மாயவரம் மெது பகோடா
Posted on : 12-08-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)
Tags: சமையல், சிறு குழந்தைகள், திடீரென்று விருந்தினர், மயிலாடுதுறை, ருசித்தும் சாப்பிடுவர்.
0
புவனேஸ்வரி ராமநாதன்.
நம் வீட்டிற்கு திடீரென்று விருந்தினர் வந்து விட்டார்கள் என்றால் எங்கள் மாயவரம் பகுதியில் இந்த மெது பகோடாதான் செய்து தருவார்கள். குழந்தைகள் பள்ளிவிட்டு வந்தவுடன் ஏதாவது நொறுக்குத் தீனி கேட்பார்கள். சரியாக 10 நிமிடத்தில் செய்து கொடுத்து விடலாம். செய்வதும் மிகச் சுலபம். மாலை வேளையில் காபி, டீ, உடன் வைத்து சாப்பிடச் சுவையாக இருக்கும். எங்கள் ஊர் டீக்கடைகளில் இந்த மெது பகோடா ரொம்ப பிரபலம்.
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் : 4
பச்சை மிளகாய் : 2
கடலை மாவு : 100 கிராம்
அரிசி மாவு : 2 ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
பெருங்காயத் தூள் : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
எண்ணெய் : வறுக்கத் தேவையான அளவு
செய்முறை:
பெரியவெங்காயத்தை நீள வாக்கிலும், பச்சை மிளகாயை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், பெருங்காயப்பொடி, உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையில் நறுக்கிய வெங்காயத்தையும், பச்சை மிளகாவையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
சூடான எண்ணையில், கலந்து வைத்த மாவை உதிரி, உதிரியாகப் போடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து இந்த பகோடாவை செய்ய வேண்டும். பகோடா மொறுமொறுவென்று வரும் வரை காத்திராமல்,
முக்கால் பதம் வேகும்போதே எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் பார்ப்பதற்கு பொன் முறுகலாகவும், மெதுவாகவும் இருக்கும். இந்த பகோடா பெரியவர்கள் முதல், சிறு குழந்தைகள் வரை கஷ்டமில்லாமலும், ருசித்தும் சாப்பிடுவர்.
Posted by புவனேஸ்வரி ராமநாதன்
Labels: சமையல், மயிலாடுதுறை
நன்றி : http://maragadham.blogspot.com/2010/08/blog-post_09.html








