீவிகள், அதை அறிந்தும் அறியாதவர்கள் செயல் பட்ட நிர்வாக செயல் வீரர்கள்!!!
இன்றுவரை திருத்துவதற்கு யாரும் திருந்தவில்லையா?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இதிலிருந்தே இளையாங்குடிக்கு அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது செய்ததெற்கெல்லாம் இளையாங்குடி செய்ததென்ன? செய்து வருவதென்ன? மீதியை நீங்களே விள‌ங்கிக்கொள்ளுங்கள் .
யா அல்லாஹ் ‍ சகலத்தையும் பார்த்தும் ,கேட்டும், மறைவானவைகளை அறிந்தும் கொண்டிருப்பவனே. உன்னிடமே இதை விட்டு விடுகிறோம்.
இளையாங்குடி பெண்கள் மேல் நிலைப்பள்ளி தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கு இடம் கிட்டாமல் இருப்பதை இளையாங்குடி முஸ்லீம் கல்வி டிரஸ்டின் தலைவர் புதுக்குளத்தார் ஜனாப் இபுறாஹிம் அலி அவர்கள், பொருளாளர் ஜனாப் இபுறாஹிம்ஷா அம்பலம் அவர்கள் மூலமாக அறிந்து அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நிதி உதவு அளித்ததுடன் பள்ளிக்காண கட்டிடம் கட்டி முடியும் வரை தன்னுடய சொந்த கட்டிடத்தை இலவசமாக பள்ளி நடத்திக் கொள்ள அளித்தார்கள்.
இளையாங்குடி பெண்கள் மேல் நிலைப்பள்ளி அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது க்கு சொந்தமான 65 சுல்தான் அலாவுதீன் தெருவிலுள்ள கட்டிடத்திலேயே தொடங்கப்பட்டது.
பின் அப்பள்ளி மறைந்த ஹாஜி T.K . ஹமீது சுல்தான் அவர்களின் தாயாரின் நினைவு கட்டிடத்துக்கு இடம் பெய‌ர்ந்தது.
இளையாங்குடியில் 1914 ல் உதித்து, சுய தொழில்களை செய்து வந்தார் .
அப்பொழுதே பணமே குறி என்று இருக்காமல் பொது சேவையிலும் நாட்டமும் ஆர்வமும் உள்ளவராக இருந்தபடியால் அப்பொழுது ரங்கூனில் இருந்த “அல்லாமா அறிஞர் கரீம் கனி” அவர்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு
அவருடைய இயக்கங்களில் தன்னுடைய ஒய்வு நேரங்களை பயன்படுத்திக் கொண்டு, “இனி வரும் காலங்களில் பர்மாவில் வெளி நாட்டவர்கள் யாவரும் துன்பத்திற்கே ஆளாவார்கள் ஆதலால் தென் கிழக்காசியா (சிங்க‌ப்பூர் மலேயா) சென்று தொழில் செய்யுங்கள்” என்ற “அல்லாமா அறிஞர் கரீம் கனி” அவர்களின் கூற்றை மனதில் பதித்துக் கொண்டார்.
தோல் பை தயாரிக்கும் தொழில் இளையாங்குடியில் தொடங்கி அல்லாமா அறிஞர் கரீம் கனி அவர்கள் தென் கிழக்காசியாவுக்கு சென்று தொழில் செய் என்று கூறியிருந்தபடி 1939ல் இரண்டாம் உலகப் போருக்கு முன் சிஙகப்பூருக்கு வந்து வியாபரம் செய்து கொண்டிருக்கும் வேலையில் யுத்தம் மேகம் சூழ்ந்தபடியால்
