Featured Posts

  • Prev
  • Next

நீங்கள் விசாரிக்கபடும் முன் உங்களை நீங்களே விசாரித்து கொள்ளுங்கள் : சுய பரிசோதனை

Posted on : 03-03-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM)

Tags: , , , , ,

0

ஒரு இண்டர்விவ் நாம் போகிறோம் என்று வைத்துகொள்வோம், அங்கே என்னவெல்லாம் கேட்ப்பார்கள் அதெற்கு எப்படி நாம் பதில் சொல்வது, இப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது , அப்படி கேட்டால் எப்படி பதில் சொல்வது என்று பல கேள்விகளை கேட்டுக்கொண்டு முதலில் நாம் நம்மை அதற்காக தயார்படுத்தி கொள்வோம்,அந்த குறிப்பிட்ட வேலைக்கு நம்மை தகுதியான ஆளாக மற்றிகொள்வோம்.

வெற்றி பெற்றால் மிகவும் சந்தோசபடுவோம் ஆனால் தோல்வி என்றால் மனவருத்ததோடு அடுத்த வேலையை தேடி அலைவோம் இது இந்த உலகத்தில் நடக்கும் சங்கதி – ஒன்றை விட்டால் அடுத்தது ..

அதை போல் நாம் ஏற்று இருக்கும் இஸ்லாம் இருக்கிறதே,மறுமைக்கான ஒரு இண்டர்விவை இம்மையில் நமக்கு வைக்கிறது … ஆனால் பாருங்கள் அந்த இண்டர்விக்கு என்ன கேள்வி என்பதையும் , அதற்க்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் சொல்லிகொடுக்கபட்டிருகிறது என்றால் இதை விட சுலபமான இண்டர்விவ் இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன ? நிச்சியமாக இல்லை…..

ஆனால் உலக வாழ்விற்காக காலம் பூராக கஷ்டபட்டு செல்வத்தை
சேர்க்கும் நாம் , மறுமை வாழ்விற்கு சேர்க்க வேண்டிய செல்வத்தில் கோட்டை விட்டு விட்டு ஏழையாக இருகிறோம்.

நிரந்தரமில்லாத இவ்வுலக வாழ்க்கைக்கு நாம் பணம் சம்பாரிக்க வேண்டும் என்பதற்க்காக பிறந்து சில வருடங்களிலே படிக்க ஆரம்பித்து விடுகிறோம். சராசரியாக 20 வருடங்கள் தொடர்து படிக்கிறோம் சிலர் வேளையில் இருந்தாலும் அதிக வருமானத்திற்காக மேலும் படிக்கிறார்கள். ..

உண்மையை சொன்னால் ஒரு இண்டர்விவிர்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட மறுமையில் அல்லாஹ்வின் முன் நிற்பதற்கு கொடுப்பதில்லை சிந்திக்க கடமை பட்டுளோம் .

உங்கள் தாயின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான்.( 16:78)

ஒன்றுமே இல்லாத , படைக்கபடாத நிலையில் இருந்த நமக்கு ” உயிர் கொடுத்து , உணவு கொடுத்து , மனைவி மக்களை கொடுத்து வாழவைத்த நம் இறைவனுக்கு நன்றி செலுத்துவதில் கஞ்சத்தனம் காட்டுகிறோம் , இஸ்லாத்தில் தூய வடிவம் நமக்கு தெரியவில்லை , எப்படி அல்லாஹ்வை பயப்படுவது என்று தெரியவில்லை, ஏதோ முஸ்லிமா பொறந்துட்டோம் தொழுகிறோம் . ஓதுகிறோம் என்று தான் நம்மில் பலரின் நிலைமை

ஆனால் இஸ்லாம் நம்மை ஏதோ அலுவலகத்தில் வேலை செய்யும் பகுதி நேர ஊழியனாக இருக்க சொல்ல வில்லை , மாறாக நீ வாழ்வதே இஸ்லாமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது .

இவ்வுலகில் ஒரு கம்பெனியில் பெரிய பதவி வேண்டும் என்று ஆசை படும் நாம் ,மறுமையில் சொர்க்கத்தில் உயர்ந்த சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசை படுவதில்லை ஏன் ? அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியவில்லை ..