பெங்களூரில் தொழில் தொடங்கி பின் சென்னையில் ஜூபிடர் லெதர் வொர்க்ஸ் ,7 முத்துமாரி செட்டி தெரு , மற்றும் 154 அங்கப்ப நாயக்கன் தெருவில் ஜூபிடர் லாட்ஜ், என்ற பயணியர் தங்கும் விடுதியையும் தொடங்கி வரும் காலத்தே மீண்டும் அறிஞர் கறீம் கனி அவர்களின் கூற்று படியே மீண்டும் சிங்க‌ப்பூருக்கு திரும்பி தோல் பை வியாபரத்தை PEER LITTLES என்ற பெயரில் தொடங்கி இறையவனின் அருளால் பெரும் செல்வந்தரானார்.
சிங்க‌ப்பூரில் முதலில் சொந்த‌ தொழில் ஆரம்பித்த, சிங்க‌ப்பூரில் முதலில் குடும்பத்துடன் வசித்த ‌இளையாங்குடியார் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது
சிங்க‌ப்பூரில் 1954‍ல் பேன்ஸி ஸ்டோர் வியாபரத்தையும் தொடங்கி பின் அத்துடன் எலக்ட்ரிகல் வியாபாரத்தையும் இணைத்து விரிவாக்கி 1974 வரை பிரிட்டீஷ் முப்படை ராணுவத்தினர்க்கு எலக்ட்ரிகல் குட்ஸ் சப்ளை கண்ட்ராட்ராக.
V.M.PEER MOHAMED = “ YOU NAME IT WE GOT IT
என்ற சிறப்புடன் சிங்கப்பூரில் தொழில் செய்து ஆங்கிலேயர்களிடம் இங்கிலாந்து வரை V.M.PEER MOHAMED என்ற பெயரை எட்ட வைத்தவர்.
சிங்க‌ப்பூரின் அதி உச்ச நீதி மன்றத்தில் தனக்கு நியாயம் கிடைக்காத ஒரு வழக்கை பிரிட்டனுக்கும் அனைத்து காமன்வெல்த் நாடுகளின் உச்ச நீதி மன்றங்களுக்கும் உச்சமான‌ லண்டணில் உள்ள பிரீவி கவுன்சிலுக்கு (PRIVY COUNCIL) எடுத்து சென்று தனக்கு சார்பான தீர்ப்பு பெற்று சாதனை படைத்த‌ ஒரே இளையாங்குடியர்.
பிள்ளைகளை தொழிலில் நன்கு பழக்கப்படுத்திவிட்டவராக 1962 க்கு இளையாங்குடியில் விவசாயத்தை கவனித்துக் கொண்டும், மிளகாய் கமிஷன் மண்டி நடத்திக் கொண்டும் ஊர் நலனில் முழு சிரத்தை எடுத்து செயலாற்றி வந்தார்.
இளையாங்குடியிலேயே விவசாயத்திற்கு வருமான வரி கட்டியவர்கள் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மதுவும் , தூங்காலயன் சிக்கந்தர் அவர்களும் அண்ணாமலை அவர்களும் செட்டியார் தான்.
இராமநாதபுரம் மாவட்டத்திலேயே அரியாண்டிபுரத்தில் 1 ஏக்கருக்கு ஐ.ஆர்.8 சம்பை நெல் சாகுபடியை அதிகமாக உற்பத்தி செய்து காட்டி 1969 அரசாங்க‌ கெஜட்டில் இடம் பெற்றவர்.
அரியாண்டிபுரத்தில் தனக்கு சொந்தமான 2.ஏக்கர் 70 சென்ட் நஞ்சை நிலத்தை அப்பகுதி தாழ்த்தப்ப்ட்ட ஹரிஜனங்களுக்கு அவர்கள் குடியிருப்புக்காக இனாமாக‌ சாசனம் செய்து கொடுத்துவிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் இளையாங்குடி வட்டத்தில் மல்பெரி செடி வளர்த்து அதன் மூலம் பட்டுப்புழு வளர்த்து சென்னை அகில இந்திய வானெலியில் வ‌ய‌லும் வாழ்வும் நிக‌ழ்ச்சியில் பேட்டி காண‌ப்பெற்ற‌வ‌ர்.
இளையாங்குடியில் 1971 ல் முதன் முதலாக இந்திரா காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து இந்திரா காந்தியிடமிருந்து கடித வாயிலாக அங்கீகாரம் பெற்றவர்.

உறவு, பிரிவு மற்றும் வாழ்க்கை !

Posted on : 10-04-2010 | By : mohamedali | In : Photos, கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , ,

1

Posted by எம்.ரிஷான் ஷெரீப்
நேசம் கொண்ட இரு உறவுகளிடையே பிரிவு வருவது எப்பொழுது? ஒருவரிடத்தில் பொய், நம்பிக்கைத் துரோகம், சந்தேகம் மற்றும் சுயநலம் தலைதூக்கும் போது அங்கு பிரிவு நிச்சயமாகி விடுகிறது. இருவருமே இப்படி இருந்தால் பிரிவு அவசியமில்லை எனினும் ஒருவர் மட்டும் இப்படியான தீய நடத்தைகளோடு இருக்கும்போது, இருப்பதை மற்றவர் காண நேரிடும்போது காந்தத்தின் துருவங்கள் போல நேசத்திலிருந்தும் தள்ளப்பட்டு தூரமாகி விடுகின்றனர்.

இனி வாழ்நாள் முழுதும் பிரியவே போவதில்லையென்ற மன உறுதியோடு இணைந்த உள்ளங்களில் கூட ஒருவரிடத்தில் இப்படியான நடத்தைகளைக் காணும்போது, முதலில் விட்டுக் கொடுத்துப் பார்த்து, அந்தக் குறைகளைச் சுட்டிக் காட்டி அவரைத் திருத்த முயற்சிக்கலாம்.  அவர் திருந்துவதற்கான எந்த அறிகுறிகளோ, சாத்தியமோ இல்லையெனத் தெரிகிற போது அவரை விட்டும் விலகிப் போய்விடலாம்.

இன்றைய காலத்தில் பல திருமணங்கள், நட்புகள், நேச உறவுகள் இதனாலேயே உடைந்துபோகின்றன. பல வாழ்க்கைகள் சின்னாபின்னமாகின்றன. ஆகவே ஒரு உறவை, வாழ்க்கை முழுவதற்குமெனத் தேர்ந்தெடுக்கும்போது அவரது குறைகளை முதலில் தெரிந்துகொள்வது சிறந்தது. அவற்றைத் திருத்த முடியுமா என சிந்தித்து உறவைத் தொடர்வது நல்லது. முடியாவிடில் உடனடியாக விட்டுவிலகுவது, பிறகு வரக் கூடிய பல மனச் சிதைவுகளைத் தவிர்க்கச் செய்யும்.

கீழுள்ள படங்களைப் பாருங்கள்.
தூய்மையான அன்புடனான ,நீடித்த உறவுக்கு உடல் குறைபாடென்பது எந்தத் தடையுமில்லையென்பதை இப் படங்கள் உணர்த்தும்.

அஹ்மத் (26 வயது) மற்றும் அவரது மனைவி பாத்திமா (25 வயது) இருவருமே உடலளவில் குறைபாடுகளுடையவர்கள். அஹ்மதுக்கு இரு கைகளும், பாத்திமாவுக்கு இரு கால்களும் பிறவியிலிருந்தே இல்லை.

ஆனால் இருவரும் இணைந்து ஒற்றுமையாக கலை நுணுக்க வேலைப்பாடுகளில் சாதித்திருக்கிறார்கள். உடல் குறைபாடு அவர்களது தன்னம்பிக்கையையும், தைரியத்தையும், ஒற்றுமையையும் சிறிதளவேனும் தகர்க்கவில்லையென்பதை மேலுள்ள படங்கள் உணர்த்தும்.