நாம் ஒரு அமலை நன்மை என்று நினைத்து செய்கிறோம், அது யாரோ நமக்கு தெரிந்தவர்கள் இஸ்லாத்தின் பெயரால் சொல்லிகொடுத்தது, சரி என்று செய்து கொண்டு இருக்கிறோம் – மரணம் நமக்கு வருகிறது , நாளை மறுமையில் நிறுத்த படுகிறோம் : மீஜான் திராசு தட்டில் நன்மை மிக குறைவாக இருக்கிறது .., ( நீங்கள் செய்து வந்தது அல்லாஹ் , ரசூல் சொல்லிகொடுகாத செயல் அதலால் நீங்கள் நன்மை என்று எண்ணி செய்த செயல் தூக்கி ஏறிய படுகிறது )

என்ன செய்வீர்கள் ? நஷ்டவாலி யார் ? யாரிடம்போய் நியாயம் கேட்பீர்கள்..?
எந்த ஜாமத்தை அங்கே போய் குறை கூறி கொண்டு இருப்பீர்கள் ..?
காலில் முல் குத்தினால் தாங்க முடியாத நாம் நரகத்தில் …????? நினைத்து பார்க்கவே நடுங்குகிறது …

ஏகஇறைவனின் திருப்பெயரால்…

Posted on : 07-02-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM)

Tags: , , , , , , , ,

0

ஏகஇறைவனின் திருப்பெயரால்…

مَن جَاء بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَمَن جَاء بِالسَّيِّئَةِ فَلاَ يُجْزَى إِلاَّ مِثْلَهَا وَهُمْ لاَ يُظْلَمُونَ 160

6:160. நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.



நன்மைக்குப் பத்து ! தீமைக்கு ஒன்றறே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அளவற்ற அருளாலன், நிகரற்ற அன்புடையோன் என்பதற்கு மேற்காணும் திருமறை வசனம் மிகப் பெரிய சான்றாகும்.

சுவனத்திற்கள் நுழைந்து அதன் எண்ணிலடங்கா இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நன்மைகள் அதிகம் சேர்த்தாக வேண்டும் அதனால் மக்கள் நற்செயல்கள் புரியம் போது அதை ஒன்றுக்குப் பத்தாக்குகிறான் அளவற்ற அருளாலன் அல்லாஹ்.

மக்கள் நற்செயல்கள் புரிந்து நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்காகவும், தீய செயல்களிலிருந்து தங்களை தடுத்துக் கொள்வதற்காகவும் அவரவர்கள் பேசும் மொழியிலிருந்தே தூதர்கள் தேர்வு செய்யப்பட்டு அவ்வப்பொழுது தேவையான விளக்கங்களை ( வேதங்களை ) அனுப்பிக் கொண்டிருந்தான்.

திருமறைக்குர்ஆனுடன் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றது.

முஹம்மது நபி(ஸல்) அவர்களுடன் இறைத்தூதர்களின் வருகை முற்றுப்பெற்றது.

தூதர்கள், மற்றும் வேதங்களின் வருகை முற்றுப் பெற்றதன் பின்னரும் கூட இறுதி தூதர் முஹம்மது நபியின் சமுதாய மக்களில் திருமறைக் குர்ஆனையும், அவர்களின் தூய்மையான வாழ்க்கை வரலாற்றையும் படித்தறிந்தவர்களைக் கொண்டு மேற்காணும் நன்மை, தீமைகளைப் பிறித்தறிவிக்கும் அரும்பணியை மேற்கொள்ளும்படி இறைவன் ஏவினான். 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

நன்மைக்குப் பத்து !

நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்கும் அரும் பணிகளை செய்யக்கூடிய நன்மக்களாலும், அதை ஏற்றுக் கொண்ட நன்மக்களாலும் அவர்களும் மனிதர்கள் என்ற ரீதியில் சில நேரம் தவறிழைத்து விடும் சூழ்நிலைகள் ஏற்பட்டு விடுவதுண்டு அதனால் பதியப்படும் பாவத்தால் அவர்களுடைய முந்தைய தியாகங்கள் அடிபட்டு விடாமல் இருப்பதற்காக அவர்களின் மீது கருணை கொண்ட அல்லாஹ் அதை ஒன்றாக மட்டுமேப் பதியச்செய்தான். 6:160. நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

தீமைக்கு ஒன்று !