வாழ்வில் சாதிக்கவேண்டுமெனில் வேறு எதுவுமே தேவையில்லை. முழுமையான நம்பிக்கை, தூய்மையான அன்பு, முயற்சி மட்டுமே போதும். வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காகத் தரும்போது, நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்குக் கொடுங்கள்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்


Posted by எம்.ரிஷான் ஷெரீப்
Source : http://rishansharif.blogspot.com/2010/04/blog-post.html

பய்யினா – தெளிவான அறிமுகம்

Posted on : 09-04-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM), கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , , , ,

0

நியூயார்க் நகரில் படித்துக் கொண்டிருந்த மாணவர் அவர். ஒரு சராசரி அமெரிக்க மாணவனுக்குரிய அனைத்து குணாதிசியங்களையும் உடையவர். மதம், இறைவன், மார்க்கநெறி ஆகியனவற்றை எல்லாம் தத்துவயியல், உளயியல் சார்ந்த அவரது படிப்புகள் அவருக்கு அலட்சியத்தை ஏற்படுத்தியிருந்தன. நாத்திகத்தை எட்டிவிடும் antagonistic நிலையில் அவர் மனநிலை இருந்தது. கடவுள் இல்லவே இல்லை என்பது நாத்திகம் (atheism) என்றால், antagonism என்பதை, “கடவுள் இல்லை என்று சொல்லவில்லையே! இருந்தால் நல்லாயிருக்குமே” என்று சொல்லலாம்.

ஆனால் அவர் பாக்கிஸ்தானிய முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர். பெற்றோருடன் ரியாதில் வசித்தபோது, பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்கள்போல குர்ஆன் ஓதும் அளவு மட்டும் தேறியிருந்தார். ஆனால் அமெரிக்க மாணவ வாழ்க்கை அவரை நேர் எதிர்த் திசையில் பயணிக்க வைத்திருந்தது. அமெரிக்காவிற்கு வரும் முஸ்லிம்களில் குறிப்பிட்ட அளவு மக்கள், முஸ்லிம், இஸ்லாம் என்பதையெல்லாம் ஏதோ ஓர் அசுத்தமான அடையாளமாக நினைப்பது பரவலாக நடைபெறும் ஒன்று. அத்துடன் மட்டும் இல்லாமல், நானும் “உன்னைப் போல் ஒருவன்” என்று அமெரிக்கர்களின் நாகரீகம்தான் உலக உன்னதம் என்று அதில் மூழ்கித் தொலைந்து போவதுதான் கவலைகரமான உண்மை.

நுஃமான் - நூருத்தீன்

அமெரிக்காவில் அதிவேகமாகப் பரவும் வாழ்க்கை நெறியாக இஸ்லாம் திகழ்கிறது. இஸ்லாத்தின் வேதநூலான அல்-குர்ஆனை அதன் மூலமொழியான அரபியில் கற்றுக் கொடுக்கும் சிறந்த முயற்சியில் ‘பய்யினா’ எனும் கல்விக் கூடத்தை நிறுவி, இறைமறைத் தொண்டில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கச் சகோதரர் நுஃமான் அலீ கான் அவர்களை, சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காகக் கடந்த 04.04.2010 அன்று சகோதரர் நூருத்தீன் நேர்கண்டு எழுதியவை இங்கு இடம் பெறுகின்றன.

-o-

தனது கல்விக் கூடத்தைப் பற்றி நுஃமான் விளக்குகிறார்:

இந்த மாணவரும் அப்படியாக மாறி, நண்பர்களுடன் பாடம், படிப்பு, உல்லாசம் என்று சுற்றிக் கொண்டிருந்தார். அப்படியிருந்த அவரை, ஒருநாள் அவர் கல்லூரியில் ஒட்டப்பட்ட சிறு நோட்டீஸ் தோளில் தட்டியது – சரியாகச் சொன்னால் கண்ணில். அது Muslim Students Association எனும் ஒரு முஸ்லிம் அமைப்பு நிகழ்த்தவிருந்த ஒரு சிறு நிகழ்ச்சிக்கான அழைப்பு.

Muslim Students Association, சுருக்கமாக MSA. அமெரிக்காவிலும் கனடாவிலும் கல்லூரி, பல்கலையில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாமிய சேவையாற்ற 1963-இல் துவங்கப்பட்ட அமைப்பு. மிகவும் பயனுள்ள வகையிலும் வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர்தான் அந்த சிறு நோட்டிஸை ஒட்டினார். அவரை நெருங்கிய இந்த மாணவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். “என்னா இது?” என்று கேட்டவருக்கு, “சும்மா … நாங்க உட்கார்ந்து பேசுவோம். வந்து பார். ஜாலியாக இருக்கம்” என்று பதில் சொன்னார் அவர்.

‘இது புதுவகையான பார்ட்டியாக இருக்கும் போலிருக்கிறதே, போய்த்தான் பார்ப்போமே’ என்று ஒரு பெரிய கூட்டத்தை எதிர்பார்த்துச் சென்றார் இவர். போனால், வெகு சில மாணவர்களும் நிறைய பீட்ஸாவும் வரவேற்பு அளித்தன. என்னவோ தெரியவில்லை, அந்த MSA மாணவரை இவருக்குப் பிடித்துப் போனது. அவரிடம் கார் இருந்தது. இவருக்கு எப்பொழுதும் ரயில் பயணம்தான். எனவே அவரை இவர் உபயோகித்துக் கொண்டார். கல்லூரிக்குக் காரில் அழைத்துக் கொண்டு போக-வர. வெறும் பேச்சளவு என்பதைத் தாண்டி நட்பொன்று உருவாக ஆரம்பித்தது.

ஒருநாள் வீடு திரும்பும் வழியில் மக்ரிபு நேரம் நெருங்கிவிட அந்த MSA மாணவர் இவரிடம் மிக பவ்யமாக, “கொஞ்சம் காத்திருக்க முடியுமா? இதோ தொழுதுவிட்டு வந்துவிடுகிறேன்” என்றார். இவருக்கு மகாக் குறுகுறுப்பு ஏற்பட்டு விட்டது. ஏனெனில் இவர் தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. ஒத்தாசையோ, கனிவோ, சரி; தானும் தொழலாமே என்று இணைந்து கொண்டார்.

உடனே, நியூயார்க் வானில் மின்னல் வெட்ட, பெரும் சத்தத்துடன் இடி இடிக்க, பெரும் காற்று ஒன்று வீச என்பதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் மனதில் என்னவோ ஒன்று மட்டும் இவருக்கு நிகழ்ந்தது. பிறகு மெதுமெதுவாய் மாற்றம் அதிகமானது. ரமளான் மாதம் நெருங்கிவிட, பள்ளியில் தராவீஹ் தொழும் அளவிற்கு மாறிப் போனவர், அத்துடன் நில்லாமல், தினமும் இரவில் தொழுகைக்குப் பிறகு மாதம் முழுவதும் நடைபெற்ற குர்ஆன் பயானில் அமரவும் செய்தார். அது குர்ஆனைப் பற்றிய இவரது பார்வையை முற்றிலுமாய் மாற்றிப் போட்டது. நோன்பு முடிந்தது. பயான் பிரசங்கம் செய்த இமாம் Dr. அப்துஸ் ஸமீயிடம் சென்றார் இவர். “என்ன வேண்டும்?” என்றவரிடம் “நான் உம்மைப் போல் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றார் இவர் – நுஃமான் அலீ கான்.

அந்தக் கேள்வி நுஃமானின் வாழ்க்கையை 180 டிகிரி திசை மாற்றியது. காட்டுத்தனமாய், அளவற்ற வெறியில் அரபுமொழி பயில ஆரம்பித்தார் நுஃமான். இதற்கு முன் குர்ஆன் ஓதும் அளவிற்கு மட்டுமே அரபிப் பயிற்சி இருந்தது. இப்பொழுது எப்படியும் அரபு மொழி கற்றறிய வேண்டும், அதுதான் இப்போதைக்குக் கொள்கை என்று அடுத்து வேகமாகக் கழிந்தன அவரது வருடங்கள். வெளிநாடு, அரபு நாடு என்று எங்கும் செல்லாமல் அமெரிக்காவிலேயே இருந்த ஆலிம்களிடமும், அரபு வாத்தியார்களிடமும் அரபிப் பாடங்கள் பயின்றார் நுஃமான்.