நற்காரியங்களுக்கு பதியப்படும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவே தீயகாரியங்களுக்கும் பதியப்பட்டால் மக்களில் யாரும் அதை அநீதி என்று சொல்லப்போவதில்லை ஒன்றுக்கு ஒன்று கணக்கு சரிதான் என்றே கணிப்பர்;. உலகில் நற்காரியங்களை விட தீயகாரியங்களே மிகைத்திருப்பதால் தீமைக்கும் ஒன்றுக்கு பத்து மடங்குகளாக்கினால் தீமைகள், நன்மைகளை முந்தி விடும் அதன் மூலம் சுவனம் தடுக்கப்பட்டால் அது அவனுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அனைத்து மக்களின் மீதும் அளப்பரிய அன்புள்ளம் கொண்ட அல்லாஹ் தொலைநோக்கு சிந்தனையுடன் அதை ஒன்றாக மட்டுமேப பதிகிறான்.

அந்த ஒன்றையும் செயலிழக்கச் செய்வதற்காசலுகை !

நிரந்தரமான சுவனத்தின் இன்பத்தை அனுபவிப்பதற்காக அந்த ஒரு பாவமும் அவருடன் நிரந்தரமாக தங்கி விடாமல் அதையும் செயலிழக்கச் செய்வதற்காக அதன் பின்னர் செய்யும் நன்மையைக் கொண்டு அதை அழித்து விடுவதாகவும் பலஹீன மனிதனின் மீது கருணை கொண்ட நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ் மேலும் ஒரு மகத்தான சலுகையை வழங்குகிறான். …நன்மைகள் தீமைகளை அழித்து விடும். இது படிப்பினை பெறுவோருக்குப் படிப்பினை. 11:114.

அந்த ஒன்றையும் தடுத்துக் கொள்வதற்கான அண்ணலாரின் அழகிய உபதேசங்கள்.

நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! ஒரு தீங்கைத் தொடர்ந்து நல்லதை செய்துகொள்! அந்த நன்மை தீங்கை அழித்துவிடும், மக்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள் என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறியதாக அபூதர் மற்றும் முஆத் இப்னு ஜபல்(ரலி)ஆகியோர் அறிவிக்கின்றனர்.நூல்: திர்மிதி.

மேலே கூறப்பட்ட நபிகளாரின் எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! மக்களிடம் நற்குணத்துடன் நடந்துகொள் என்ற முத்தான இரண்டு உபதேசங்களை யார் தன் வாழ்நாளில் முறையாக கடைப்பிடித்தொழுகுவார்களோ அவர்களால் அதிகபட்சம் தீய காரியங்களிலிருந்து விலகி வாழ முடியும்.

வாழ்க்கையும் வாணிபமும்

Posted on : 19-01-2010 | By : mohamedali | In : இஸ்லாம் (ISLAM), கட்டுரைகள் (ARTICLES)