இதனிடையே அந்த MSA மாணவர் நுஃமானை அமெரிக்காவில் அழைப்புப் பணியில் இயங்கிக் கொண்டிருந்த மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். நுஃமான் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது, மரியாதையாய் கவனமாய் பெயர் தவிர்க்கிறார். ஆனால் அந்த மாணவரும் அவர் குடும்பத்தாரும் நியூயார்க்கில் அழைப்புப் பணியில் பிரயாசையுடன் செயல்பட்டு வருபவர்கள் என்றும், அதனால் பிரபலமானவர்கள் என்றும் தெரிவிக்கிறார். ஆனால் அந்த மாணவர் நுஃமானிடம் இஸ்லாம் பற்றி வாயால் பேசாமலேயே அழைப்பு நிகழ்த்தியிருக்கிறார்! மேலும், அந்த மாணவர் ஹாபிஸே குர்ஆன் என்று பெருமை தெரிவிக்கிறார் நுஃமான்.

தமிழ்நாடு காவல் துறையில் 1095 நபர்களை SI போஸ்டிங்கானதேர்வு

Posted on : 08-04-2010 | By : mohamedali | In : செய்திகள் (NEWS)

0

பிஸ்மில்லாஹ் !!!

அஸ்ஸலாமு அழைக்கும்

As Received.

Tamilnadu Govt plans to recruit 1095nos Sub-Inspector of Police. 3.5% reservation for Muslims. Kindly forward to all Muslim Brothers to utilise this opportunity.

ORGANISATION

The Tamilnadu Uniformed Service Recruitment Board was constituted to select suitable personnel in various categories for the following departments:-

i) Police Department : a) Sub-Inspectors of Police (Men & Women)

b) Grade II Police Constables (Men & Women)

c) Sub Inspectors (Technical) (Men & Women)

ii) Fire & Rescue Services : Firemen
iii) Prison Department : Jail Warders (Men & Women)

2. The Government constituted the TNUSRB with the following composition:-

i) Chairman : A Police Officer in the rank of DGP either serving or retired
ii) Member : A serving or retired Police Officer in the rank of ADGP
iii) Member Secretary : A Police Officer in the rank of IG of Police

The Board is manned  by a Superintendent of Police, a Deputy Superintendent of Police and a team of  ministerial staff.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

தமிழ்நாடு காவல் துறையில் 1095 நபர்களை SI (சப் இன்ஸ்பெக்டர்) போஸ்டிங்கானதேர்வு செய்யும் பணி

நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, தகுதியுள்ளசகோதரர்கள்

விண்ணப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வயது வரம்பு : 28, கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு டிக்ரி

நம் சமுதாயத்திற்கு 3.5 % இடஒதுக்கீடு உள்ளது என்பதையும்,

அதை சரிவரபயன்படுத்திக்காள்ளுமாறும் மிகவும்

அக்கரையுடன்நினைவூட்டிக்கொள்கிறோம்.

FOR REF :  http://www.tn.gov.in/tnusrb/about_us.htm

உக்கள் துவாவில் இந்த அல்லாஹ்வின் அடியானையும் சேர்த்து கொள்ளுகள்

ஹாஜி முஹம்மது

Nizaar Ahamed.J (  A )  P.T

Dubai U A E

from : MUDUVAI HIDAYATH

முதலாளித்துவமும், கம்யூனிஷமும்!

Posted on : 07-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

1

by வால்பையன்

அமெரிக்காவை கண்டுபிடித்தது அமெரிக்கோ வெஸ்புகியா அல்லது கொலம்பஸ்சா என்ற சந்தேகம் பலரை போலவே எனக்கும் இருக்கிறது, அமெரிக்கா என பெயர் வைத்து இருந்தாலும் அது அவரை பெருமை படுத்தும் வகையில் வைக்கப்பட்டது, உண்மையில் கண்டுபிடித்தது கொலம்பஸ் தான், அதனால் தான் முக்கிய நகரத்துக்கு கொலம்பியா என பெயரிடப்பட்டது என சிலர் கூறுகிறார்கள்! சரி பற்றிய ஆராய்ச்சியை பிறகு பார்ப்போம், நன்றாக வளர்ந்த அமெரிக்கா எப்படி நாசமா போச்சுனு இப்ப பார்ப்போம்!

பல அதிபர்களின் கடுமையான உழைப்பாலும், தொழில் புரட்சியாலும் அமெரிக்காவை வல்லரசாக மாற்றினார்கள், பின்னாளில் வந்தவர்கள் முதலாளிகளுக்கு சொம்பு தூக்கி அமெரிக்காவை அதலபாதாளத்துக்கு தள்ளினார்கள், சில உதாரணங்களோட ஆரம்ப்பிகிறேன்!

சில வருடங்களுக்கு முன் அரசின் கட்டுபாட்டில் இருந்த போக்குவரத்து துறையை ஒரு பிரபல மோட்டார் நிறுவனம் தன் வசமாக்க அரசை அணுகியது, பெட்டி நகர்ந்ததோ அல்லது மூளை மழுங்கிய அமைச்சர்களோ அதை தனியார்துறைக்கு தாரைவார்த்தார்கள்! கைக்கு வந்தவுடன் அவர்கள் செய்த முதல் காரியம் ஒரு ரூட்டில் பத்து பேருந்து சென்றதென்றால் அதை ஐந்தாக குறைப்பது, பின் சுலப தவணையில் அவர்கள் நிறுவனத்துக்கு சொந்தமான காரை விற்பது, வீட்டுக்கு ஒரு கார் என்ற விளம்பரத்தின் மூலம் அவர்களது விற்பனை கனஜோராக நடந்தது, நடுத்தரவர்க்கமும் இமேஜ் கருதி கடன் வாங்கி கார் வாங்கினார்கள், சில வருடங்கள் குடும்பத்துக்கு ஒரு கார் என்ற விகிதத்தில் அமெரிக்காவில் கார் இருந்தது! பேருந்து பெயரளவே இயக்கப்பட்டது, நடுத்தரவர்க்கத்துக்கு கீழுள்ளவர்கள் மேலும் கீழ் சென்றார்கள், அவர்களை பற்றி இன்றளவும் எந்த முதலாளிகளுக்கும் அக்கறையில்லை!

மேலுள்ளது ஒரு சாம்பிள் தான், அதன் பின் தற்போது ஏற்பட்ட பெரும்சரிவுக்கு காரணம் வேறு, நுகர்வோரை மட்டுமே நம்பியிருக்கும் அமெரிக்க முதலாளிகள், அவர்களை கையில் வைத்து கொள்ள அள்ளி அள்ளி கடன் கொடுத்தார்கள், உலகிலேயே அதிக கிரிடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் தான் அதிகம் என்ற கணக்கெடுப்பு சொன்னது, நீங்கள் ஒரு வீடு வாங்க வேண்டுமென்றால் 90% பணம் கடனாக வங்கியே கொடுக்கும், மீதியையும் அவர்கள் வேறிடத்தில் கடனாக பெற்றனர், வெறும் கடனிலேயே வாழ்க்கையை ஓட்டிய அமெரிக்கர்களின் வாங்கும் திறன் அதிக வட்டியால் சரிந்தது, மிக அத்தியாவிசய பொருள் தவிர மற்ற பொருள்களின் விலை சரிந்தது!