Tags: , , , , , , ,

0

மௌலானா M.அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th.,

வாழ்க்கையும் வாணிபமும்
அகண்ட உலகையும், விரிந்த வானையும் மனிதனுக்கு வசப்படுத்தி, அவற்றிலிருந்து பெறப்படும் பயன்களைக் கொண்டு செம்மையான ஒரு வாழ்வை மனிதன் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று உயர்மறை ஓதுகிறது.
இந்தப் பரந்த, விரிந்த அடிப்படையில் தான் இஸ்லாமியப் பொருளாதாரமே அமைந்திருக்கிறது.  இவ்வளவு வளமான சம்பத்துகளை வைத்துக் கொண்டு, படைப்புகளில் சிறந்தவனான மனிதன், சுதந்தரமான, ஆண்மையுள்ள, நல்வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் திருமறை அறிவுறுத்துகிறது.
தனி மனிதன் ஒவ்வொருவனுடைய உழைப்பின் குதியையும், மிகுதியையும் வைத்துத்தான் சமுதாய் வளமும், நாட்டின் நலமும் கணக்கிடப்படும்.  சோம்பியிருக்கவோ, பிறர் உழைப்பின் மூலம் உல்லாச வாழ்வு நடத்தவோ, தன் உயர்வையும், ஆண்மையையும் மறந்து மனிதன் கையேந்தி வயிறு வளர்க்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
ஆனால் தன் உய்ர்ப்பின் மூலம் பிறருக்கு உதவி செய்வதை இஸ்லாம் போற்றுகிறது.  பொதுநலத்துக்காப் பொருள் கேட்ட பெருமானாரிடம் தம் உடைமைகள். அனைத்தையும் கொண்டு இருப்போர்க்கு என்ன வைத்திருக்கிறீர்கள்?” என்று நாயகம் (ஸல்)  அபூபக்கர்(ரலி) அவர்களிடம் வினவிய போது, “இறைவனின் அருளையும், அவன் திருத்தூதரின் அன்பையும் வீட்டிலிருப்போருக் காக வைத்திருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள் அந்த தியாகச் செல்வர்.  இந்தத் தன்னல மறுப்பை பெரிதும் பாராட்டினார்கள் நாயகம் (ஸல்). ஆனால் எல்லோரிடத்திலும் இருந்து இத்தகைய தியாகத்தை எம்பெருமானார் எதிர்பார்க்கவும் இல்லை; ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
ஒரு தடவை நாயகத்தின் நல்லறத் தோழர்களில் ஒருவர் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தார்; அவரைக் காணச் சென்றிருந்தார்கள் நபி பெருமானார்.
“இறைவனின் திருத்தூதே! என்னிடம் செல்வம் நிறைந்திருக்கிறது.  இது அனைத்தையும் ஏழைகள் நலனுக்காகக் கொடுத்துவிடப் போகிறேன்,” என்று அத்தோழர் சொன்னார்.
“முதலில் உங்கள் செல்வத்திலிருந்து உங்களுடைய உறவினர்கள் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவதற்கு வழி செய்வது, அவர்கள் பிறர் தயவில் வாழ்க்கை நடத்தவும், இரந்து உண்ணவுமான நிலைக்கு வருவதை விடச் சிறந்தது” என்று கூறினார்கள் நபி பெருமானார்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் ஒரு சீரிய உண்மை புலப்படும்.  அதாவது பிறர்தயவிலோ, உழைப்பிலோ ஒரு மனிதன் வாழ்வதை இஸ்லாம் வெறுக்கிறது.  பிறர் தயவில் வாழ்வதில் ஆண்மையில்லை, பிறர் உழைப்பில் வாழ்வதில் ஆண்மையில்லை, பிறர் உழைப்பில் வாழ்வதில் ஆண்மையில்லை, பிறர் உழைப்பில் வாழ்வதில் மனிதத் தன்மையில்லை.  எனவே ஒவ்வொரு மனிதனும் உழைத்தே ஆக வேண்டும்.  பாடுபட்டே தீர வேண்டும்.  இது இஸ்லாம் கண்ட பொருளாதாரத்தின் அடிப்படை, மனிதகுலத்தின் பொருளாதார வாழ்வுக்கு இதைவிடச் சிறந்த அடிப்படை அமையுமா? எத்தனை நூற்றாண்டுகளானாலும் இந்த அடிப்படை மாற முடியுமா?
பரம்பரைச் சொத்தாக ஒரு மனிதனுக்கு ஏராளமான பொருள் கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம்.  அம்மனிதன் அந்தச் சொத்தைப் பணமாக்கி, அந்த பணத்தை மற்ற மனிதர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கிறான்.  எவ்வளவோ சட்டங்கள் இயற்றப்பட்டும், இப்பொழுதும் அநியாய வட்டிக்குக் கடன் கொடுக்கும் பழக்கம் இந்நாட்டில் அகலவில்லை.  தான் பெறும் அநியாய வட்டியின் மூலம் பரம்பரைச் சொத்தையடைந்த மனிதன் உல்லாசமாக வாழ்கிறான்.  ஆனால் இதற்காக அவன் முன்னோர்கள் உழைத்தார்கள்;; அவர்களும் முறையாகச் சமயமும், சமுதாயமும், சர்க்காரும் விதிக்கும் தர்மங்களையும், ஊர்க் கட்டணங்களையும், வரிகளையும் ஒழுங்காகக் கொடுத்து வந்திருந்தால் தேவைக்கதிகமான சொத்துக்கூட வைத்துச் சென்றிருக்க முடியாது!