மிக முக்கியமாக ரியல் எஸ்டேட், நீங்கள் ஒரு லட்சத்திற்கு வாங்கிய வீடு வெறும் ஐம்பதாயிரத்துக்கு தான் போகுமென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும், கடன் நிலுவையுள்ளவர்கள் தங்கள் வீடுகளை அப்படியே விட்டு விட்டு தங்களது நான்கு சக்கர வாகனங்களில் கிளம்பிவிட்டனர், இன்றும் பல குடும்பங்கள் வாகனங்களிலேயே திரிந்து கொண்டிருப்பதாக தகவல் உண்டு, விலை குறைந்த சொத்தை பறிமுதல் செய்தாலும் கொடுத்த பணத்திற்கு ஈடாகாது வங்கிக்கு, அதனுடன் கடனட்டை மூலம் வராக்கடன்கள் கோடிகணக்கில் ஏறியது, வங்கியில் ஆரம்பித்து ஒன்றுடன் ஒன்று தொடர்பாக அனைத்து தொழில்களும் முடங்கின!

தண்ணீரும் மென்பானங்களும்…!

Posted on : 06-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

Posted by எம்.ரிஷான் ஷெரீப்


மனித வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாதது. உலகில் பாதிப்பேருக்கு நிரந்தரமாக தண்ணீர்ச் சத்து குறைந்து விடுகிறது. அந்த நிலையில் 3% போல சமிபாட்டுச்சக்தியும் பாதிக்கப் படுகிறது.ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். நிறைய நீர் குடித்து வந்தால் முதுகுவலி,மூட்டுவலி இவைகள் நன்றாகக் குறையும்.
நமது உடலில் உள்ள தண்ணீர் அளவு 2% குறைந்தாலும் ஞாபக சக்தி குறைந்துவிடும். கணக்குப் போட,கணனி பார்த்து வேலை செய்யத் தளர்ச்சியாகி விடுகிறது. 5 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் கொலோன் புற்று நோய் 45% குறைகிறது. மார்பகப்புற்று நோய் 79% வீதமும் , சிறுநீரகப் புற்று நோய் 50% வீதமும் குறைக்கிறது என நிபுணர்கள் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இனிப்பான பிரபலமான மென்பானங்கள் குடிப்பதற்கு சுவையாக இருந்தாலும் அவற்றால் தீமைகள் நிறைய உண்டு. கீழ்க்காணும் ஆராய்ச்சிகளை வீட்டினிலேயே செய்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

Posted on : 02-04-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES), வாழ்க்கை(Life and Works)

0

தமிழ்நாட்டுப் பழமொழிகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பே கடவுள்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
அதிக ஓய்வு அதிக வேதனை.
அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
அரசனும் அன்னைக்கு மகனே.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
அஞ்சியவனைப் பேய் அடிக்கும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.

ஆடிப்பட்டம் தேடி விதை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே!
ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
ஆறுவது சினம்.
ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
ஆலை விழுது தாங்கியது போல.
ஆடு பகை குட்டி உறவா?
ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
ஆரம்பத்தில் சூரத்துவம்.
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
ஆற்றுநீர் பித்தம் போக்கும்
குளத்து நீர் வாதம் போக்கும்
சோற்றுநீர் எல்லாம் போக்கும்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.

இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
இளமையில் கல்.
இளங்கன்று பயமறியாது.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
இளமையில் கல். முதுமையில் காக்கும்.
இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி.
இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
இன்பம் – துன்பம் மாறி மாறி வரும்.
இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
இடுக்கன் வருங்கால் நகுக.

ஈ.

ஈகைக்கு எல்லை எதுவுமே இல்லை.
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.

உழுத நிலத்தில் பயிரிடு.
உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று – துன்பம், தீயொழுக்கம், வறுமை.
உழைத்து உண்பதே உணவு.
உப்பிட்டவரை உள்ளவும் நினை.
உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு